Sunday , February 1 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கம் சார்பாக 8-ஆம் ஆண்டு மற்றும் மே தின விழா..!
NKBB Technologies

மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கம் சார்பாக 8-ஆம் ஆண்டு மற்றும் மே தின விழா..!

மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக 8-ஆம் ஆண்டு விழா மற்றும் மே தின விழா ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் விழா மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள மடீட்சியா அரங்கத்தில் சங்கத்தலைவர் சி.எம்.மகுடீஸ்வரன் தலைமையிலும், செயலாளர் கே.கண்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது.

விழாவிற்கு வருகை தந்தவர்களை சங்க பொருளாளர் கே.டி.துரைக்கண்ணன் வரவேற்று பேசினார்.

மேலும் சங்கத்தின் சார்பாக நடந்த கபடி, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்,சிறுமி மற்றும் பணியாளர்களுக்கு மண்டலம் -1
உதவி ஆணையாளர் பார்த்தசாரதி மற்றும் தலைமைச் செயலக சங்கத் தலைவர் கு.வெங்கடேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஆ.செல்வம், நகர் நல அலுவலர்
டாக்டர்.வினோத்குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

இந்நிகழ்வில் சி.ஐ.டி.யு பொதுச் செயலாளர் எம். பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்க மாநில பொருளாளர் இ.ரா.தமிழ், நகர சுகாதார செவிலியர் சங்க மாநில தலைவர்
எம்.பஞ்சவர்ணம், மாநகராட்சி அனைத்து பணியாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குரு பார்த்தசாரதி, நிரந்தர ஓட்டுனர் சங்கத் தலைவர் எம்.சரவணன், வருவாய் உதவியாளர் சங்கத்தின் பொருளாளர் கே.ஆறுமுகம், துப்பரவு மேற்பார்வையாளர் சங்கத்தின் செயலாளர் கே.கிருஷ்ணன், பொறியியல் பிரிவு சங்கத்தின் முன்னாள் தலைவர் தனசேகரன், மற்றும் உதவி பொறியாளர்கள் ஆர்.சங்கிலி ராஜன், கே.எஸ்.பாஸ்கரபாண்டியன், இளநிலை பொறியாளர்கள்
எஸ்.பாபு, ஏ.முருகன்,என். ரெங்கநாதன்,
பி.காவேரி ரங்கன்,எம்.வீரப்பரணி தாஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பொறியியல் பிரிவு பணியாளர் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மண்டல தலைவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் சங்கத் துணைத் தலைவர் எ.துரைராஜ், துணைச் செயலாளர் பி.முத்துக்குமார் ஆகியோர் நன்றி கூறினர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES