Tuesday , February 3 2026
Breaking News
Home / தமிழகம் / கரூர் மாவட்டம் குளித்தலை பெரிய பாலம் அருகே அரசுப் பேருந்து சிறைபிடிப்பு
NKBB Technologies

கரூர் மாவட்டம் குளித்தலை பெரிய பாலம் அருகே அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

குளித்தலை பயணியை சத்திரம் பேருந்து நிலையத்தில் ஏற்றவில்லை கூடவே கர்ப்பினி பெண் இருந்தும் குளித்தலைக்குள் வராது என திமிராக கன்டக்டர் கூறியதாக தகவல் எனவே பெரியபாலம் அருகே பேருந்தை குளித்தலை இளைஞர் கூட்டமைப்பு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து சிறைபிடித்தோம் என தமிழ்நாடு இளைஞர் கட்சியின் குளித்தலை நகர செயலாளர் திரு கடமை பிரபு அவர்கள் தெரிவித்தார். காவல்துறையினர் மற்றும் கிளை மேலாளர் பேருந்து பணிமனை அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் பேருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

 

கடந்த மாதம் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் திருச்சி லிருந்து கரூர் மார்க்கமாக செல்லும் 1 to 1 தவிர அனைத்து பேருந்துகளும் குளித்தலை நகராட்சி பேருந்து நிலையம் சென்று நின்று செல்லும் என பேருந்து பனிமனை கிளை மேலாளர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் பொதுமக்கள் முன்னிலையில் அறிவிக்கப்பட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் உட்பட பல இடங்களில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES