Saturday , December 20 2025
Breaking News
Home / செய்திகள் (page 115)

செய்திகள்

All News

கொரோனா கொடிய வைரஸ் வில்லனுக்கு தண்ணி காட்டும் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி…

கொரோனா கொடிய வைரஸ் வில்லனுக்கு தண்ணி காட்டும் கரூர் அரசு மருத்துவமனை:

கடந்த காலங்களில் மற்றும் இப்பொழுதும் ஒட்டு மொத்த இந்தியாவையும் அல்லாமல் உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொடிய வைரஸ் கொரோனாவை அடித்து விரட்டிக் கொண்டிருக்கும் கரூர் மாவட்டம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி இதுவரை 102 நோயாளிகளை குணப்படுத்தி ஒட்டுமொத்த இந்தியாவிற்கே முன் உதாரணமாக திகழ வைத்த பெருமை கரூர் மாவட்ட ஆட்சியர் திரு அன்பழகன் அவர்களுக்கு சென்றடைகிறது என்பதில் கரூர் மாவட்ட மக்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.

ஏனென்றால் கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலும், திட்டமிடுதலும், மருத்துவர்களுக்கு போதிய ஓய்வு நேரம் அளிப்பதும், செவிலியர்களுக்கு போதிய ஓய்வு நேரம் அளிப்பதும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை தொடர்ந்து கண்காணித்து வர தனியாக தனிப்படை போன்று மருத்துவக் குழுவை உருவாக்கி நோயாளிகளை குணமடைந்து வைத்து இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆகிறார்.

இளைஞர்கள் சார்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் திரு அன்பழகன் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை,  மீண்டும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் இளைஞர் குரல் சார்பாக.

 

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கோரிக்கை – கொரோன நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு உயிர்த்தியாகம் செய்யும் மருத்துவர்களுக்கு அரசு ராணுவ மரியாதையுடன் அடக்கம் – தமிழக அரசு ஒப்புதல்

 

கொரோன நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு உயிர்த்தியாகம் செய்யும் மருத்துவர்களுக்கு அரசு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று முன்வைத்த தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கோரிக்கையை உடனடியாக செயல்படுத்திய தமிழக முதல்வர் திரு பழனிச்சாமி அவர்களுக்கு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் ராஜசேகர் அவர்கள் நன்றியை தெரிவித்தார்.

ஏற்கனவே தமிழக முதல்வர் ஐயா அவர்கள் பல நற்காரியங்களை இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு செவ்வனே செய்து வருகிறார்.

அதுபோல மாற்று கட்சியினர் சொன்னாலும் அது மக்களுக்கு தேவை என்ற உடனே முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இளைஞர்களின் மனதை புரிந்து கொண்ட தமிழக முதல்வர் திரு பழனிச்சாமி அவர்களுக்கு இளைஞர் குரல் சார்பாக நன்றி கலந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 

 

இளைஞர் குரல் மூலமாக திருப்பூரில் இளைஞர்கள் அரசுடன் இணைந்து திருப்பூர் மக்களுக்கு கொரானா விழிப்புணர்வு…

இளைஞர் குரல் மூலமாக திருப்பூரில் இளைஞர்கள் அரசுடன் இணைந்து திருப்பூர் மக்களுக்கு கொரானா விழிப்புணர்வு, பசிக்கு உணவு அளித்தல் மற்றும் ஏராளமான சேவைகளை செய்வதற்கு  அங்கீகாரம் அளித்த திருப்பூர் மாவட்ட அதிகாரிகளுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் வரும் காலங்களில் மேலும் சில இளைஞர்களுடன் இணைந்து மக்களுக்கு தேவையான வசதிகளை செய்வோம் என்றும்,  இளைஞர்கள் தனியாக சாலையோர ஏழை எளிய மக்களுக்கு காலை மற்றும் மதிய உணவுகள் அளிப்பது மிக்க மகிழ்ச்சியை மனதிற்கு தருவதாகவும்  இளைஞர் குரல் திருப்பூர் மாவட்ட செய்தியாளர் திரு விமல் ராஜா அவர்கள் தெரிவித்தார்.

பின்வரும் காலங்களில் இதுபோன்ற மகத்தான சேவையை தமிழகம் முழுவதும் செயல்பட முயற்சி செய்வோம் என்று இளைஞர் குரல்  மாநில ஒருங்கிணைப்பாளர் திரு முகமது அலி கூடுதல் விஷயமாக  கூறினார்.

 

Covid -19 நிவாரண பொருட்கள் தேவைப்படுகிறது – தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் மாவட்டம்…

Covid -19 நிவாரண பொருட்கள் தேவைப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அறிவித்து இருக்கும் காலக்கட்டத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளும் பல்வேறு உதவிமற்றும் நலத்திட்டங்கள் அறிவித்து செயல்பாட்டில் இருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தினக்கூலி வேலை செய்வோர்கள், ஏழை,எளியோர் மற்றும் இலங்கை மக்கள் முகாம்கள் என பலரும் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஏழை மக்களுக்கு உதவும் வகையில் சமூக அமைப்பு மற்றும் தமிழ்நாடு இளைஞர் கட்சி இணைந்து பொதுமக்களிடம் நிவாரண பொருட்களை பெற்று பாதிப்பு அடைந்த மக்களுக்கு கொண்டு சேர்க்கும்
பணியில் இறங்கி உள்ளது.

நிவாரண பொருட்கள் (மளிகை,கிருமிநாசினி,முகக்கவசம் ) வழங்க உள்ளவர்கள்
கரூர் மாவட்ட தொடர்புக்கு:

வெ.லோகேஷ்
நகர தலைவர்
தமிழ்நாடு இளைஞர் கட்சி
கரூர் மாவட்டம்.
8056920705

இரா.இராஜ்குமார்
மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு இளைஞர் கட்சி
கரூர் மாவட்டம்.
9786689789

பொருளாதார உதவி:

TamilNadu Ilangyar Katchi
Acc No: 6737473954
IFSC: IDIB000P047
Porur Indian Bank

கேலிகளை கேலி செய்த நிஜ ஹீரோ அர்னால்டு…

#என்னோட பதினைந்தாவது வயசுல நான் அமெரிக்கால

குடியேற போறதா சொன்னேன் எல்லோரும் சிரிச்சாங்க …

ஆனா நான் அமெரிக்கால குடியேறினேன்.!

என்னோட 18 வது வயதுல நான் உலக ஆணழகன் ஆகப்போறதா சொன்னேன். எல்லோரும் சிரிச்சாங்க …

நான் பலமுறை அந்த டைட்டிலை வென்றேன்.!

அதன்பிறகு நான் சினிமால பெரிய ஹீரோவா ஆகப்போறேனு சொன்னேன் எல்லாரும் சிரிச்சாங்க …

நான் ஹாலிவுட்ல ஹீரோவா ஆனேன்.!

சினிமால பெரிய வீழ்ச்சி வந்தபோது இவன் இனி அவ்வளவுதான் அப்டினு சொல்லி சிரிச்சாங்க …

நான் மீண்டும் மீண்டு வந்தேன்.!

என்னோட 50 வயசுல நான் கலிபோர்னியா கவர்னர் ஆகப்போறதா சொன்னேன் எல்லோரும் என்னைப் பார்த்து சிரிச்சாங்க …

நான் கவர்னர் ஆனேன்.!

இப்ப என்னைப் பார்த்து சிரிச்சவங்களை நான் திரும்பி பார்த்து சிரிக்கிறேன் … அவர்கள் எல்லாம் அதே இடத்துல தான் இருக்காங்க… தன்னம்பிக்கையாலும் என்னோட கடின உழைப்பாலையும், நான் நினைச்சதெல்லாம் சாதிக்க முடிந்தது.!

எதையுமே சாதிக்கனும்னு நினைக்கிறவங்க சுத்தி இருக்கிறவங்க கேலியை பொருட்படுத்த கூடாது.!

அது அவர்களின் வியாதி நம்மை பற்றியும் தன்னபிக்கையின் ஆற்றலை பற்றியும் அவர்களுக்கு எதுவும் தெரியாது.!

– கேலிகளை கேலி செய்த நிஜ ஹீரோ அர்னால்டு.

ஒருங்கிணைந்து செயல்பட ஐ.நா., சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.

ஒருங்கிணைந்து செயல்பட ஐ.நா., சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.

நியூயார்க் : ‘கொரோனா வைரசை தோற்கடிக்க சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என ஐக்கிய நாடுகள் சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உலகம் முழுதும் பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார பாதிப்புகளையும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. இதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஐ.நா. பொதுச் சபைகூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. அப்போது இந்தியா உட்பட 188 நாடுகள் இணைந்து ‘கொரோனா வைரசை ஒழிக்க சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்’ என்ற தலைப்பிலான தீர்மானத்தைதாக்கல் செய்தன.இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.மனித குலத்துக்கு மிகப் பெரிய சவாலாகவும் பாதுகாப்புக்கு ஆபத்தாகவும் விளங்கும் இந்த வைரஸ் அனைவருக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.இதற்கு முன் இந்த உலகம் சந்தித்திராத வகையில் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை இந்த வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் சீர்குலைந்துள்ளது.எனவே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சர்வதேசநாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்; இந்த செயல்பாடு மிகவும்தீவிரமாக இருக்கவேண்டும்.

தகவல்கள் மருத்துவவசதிகளை பகிர்ந்து கொள்வது உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள வழிகாட்டும் குறிப்புகளை பின்பற்றுவது போன்றவற்றில் ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்.இந்த நெருக்கடியான நேரத்தில் மனித உரிமைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். இன ரீதியாகபாகுபாடு காட்டும் நடவடிக்கை கூடாது. இவ்வாறு அந்ததீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.
இந்தியாவுக்கு ரூ.7,600 கோடி உலக வங்கி தாராளம்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக உலக வங்கி சார்பில் இந்தியாவுக்கு 7,600 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிதல் பரிசோதனை செய்தல் நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல் ஆய்வகம் அமைத்தல் மருத்துவ கருவிகள் வாங்குதல் சிறப்பு வார்டுகள் அமைத்தல் ஆகியவற்றுக்காக இந்த நிதியை மத்திய அரசு பயன்படுத்த உள்ளது.இதுதவிர பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஒட்டுமொத்தமாக 6,840 கோடி ரூபாயை உலக வங்கி வழங்கியுள்ளது.

உலகம் 14 நாட்கள் இயங்காமல் இருந்தால் போதும்… கொரோனா வைரஸ் அழிந்துவிடும்.. பரீத் ஜக்கரியா உறுதி…

உலகம் 14 நாட்கள் இயங்காமல் இருந்தால் போதும்… கொரோனா வைரஸ் அழிந்துவிடும்.. பரீத் ஜக்கரியா உறுதி.

வாஷிங்கடன்: உலகம் 14 நாட்கள் இயங்காமல் இருந்தாலே போதும், கொரோனா வைரஸ் தாக்கத்தை நிச்சயம் அழித்துவிடலாம் என நம்பிக்கை தெரிவிக்கிறார் முன்னணி வெளியுறவு விவகார ஆய்வாளர் பரீத் ஜக்கரியா.

அமெரிக்காவில் வசித்து வரும் அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் 14 நாட்கள் பொதுமக்கள் வீடுகளில் முடங்குவது என்பது சாத்தியமில்லை என்றாலும், அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் 14 நாட்களுக்கு சமூக விலகலை கடைபித்து ஒவ்வொருவரும் வீடுகளில் இருந்தோமானால் கோட்பாடு அளவில் அதற்கு பிறகு கொரோனா வைரஸ் பரவுதல் என்பது சாத்தியமாகாது எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த தென்கொரியா, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா போன்ற நாடுகள் வெற்றிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், கொரோனாவை அழிக்க வேண்டும், அதன் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என ஒவ்வொரு நபரும் எண்ணினால் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான யுத்தம் வெற்றி பெறும் எனக் கூறியுள்ளார் பரீத் ஜக்கரியா. மேலும், கொரோனா வைரஸ் தொற்று இருந்தால் கூட ஆரோக்கியமாக இருப்பது போன்று தான் தெரியும் என்றும், ஆனால் அதனை நோய்வாய்பட்ட ஆரோக்கியமற்றவர்களுக்கு எளிதாக உங்களால் பரப்ப முடியும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

சென்னையில், ஒரே நாளில் 2 மடங்கு கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு.. தமிழகத்திலேயே முதலிடம்
மேலும், தற்போதை சூழலில் அமெரிக்காவில் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுவதாகவும், எப்போதும் பரபரப்பாக இயங்கும் சி.என்.என். தொலைக்காட்சி அலுவலகத்தின் ஸ்டூடியோக்கள் கூட ரோபோக்கள் மூலமே இயக்கப்படுவதாகவும் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் பரீத். இந்நிலையில் அமெரிக்காவில் இரண்டரை லட்சத்திற்கும் நெருக்கமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும், இதுவரை 6,000-க்கும் மேற்பட்டோர் இந்த கொடிய நோயின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார் பரீத் ஜக்கரியா.
பரீத் ஜக்கரியாவை பொறுத்தவரை வெளியுறவுத்துறை விவகாரங்களில் பழுத்த அனுபவமும், ஆய்வறிவும் உடையவர் என்பதோடு முன்னாள் பத்திரிகையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுயகட்டுப்பாட்டுடன் ஒரு கிராமம் கரூர் மாவட்டத்தில் வெள்ளியணை ஜல்லிபட்டி…

சுயகட்டுப்பாட்டுடன் ஒரு கிராமம் கரூர் மாவட்டத்தில் வெள்ளியணை ஜல்லிபட்டி…

நடுரோட்டில் சுண்ணாம்பு விளம்பரம் தனித்திரு தவிர்த்திடு வசனங்களுடன்…

மூலிகை தண்ணீரில் கை கால்கள் சுத்தம் செய்ய தண்ணீர் டேங்க்…

அன்னியர்களுக்கு ஊருக்குள் இடம் இல்லை என்ற வசனங்கள் அதுவும் நடுரோட்டில்…

ஊருக்குள் செல்லும் சிறு பாதைகளை கம்பங்களை கொண்டு கேட்…

சமூக இடைவெளியில் மக்கள் ரேஷன் கடையில்…

ஊரெங்கும் கிருமிநாசினி தெளித்தல்…

வியப்பளிக்கிறது இந்த கிராம மக்களின் விழிப்புணர்வு…

இதுபோல ஒட்டுமொத்த தமிழகத்திலும் உள்ள ஒவ்வொரு கிராமமும் விழிப்புணர்வுடன் இருந்தால் கண்டிப்பாக கொரொனா வைரஸ் மட்டுமல்ல எது வந்தாலும் தடுத்து நிறுத்திக்கொள்ளலாம் சுயகட்டுப்பாட்டுடன்…

இளைஞர் குரல் சார்பாக இவ்வூரின் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்…

பொது எதிரியாக உள்ள கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அனைவரும் மனிதர்களே…

ஆளும் அரசு. பொதுமக்கள் மற்றும் வதந்தி பரப்பும் நபர்களுக்கு வேண்டுகோள்.

பொது எதிரியாக உள்ள கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அனைவரும் மனிதர்களே.
அவர்களை மதரீதியில் இன ரீதியிலோ பிரித்துப் பார்ப்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் தீங்காகும்.
எனவே பாதிக்கப்பட்டவர்களை பாதிக்கப்பட்டவர்களாக மட்டும் பார்த்து அவர்கள் மீண்டுவர ஊக்கமும் ஆக்கமும் அளிப்போம்.
வதந்தி பரப்புவோர் தங்களின் அறியாமையான இந்த செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
வதந்தி பரப்புவது இந்த தேசத்திற்கும் மனித குலத்திற்கும் எதிரான செயலாக சென்றடையும்.வதந்திகலால் பாதிப்பு இல்லாத பல நபர்கள் தற்கொலை செய்துகொள்வதும் நாம் அவர்களை கொலை செய்வதற்கு சமம். என தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாநில துணைசெயலாளர்.
க.முகமது அலி.அவர்கள் அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

நீங்கள் இந்த லிஸ்டில் வராதிருக்க தனித்திருங்கள்…

நீங்கள் இந்த லிஸ்டில் வராதிருக்க தனித்திருங்கள்…

கொடிய வைரஸான கொராணா கொள்ளை நோயில்
*A , B , C & D type* மக்கள் உண்டு.
இவர்களைப் பற்றி சற்று விரிவாகப்பார்ப்போம்.

*அப்போது தான் 21 நாள் தனிமை படுத்துதலின் காரணம் புரியும்.*

உதாரணத்திற்கு
கொள்ளை நோய் அதிகமாக பரவும் ஒரு நாட்டில் இருந்து ஒரு நபர்
விமானம் மூலம் வந்து இறங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம்

அவருக்கு விமான நிலையத்தில் அல்லது ரயில் நிலையத்தில்
காய்ச்சல் இருக்கிறதா ? என்று சோதிக்கப்பட்டு
அவருக்கு காய்ச்சல் இல்லை என்பது உறுதியானதும்
அவருக்கு 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுரை கூறி அவரிடம் இருந்து சுயப் பிரமாணம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு செல்ல அனுமதிக்கிறோம்
அவர் வீட்டில் இருக்கிறார்.

இதற்கு நடுவில் அவரது வீட்டிற்கு சில உறவினர்கள் வந்து அவரை பார்த்து செல்கின்றனர்.
அவரும் தனக்கு எதுவும் பிரச்சனை இல்லை என்று கருதி அருகில் உள்ள வீடுகளுக்கு செல்கிறார்.
இன்னும் ஒரு வாரம் சென்ற பிறகும் அவருக்கு காய்ச்சல் எதுவும் வராததால்
அவருக்கு பிரச்சனை இல்லை என்று முடிவு செய்து
அவரது குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்கித்தர,
வீட்டுக்கு கறி எடுக்க,
மனைவியுடன் கோயிலுக்கு,
கிராமத்தில் நடக்கும் திருவிழாவிற்கும்
சென்று வந்திருப்பார்..

இப்போது இரண்டாவது வாரத்தின் இறுதியில் அவருக்கு காய்ச்சல் அடிக்கும்.
உடனே பயந்து அஞ்சி சுகாதாரத்துறைக்கு போன் செய்வார்.
அவரை உடனே தனிமைபடுத்தும் வார்டில் அட்மிட் செய்து
நோய் தொற்று அறியப்படும்.
*#இவரே_டைப்_A_ஆவார்.*

இவருடன் நேரடி தொடர்பில் இருந்த இவரது குடும்பத்தார் மற்றும் இவர் சென்று பார்த்த உறவினர் வீட்டு மக்கள் மற்றும் அவர் சென்று பார்த்த அவரது தாய் தந்தை , மற்றும் அந்த திருவிழாவில் அவர் கண்ட அவரால் அடையாளம் காண முடிந்த உறவினர்கள், அவர் சென்ற மிட்டாய் கடை வைத்திருப்பவர், கறி கடை வைத்திருப்பவர்
*#இவர்கள்_அனைவரும்_”Type C”*

மேற்சொன்னவர்கள் அனைவரைப் பற்றியும் நமக்கு தெரிந்திருப்பதால் நம்மால் அவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த முடியும்.
எனவே இது நம் கையில் இருக்கும் விசயம்.

*இப்போது நம் கையில் இல்லாத டைப் B மற்றும் டைப் D மக்களுக்கு செல்வோம்.*

யாரெல்லாம் டைப் B?

அந்த நபர் மிட்டாய் வாங்க சென்ற போது
அவர் அருகில் நின்று வேறு பொருட்கள் வாங்க வந்த நபர்கள்…
அவர் கறி வாங்க சென்ற போது அவர் அருகில் நின்று கறி வாங்கிய நபர்கள்…
அந்த திருவிழாவில் அவருக்கு இதுவரை தொடர்பில் இல்லாமல் இவர் அருகில் வந்து சென்ற மக்கள்…
அவர் தாய் தந்தையை பார்க்க பேருந்தில் சென்றிருந்தால் அந்த பேருந்தில் முன் சீட் பின் சீட் பயணித்த அடையாளம் காண முடியாத மக்கள்…
*#இவர்கள்_அனைவரும்_டைப்_B*

இந்த டைப் B மக்களை அந்த பாதிக்கப்பட்ட டைப் A நபரால் கூட அடையாளம் கூற முடியாது.
மேலும் அந்த டைப் B நபர்களுக்கும் தாங்கள் நோயைப்பெற்றுள்ளோம் என்பது தெரியாது.
இவர்கள் சமூகத்தில் தங்களை அறியாமல் தொற்றைப்பரப்பிக் கொண்டிருப்பார்கள்…

*#இவர்கள்_மூலம்_தொற்றைப்_பெறுபவர்கள்_தான்_Type_D_மக்கள்.*

இந்த டைப் D மக்களிடம் இருந்து நோய் தொற்றை பெறுபவர்கள்
B1 , B2 என்று சாரை சாரையாக உருவாகிக்கொண்டே இருப்பார்கள்.

சரி இந்த கொள்ளை நோய் சங்கிலித்தொடரை எப்படி முறிப்பது?

சமூகம் தனித்திருப்பதனால் மட்டுமே இதனை செய்ய முடியும்.

*காரணம் டைப் A மற்றும் டைப் Cஐ மட்டும் தனிமையில் வைத்திருந்து டைப் B மற்றும் டைப் D வெளியில் உலாவிக்கொண்டிருந்தால் கொள்ளை நோய் வீரியமாக காட்டுத்தீ போல் பரவும்.*
எனவே அனைவரையும் வீட்டில் இருக்கச்சொல்வதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக இந்த டைப் B மற்றும் டைப் D மக்கள் தங்களுக்கு அறிகுறிகள் ஆரம்பித்த உடன்
வெளியே மருத்துவமனைகளை நாடுவார்கள்…
உடனே அவர்களது வீட்டை முழுமையாக இன்னும் கடினத்தன்மையுடன் தனிமைப்படுத்திட வேண்டும்.

இப்படியாக நோயின் காத்திருப்பு காலமான 14முதல் 21 நாட்களை நாம் கடந்தால்

முழுமையாக டைப் B மற்றும் டைப் D மக்களை வெளியே கொண்டு வந்து கண்டறிந்து தனிமைப்படுத்திட முடியும்.

இதனால் கொள்ளை நோய் பரவுவது தடுக்கப்படும்

*இதுவே இந்த 21 நாள் ஊரடங்குக்கு பின்னால் உள்ள சூத்திரமாகும்.*

இதை உணர்வோம்,
தெளிவோம்,
*#தனித்திருப்போம்.*

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES