Friday , December 19 2025
Breaking News
Home / செய்திகள் / தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் சார்பாக சாதனையாளர்களை கவுரவிக்கும் விழா..!
NKBB Technologies

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் சார்பாக சாதனையாளர்களை கவுரவிக்கும் விழா..!

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் சார்பாக புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மதுரை அரசரடியில் உள்ள தனியார் அரங்கில் மாநில தலைவர் முனைவர் பிச்சைவேல் தலைமையிலும்,மாநில துணைத்தலைவர் ஆசிரியர் மாணிக்கராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது.

மாநில பொதுச்செயலாளர் உமா மகேஸ்வரி, மகளிரணி பிரிவு மாவட்ட தலைவர் சங்கரேஸ்வரி, மகளிரணி பிரிவு மாவட்ட செயலாளர் விஜயா ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தொழிலதிபர் ராஜ்குமார், சாதனை படைத்தவர்களுக்கு கேடயம் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.

அரசு வழக்கறிஞர் கணேஷ்பாபு புதிய நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கி வாழ்த்தினார்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரும்,மாநில கண்காணிப்பாளருமான ஆர்.ராமன் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட தலைவர் முருகேசபாண்டியன் நன்றி கூறினார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ

கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES