Saturday , May 31 2025
Breaking News
Home / செய்திகள் / தோல்விக்கு காரணம் இதுதான்: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்!

தோல்விக்கு காரணம் இதுதான்: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்!

தோல்விக்கு காரணம் இதுதான்: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்!

ஹைதராபாத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சென்னை முதலில் பேட் செய்தது.

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 18.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சிஎஸ்கே அணிக்கு இந்த ஐபிஎல் தொடரில் இது 2வது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.வாழ்க்கையின் ஆட்ட நாயகன்: பிரீத்தி ஜிந்தாவின் அறிவுரை!

தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறியதாவது:

உண்மையை சொல்ல வேண்டுமானால் இது மிகவும் மெதுவான பிட்ச். நாங்கள் முதலில் நன்றாகவே பேட்டிங் செய்தோம். ஆனால் எதிரணியினர் 2ஆம் பாதியில் சிறப்பாக பந்து வீசினார்கள். மேலும் பவர்பிளேவில் அதிகமாக ரன்களை குவித்தார்கள். நாங்கள் ஒரு கேட்ச் தவறவிட்டோம், ஒரு ஓவரில் அதிகமான ரன்களை வழங்கி விட்டொம். 170-175 ரன்கள் அடித்திருந்தால் நல்ல டார்கெட்டாக இருந்திருக்கும். இறுதியில் சிறிது ஈரப்பதம் தென்பட்டது. இருப்பினும் 19வது ஓவர் வரைக்கும் எடுத்து சென்றது சிறப்பன விசயமே. மொயின் அலி சிறப்பாக பந்து வீசினார். 15-16ஆவது ஓவரிலும் அவர் வீசிய பந்துகள் திரும்பியது. கருப்பு நிற ஆடுகளம் மெதுவாக இருக்குமென கணித்தோம்;ஆனால் அது மிக மெதுவாக இருந்தது.

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வரவனை கிராமத்திற்குட்பட்ட பாப்பனம்பட்டியில் உள்ள பாப்பான்குளத்தில் குளம் தூர் வாரும் திருவிழா…

வரவனை கிரமத்திற்குட்பட்ட 21 குளங்களையும் தூர் வார முடிவெடுத்து எயிட் இந்தியா மற்றும் கைஃபா அமைப்பின் உதவியுடன் பசுமைக்குடி தூர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES