Monday , June 9 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா

மதுரையில் அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை சார்பாக மதுரை தீக்கதிர் எதிர்ப்புறம் திருவள்ளுவர் நகரில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை மதுரை ஆதீனம் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்விற்கு அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை மதுரை மாவட்ட தலைவரும், மாநில செயற்குழு உறுப்பினருமான பூசாரி தெய்வேந்திரன் தலைமை வகித்தார்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக அகில பாரத இந்து மகா சபா மாநில இளைஞரணி செயலாளர் எம்.டி ராஜா கலந்து கொண்டு சிறப்பித்தார்.

திருவள்ளுவர் நகரில் இருந்து விநாயகர் சிலை மாசி வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது.

இதில் அர்ச்சகர் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் ராமர், முத்துக்குமார், நீதிராஜன், சங்குமணி, முத்தையா, அஜித்குமார் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES