Monday , June 9 2025
Breaking News
Home / Politics / கரும்பு விவசாயிகள் சமூதாய நலக்கூடம் விழுப்புரம் மத்தி மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம்…

கரும்பு விவசாயிகள் சமூதாய நலக்கூடம் விழுப்புரம் மத்தி மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம்…

விழுப்புரம், கரும்பு விவசாயிகள் சமூதாய நலக்கூடம் விழுப்புரம் மத்தி மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு காங்கிரஸ் பேரியக்கத்தின் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி குறித்து விரிவாக ஆலோசனை செய்தோம்.

விழாவில் விழுப்புரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் அந்த கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸ் பேரியக்கத்தில் எனது முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி., அவர்கள், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் திரு.எஸ்.ராஜேஷ்குமார் அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர்கள் திரு.டி.என்.முருகானந்தம் அவர்கள், திரு.சொர்ணா சேதுராமன் அவர்கள், அமைப்புச் செயலாளர் திரு.ராம்மோகன் அவர்கள், மாவட்டத் தலைவர்கள் திரு.ஆர்.பி.ரமேஷ் அவர்கள், திரு.வி.சீனிவாசகுமார் அவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் திரு.சிறுவை ராமமூர்த்தி அவர்கள், விழுப்புரம் நகரத்தலைவர் திரு.செல்வராஜ், கானை வட்டாரத்தலைவர் திரு காத்தவராயன் அவர்கள், மயிலம் வட்டாரத்தலைவர் திரு.காத்தவராயன் அவர்கள், விக்கிரவாண்டி நகரத்தலைவர் திரு.குமார் அவர்கள், விழுப்புரம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES