இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிறிய பொருட்களை வாங்குவது முதல் மக்கள் அனைத்திற்கும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை பயன்படுத்துகின்றனர். இத்தகைய டிஜிட்டல் பண பரிவர்த்தனை அரசு பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயனடிக்கட்டுகளை நேரடியாக சென்று வாங்குவதில் மட்டுமே பயன்படுத்தப்படாமல் இருந்தது. ஆனால் ரயில்களின் முன்பதிவு பெட்டிகளின் டிக்கெட்டுகளை ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலம் பெறும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. இது போன்ற …
Read More »ஏப்ரல் மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறை… இன்னைக்கே திட்டமிடுங்க!
மக்களவை தேர்தல் நேரம் என்பதால் பணப்பரிவர்த்தனை , கையில் ரொக்கமாக எடுத்து செல்லுதல் என தேர்தல் நடத்தை விதிமுறைகள் இந்தியா முழுவதும் அமலில் இருந்து வருகின்றன. நமது வங்கிப் பணிகளை மாதத் தொடக்கத்திலேயே திட்டமிட்டு கொண்டால் கடைசி நேர பரபரப்பை தவிர்க்கலாம். பொதுமக்களின் வசதிக்காக ரிசர்வ் வங்கி முன்பே வரும் மாதத்தின் வங்கி விடுமுறை நாட்களை அறிவித்து விடுகிறது. இந்தியா முழுவதும் தேர்தல் ஜூரம். பணப்பரிவர்த்தனை கைகளில் ரொக்கமாக கொண்டு …
Read More »பாஜக அரசு வாங்கிய கடனால் நாட்டின் ஒவ்வொரு இந்தியர் தலையிலும் சராசரி ரூ.1.5 லட்சம் கடன் சுமை : பிரியங்கா காந்தி சரமாரி குற்றச்சாட்டு
டெல்லி : பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை ரூ.150 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது ஒன்றிய அரசு என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “சுதந்திரம் அடைந்ததில் இருந்து 67 ஆண்டுகளாக 2014 வரை நாட்டின் மொத்த கடன் ரூ.55 லட்சம் கோடி. கடந்த 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் மட்டும் நாட்டின் …
Read More »ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை.. கருத்துக் கணிப்புகளுக்கு தடை.. தேர்தல் ஆணையம் அதிரடி
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 18ஆவது லோக்சபாவுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. சுமார் 543 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் 12 மாநிலங்கள் மற்றும் …
Read More »இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ! 9.38 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்! தலைவர்கள் வாழ்த்து
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. முதல் தேர்வாக தமிழ்த் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இன்று முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை தேர்வு நடைபெறும். இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறை கைதிகள் உட்பட 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட …
Read More »கரூர் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் செல்வி ஜோதிமணி வெற்றி பெற வாழ்த்து…
கரூர் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் செல்வி ஜோதிமணி அவர்களை இராண்டாம் முறை அதிகப்படியாக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் வழக்கறிஞர் K.முகமதுஅலி. அவர்கள் இன்று சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்வில் கரூர் மாவட்ட தலைவர் சின்னச்சாமி அவர்கள், கரூர் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர். திரு RM பழனிச்சாமி அவர்கள் மற்றும் க.பரமத்தி தெற்கு வட்டார தலைவர் திரு நல்லசிவம் …
Read More »5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1 முதல் கட்டண உயர்வு
சென்னை: தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1-ம் தேதி முதல் கட்டணம் உயர்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 63 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் கட்டணத்தை மாற்றியமைப்பது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு ஏப்.1-ம் தேதி முதல் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. அதன்படி, அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய …
Read More »தமிழகத்தில் மார்ச் 27-ம் தேதி வரை அதிக வெயில் இருக்கும்
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 29-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் இன்று முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை …
Read More »நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7% இடஒதுக்கீடு கோரி வழக்கு
சென்னை: நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரைச் சேர்ந்தமாற்றுத் திறனாளியான மணி வண்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 7 கோடி மாற்றுத் திறனாளிகள்: நாடு முழுவதும் 7 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். அனைத்து மாநிலங்களிலும் இவர்களுக்கு முறையான இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. …
Read More »தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு..!
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில வழிக் கல்வி பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை இந்த மாத இறுதிக்குள் நடத்தி முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுத்தேர்வில் சுமார் 77,865 மாணவர்கள் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர் தேர்வுகளில் பங்கேற்கவில்லை என கல்வித்துறை அதிகாரிகள் …
Read More »