Saturday , January 31 2026
Breaking News
Home / செய்திகள் / வட்டக் கழக செயலாளர் பழங்காநத்தம் ராஜாராம் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
NKBB Technologies

வட்டக் கழக செயலாளர் பழங்காநத்தம் ராஜாராம் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

மதுரை, ஏப்ரல்.28

தமிழகத்தில் கடுமையான கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மக்கள் நீர்மோர், இளநீர் குளிர்ச்சியூட்டும் பழ ஜூஸ்களை அருந்த வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

எனவே வெயிலில் இருந்து மதுரை மக்களை காக்கும் விதமாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் அதிமுக 71-வது வட்டக் கழக செயலாளர் பழங்காநத்தம் ராஜாராம் ஏற்பாட்டில், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, தர்பூசணி பழம், வெள்ளரிக்காய், தண்ணீர் பாட்டில்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், பா.குமார், அண்ணாதுரை, பரவை ராஜா, வி.பி.ஆர் செல்வகுமார், சக்திவிநாயகர் பாண்டியன்,எஸ்.எம்.டி ரவி, ராஜா சீனிவாசன்,71 வது வட்ட அவைத் தலைவர் பி.எம்.பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES