Monday , June 9 2025
Breaking News
Home / செய்திகள் / மன்னர் திருமலை நாயக்கரின் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக சுமன் தேவர் மாலை அணிவித்து மரியாதை..!

மன்னர் திருமலை நாயக்கரின் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக சுமன் தேவர் மாலை அணிவித்து மரியாதை..!

மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மஹாலில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் ஆணைக்கிணங்க மாநிலச் செயலாளர் சுமன் தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு வழக்கறிஞர் மகாராஜன் தலைமையின் கீழ் இயங்கி வருகிறது. இதன் மாநிலச் செயலாளராக மதுரையைச் சேர்ந்த சுமன் தேவர் உள்ளார். மேலும் ஜாதி,மத பாகுபாடு இல்லாமல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் அனைத்து இனத்தை சேர்ந்தவர்களும் நிர்வாகிகளாக உள்ளனர்.

காமராஜர், டாக்டர் அம்பேத்கர், வ.உ.சிதம்பரனார் போன்ற தலைவர்களின் சிலைகளுக்கும் மன்னர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் திருமலை நாயக்கர் ஆகியோர் சிலைகளுக்கும் அவர்களது பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் அன்று நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக மாலை அணிவித்து தொடர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மகாலில் உள்ள அவரது சிலைக்கு நிர்வாகிகளுடன் சென்று சுமன் தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அனைத்து இன மக்களையும் நேதாஜி சுபாஷ் சேனை கட்சியில் இணைத்து சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் மற்றும் மாநிலச் செயலாளர் சுமன் தேவர் ஆகியோரை நிர்வாகிகள் பாராட்டி வருகின்றனர்

இந்நிகழ்வில் களஞ்சியம் முருகன், விஜய்,வேல் மற்றும் தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்க மாவட்ட செயலாளர் ஜெகநாதன், இளைஞரணி ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES