Wednesday , March 18 2026
Breaking News
Home / செய்திகள் / தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் தமிழ்நாடு மாநில தலைவராக பிச்சைவேல் நியமனம்..!
NKBB Technologies

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் தமிழ்நாடு மாநில தலைவராக பிச்சைவேல் நியமனம்..!

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பு என்பது இந்தியா முழுவதும் செயல்பட்டு பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறது.இந்த அமைப்பின் தேசிய இயக்குனராக சர்க்கார் பட்னவி உள்ளார்.

இந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் தமிழ்நாடு மற்றும் மதுரையில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர். பசுமையை காக்கும் பொருட்டு மரக்கன்றுகளையும் பல்வேறு பகுதிகளில் நட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பின் தமிழ்நாடு மாநில தலைவராக மதுரையைச் சேர்ந்த முனைவர் பிச்சைவேல் அவர்களை, அமைப்பின் தேசிய இயக்குனர் சர்க்கார் பட்னவி நியமனம் செய்துள்ளார்.

புதிதாக நியமனம் செய்யப்பட்ட முனைவர் பிச்சைவேலுக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES