Monday , June 9 2025
Breaking News
Home / இந்தியா / தந்தை போட்ட திட்டம் .!! துணிச்சலாக எதிர்த்து பள்ளிக்கு சென்ற சுட்டிப் பெண்..!! உதவிய அவசர எண் 112

தந்தை போட்ட திட்டம் .!! துணிச்சலாக எதிர்த்து பள்ளிக்கு சென்ற சுட்டிப் பெண்..!! உதவிய அவசர எண் 112

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 11 வயது சிறுமியை 28 வயது வாலிபருக்கு திருமணம் செய்து வைக்க இருந்த நிலையில்,  போலீசார் அதை தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .  பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே வேலையில் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகள் அதைவிட பன்மடங்காக அதிகரித்துள்ளது . ஒரு புறம் சிறுமிகளை குறிவைத்து ஆங்காங்கே பாலியல் சீண்டல்கள் அரங்கேறி வரும் நிலையில் மறுபுறம் சிறுமிகள் என்றும் பாராமல் திருமணம் என்ற போர்வையில்  குழந்தை திருமணம் செய்து வைத்து அவர்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படும் அவலமும் ஆங்காங்கே பரவி விரவிக்காணப்படுகிறது.

உத்திரப்பிரதேசம் பிகப்பூரை சேர்ந்த கூலி தொழிலாளி  சுரபன் நிஷாத் இவருக்கு 11 வயது மகள் ஒருவர் இருக்கிறார் அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அவர் பயின்று வரும் நிலையில் அந்த சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க அவரது  தந்தை திட்டமிட்டார்.  அதற்காக 28 வயது நிரம்பிய நிஷாத் என்ற நபரை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்த அவர் இருவருக்கும் வரும் 10ம் தேதி திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடுகளை செய்தார்.   ஆனால் சிறுமிக்கு படிப்பில் ஆர்வம் அதிகமாக இருந்ததால் அவர் கல்யாணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.  அதே நேரத்தில் இச்சட்டவிரோத திருமணம் வெளியில் தெரிந்து விட்டால் பிரச்சனையாகிவிடும் என்பதால் மிக ரகசியமாக திருமண ஏற்பாடுகளை அவர்கள் செய்து வந்ததாக தெரிகிறது.  ஆனால் மிகவும் துணிச்சலான அந்த சிறுமி,  112 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைத்து தனக்கு நேர்ந்துவரும்  கொடுமைகள் குறித்து புகார் தெரிவித்துள்ளார்.

அதேபோல்,  தனக்கு 16 வயது மட்டுமே ஆவதால் தன்னை திருமணம் செய்ய பலவந்தப்படுத்தி படுவதாகவும் அவர் அதிகாரிகள் இடத்தில் புகார் கூறினார் எடுத்து குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் மற்றும் போலீசார் சிறுமியின் இல்லத்திற்கு வந்து அவரது பெற்றோர் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் என்று எச்சரித்தனர்  என்னுடைய சிறுமி ஒரு நிற்கக்கூடிய பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப்படுகிறார் அல்லது கண்காணிக்க போலீசார் ஒருவரையும் நினைத்துள்ளனர் தனக்கு நேர்ந்த கொடுமையை மிகத் துணிச்சலாக எதிர்கொண்டு அந்த பிரச்சினையை முடிவெடுத்துள்ள சிறுமியின் முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Bala Trust

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக அண்ணன் திரு கு. செல்வப்பெருந்தகை அவர்களின் ஒரு வருட பணி…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக அண்ணன் திரு கு. செல்வப்பெருந்தகை அவர்கள் பதவியேற்று ஒரு வருடம் முடிந்து இரண்டாவது ஆண்டில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES