Friday , January 30 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் ஸ்ரீ அரவிந்தோ மீரா பள்ளியில் பிரமாண்டமாக 100 அடி உயர கம்பத்தில் அமைக்கப்பட்டிருந்த தேசிய கொடியை எஸ்.பி.சிவபிரசாத் ஏற்றி வைத்தார்.
NKBB Technologies

மதுரையில் ஸ்ரீ அரவிந்தோ மீரா பள்ளியில் பிரமாண்டமாக 100 அடி உயர கம்பத்தில் அமைக்கப்பட்டிருந்த தேசிய கொடியை எஸ்.பி.சிவபிரசாத் ஏற்றி வைத்தார்.

மதுரை துவரிமான் அருகே உள்ள ஸ்ரீ அரவிந்தோ மீரா பிரபஞ்சப் பள்ளி, மதுரையில் ஒரு வரலாற்று நிகழ்வை பெருமையுடன் நிகழ்த்தியது.

நகரத்தில் உள்ள பள்ளிகளிலேயே முதல் மற்றும் உயரமான 100 அடி தேசியக் கொடிக்கம்பத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரசாத் ஐ.பி.எஸ் அவர்கள் பிரமாண்டமான 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக மாணவர்களின் கண்கவர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது

இந்நிகழ்வில் பள்ளியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் எம்.சந்திரன் மற்றும் இயக்குனர் எம்.சி. அபிலாஷ், பொருளாளர் திருமதி நிக்கி புளோரா, முதல்வர் திருமதி ஞானசுந்தரி ஆகியோர் பங்கேற்றனர்.
பள்ளியின் இயக்குநர் எம்.சி.அபிலாஷ் வரவேற்புரையாற்றி பேசுகையில் :-மதுரையில் இவ்வளவு உயரமான கொடிக்கம்பத்தை நிறுவிய முதல் நிறுவனம் என்றும் அனைத்து பள்ளிகளுக்கும் முன்னோடி எங்கள் பள்ளி என்று பேசினார்.

இதை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் ஆர்.சிவபிரசாத், ஐ.பி.எஸ் மாணவர்களிடையே பேசுகையில்:-

ஹைதராபாத் போலீஸ் பயிற்சியில் தான் பெற்ற அனுபவங்களிலிருந்து, இந்தியக் கொடியின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். பல்வேறு அரசியல் கட்சிகள், சமூகங்கள் மற்றும் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கொடிகளில் இந்தியக் கொடி வேற்றுமையில் ஒற்றுமையின் அடையாளமாக நின்றது. மூவர்ணக் கொடியானது பல்வேறு கலாச்சாரங்கள், மரபுகள், மொழிகள், சமூகங்கள் மற்றும் மாநிலங்களை ஒன்றிணைக்கிறது என்றும், தேசியக் கொடியின் உணர்வால் பாகுபாடு மற்றும் வேறுபாட்டைத் களைந்திட முடியும். இந்த தொலைநோக்கு பார்வையை இளைய தலைமுறையினர் ஏற்றுக்கொண்டு தேசத்தின் முன்னேற்றத்திற்காக பெருமையுடன் உழைக்க வேண்டும் என பேசினார்.

நிகழ்ச்சியின் முடிவில் முதல்வர் திருமதி. ஞானசுந்தரி நன்றியுரை கூறினார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்….

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES