

இந்நிகழ்வின் போது உயர்மட்ட குழு உறுப்பினர் ஜெ.பாலன், மதுரை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன், மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வி.பி.ஆர்.செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்


மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

வைகை திருமங்கலம் பிரதான கால்வாய் அணைப்பட்டி பேரணையில் இருந்து 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாசனம் பெறும் அணையை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஞானசேகரன், செயற்பொறியாளர் ,
அன்புச்செல்வன்,
துணை செயற்பொறியாளர்
அன்பு தலைமையில்
வைகை திருமங்கலம் பிரதான கால்வாய் பாசன கோட்ட தலைவர்கள் எம்.பி.ராமன் , தங்கராஜ், பகவான்,தியாக ராஜன்,ஆர்.பாண்டியன் மற்றும் விவசாய பிரதிநிதிகள் முன்னிலையில் உதவி பொறியாளர்கள் செல்லையா, கோவிந்தராஜன், பிரபாகரன், தளபதி, ராம்குமார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு அணையை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் பெரியாறு வைகை திருமங்கலம் பிரதான கால்வாய் விவசாய சங்க கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்


சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில மகளிரணி தலைவி அன்னலட்சுமி ஷகிலா கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தென்னக மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் ஐயப்பா கார்த்தி பங்கேற்றார்.
அன்புச் சகோதரர் திரு. ராகுல் காந்தி அவர்கள், இந்தியாவின் ஆன்மாவை மீட்டெடுக்க, நமது குடியரசின் உயர் விழுமியங்களை உயர்த்திப் பிடிக்க, நாட்டு மக்களை அன்பால் ஒன்றிணைப்பதற்கான பயணத்தை இன்று தொடங்கியிருக்கிறார்.
சமத்துவத்தின் சின்னமான வள்ளுவர் சிலை உயர்ந்து நிற்கும் குமரிமுனையைக் காட்டிலும் இந்த “இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கப் பொருத்தமான இடம் வேறு இருக்கமுடியாது. மதத்தால் பிளவுபடுத்தலும், கேடு விளைவிக்கும் வெறுப்புப் பரப்புரைகளும் மக்களின் மனங்களை மூழ்கடித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவை ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் அரும்பணியை நாட்டின் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் பேரியக்கம் முன்னெடுத்துள்ளது.
பெருமைமிகு நமது குடியரசை மீண்டும் கண்டெடுக்கும் தனது நோக்கத்தில் “இந்திய ஒற்றுமைப் பயணம்” வெற்றிபெற வாழ்த்துகிறேன். -தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின்





பி.கே மூக்கையா தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை அரசரடி பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவனத்தலைவர் திருமாறன் ஜி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில செயலாளர் மாரிமறவன்,மாநில தொண்டரணி தலைவர் ஸ்ரீ ராம்ஜி, மாநில தொழிற்சங்க துணைத்தலைவர் விருமாண்டி, மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் தெய்வசக்தி, மாவட்ட தலைவர் மருதுஆனந்த், மாவட்ட பொதுச் செயலாளர் ஊமச்சிகுளம் சுரேஷ்,மாவட்ட செயலாளர் கமல் உள்பட நிர்வாகிகள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், சாத்தங்குடி கிராமத்தில் அமைந்துள்ள, சக்கரைத்தேவன் வகையறாவிற்கு பாத்தியப்பட்ட பழமை வாய்ந்த, அருள்மிகு ஸ்ரீபூரண, ஸ்ரீ புஷ்கலா, சமேத அய்யனார் திருக்கோயிலில், 300 வருடங்களுக்கு பிறகு பிரமலைக்கள்ளர் சமுதாயம் சின்ன பங்காளி பெட்டி எடுப்பு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
சுவாமியின் நகைகள் மற்றும் பொருட்கள் அடங்கிய பெட்டி பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மாலை மரியாதையுடன் சிறப்பு ஆராதனை செய்யப்பட்டு , கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வரப்பட்டது.
300 வருடங்களுக்கு பிறகு திருவிழா நடைபெறுவதால் கிராமத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கிராமமே திருவிழா கோலம் பூண்டுள்ளது.
திருவிழா ஏற்பாடுகளை சக்கரை தேவன் வகையறாவை சேர்ந்த பங்காளிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

பி.கே மூக்கையா தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை அரசரடி பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் பொதுச்செயலாளர் வி.ஆர்.கே.கவிக்குமார் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வின் போது நேதாஜி சுபாஷ் சேனை மாநில செயலாளர் சுமன் தேவர் உடன் இருந்தார்.
இதில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் துரை கோபிநாதன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பசும்பொன் ராஜா உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.