Monday , July 28 2025
Breaking News
Home / செய்திகள் / நகராட்சி மாநகராட்சி சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம்.!
NKBB Technologies

நகராட்சி மாநகராட்சி சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம்.!

நகராட்சி மாநகராட்சி சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் மாநில தலைவர் பஞ்சவர்ணம் தலைமையில் நடைபெற்றது.

கார்த்திகா வள்ளி சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் முருகானந்தம் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்க தலைவர் மகுடீஸ்வரன், கூட்டுறவு சங்கத் தலைவர் கே.கண்ணன், பொருளாளர் கே.டி. துணைக்கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் இ.ரா தமிழ், அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் சந்திரபோஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முடிவில் இந்திரா நன்றி கூறினார்.

இதுகுறித்து நகராட்சி மாநகராட்சி செவிலியர்கள் சங்க மாநிலத்தலைவர் பஞ்சவர்ணம் கூறுகையில் :-

தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சியில் பணிபுரியும் நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் பகுதி சுகாதார செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

கிராம சுகாதார செவிலியர்களுக்கு வழங்கப்படும் அரசாணையில் நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் பகுதி சுகாதார செவிலியர்களின் பெயர்களும் இடம்பெற்று ஒரே அரசாணையாக வழங்க வேண்டும்.

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் ‌மேலும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் அவர் கூறுகையில், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 17 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் மற்றும் (15/11/2023) அன்று காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என கூறினார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்…

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் மோசடி…

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் இவர்கள் மோசடி செய்தார்கள். நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலும், வீடியோவும் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES