Thursday , December 18 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் தமிழ்நாடு சமூகநலத்துறை கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில பேரவைக் கூட்டம்..!
NKBB Technologies

மதுரையில் தமிழ்நாடு சமூகநலத்துறை கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில பேரவைக் கூட்டம்..!

மதுரையில் தமிழ்நாடு சமூகநலத்துறை கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில பேரவைக் கூட்டம் மாநில தலைவர் இ.சுரேஷ் தலைமையிலும், மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையிலும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்க மாநில செய்தி தொடர்பு செயலாளர் ஆ.ம.ஆசிரிய தேவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தையல் தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பணியாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு சட்டப்பூர்வமான தீர்வுகள் பற்றி பேசினார்.

இந்நிகழ்வில் தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் சீருடை தைக்கும் பணியினை எப்போதும் போல் சமூகநலத்துறை கூட்டுறவு சங்கங்களுக்கே வழங்கி தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களின் வாழாவாதாரம் காக்கப்பட வேண்டும்.

தையல் கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்ட முடிவில் மாநில துணைச் செயலாளர் திருமதி நிர்மலா தேவி நன்றி கூறினார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ

கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES