Sunday , February 1 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் நாயுடு சேம்பர் ஆஃப் காமர்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சார்பாக யுகாதி குடும்ப விழா..
NKBB Technologies

மதுரையில் நாயுடு சேம்பர் ஆஃப் காமர்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சார்பாக யுகாதி குடும்ப விழா..

மதுரையில் நாயுடு சேம்பர் ஆஃப் காமர்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி இணைந்து நடத்திய 4-ஆம் ஆண்டு தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதி குடும்ப விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சேர்மன் இராஜகோபால் நாயுடு தலைமை வகித்தார்.நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை விழா குழு உதவி தலைவர் ஜி.வி சௌந்தரராஜன் நாயுடு வரவேற்று பேசினார்.

உதவித்தலைவர்கள் ஆர்.ஜெயராமன் நாயுடு, லயன் ராஜேந்திரபாபு நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர்கள் ஜெகன்மோகன் நாயுடு,
விஜயராகவன் நாயுடு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் நபார்டு வங்கி தனி இயக்குனர் பேராசிரியர் இராம.சீனிவாசன் மற்றும் முனைவர் ஜகந்நாத் நாயுடு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு
மன்னர் கல்லூரி பொருளாளர் ஆழ்வார்சாமி நாயுடு, சேம்பர் ஆஃப் காமர்ஸ் பொருளாளர் பாஸ்கரன் நாயுடு, இணைச் செயலாளர் சுப்புராஜ் ஆகியோர் சால்வை அணிவித்து கௌரவித்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் வேணுகோபால் நன்றி கூறினார்.

விழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு நாயுடு சேம்பர் ஆஃப் காமர்ஸ் உறுப்பினர் பொம்மை ரவிச்சந்திரன் பொது அறிவு வினா புத்தகம், சித்த மருத்துவ குறிப்புகள் அடங்கிய புத்தகம், திருக்குறள் உள்ளிட்ட புத்தகங்களை வழங்கினார்.
மேலும் பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் விழா குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, சௌந்தர்ராஜன், மோகன்ராஜா, புருஷோத்தமன், சங்கர் கணேஷ், செல்வராஜ், சௌரிராஜன், வெங்கடேசன், சுரேஷ்பாபு, சந்திரன், வெங்கட ஆனந்த் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES