Monday , June 9 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பாக செய்தியாளர்கள் கவுரவிப்பு..!

மதுரையில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பாக செய்தியாளர்கள் கவுரவிப்பு..!

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக மே 3 உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநில தலைவர் சரவணன் வழிகாட்டுதலின்படி மதுரையில் ஊடகம் மற்றும் பத்திரிகை துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் செய்தியாளர்கள் மற்றும் மருத்துவர் ஆசிரியர் சமூக சேவை உள்ளிட்ட பணிகளில் தொடர்ந்து களப்பணியாற்றி வருபவர்களை ஊக்குவிக்கும் விதமாக பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச் சங்கம் மதுரை மாவட்ட தலைவர் கணேஷ் தலைமையில், மாவட்டச் செயலாளர் மாயகிருஷ்ணன் முன்னிலையில் துணைத் தலைவர்கள் சிவ கதிரவன், பாலா, இணைச் செயலாளர்கள் பிரேம், சிதம்பரம், செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடேஷ், கார்த்திக், சுரேஷ் உறுப்பினர்கள் பிரபாகரன், சமய செல்வம், பழனிக்குமார், பாலா, ராஜ்குமார், சந்திரசேகரன் உள்ளிட்ட செய்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி இறுதியில் பொருளாளர் கவிதா அனைவருக்கும் நன்றி கூறினார் மேலும் சிறப்பாக தங்கள் துறையில் களப்பணியாற்றிய சுகாதார உரிமைகள் மற்றும் ஆர்டிஐ ஆர்வலர் வெரோனிகா மேரி, அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் தென்னவன், மதுரை மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் கதிரியக்க இயற்பியல் துறை டாக்டர். செந்தில்குமார் மற்றும் செய்தியாளர்கள் எம்.எஸ்.பி.தம்பி, அழகர்சாமி, பழனிக்குமார் ஊடகச் செய்தியாளர்கள் கூடலிங்கம், சல்மான் பாரிஸ், பாலமுருகன், ராஜ்குமார், ராமலிங்கம் உள்ளிட்டோருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் மெடல் அணிவித்து கௌரவிக்கப்பட்டது

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES