ராகுல் காந்தி எம்.பி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் முதலாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக, மதுரையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலையில் இருந்து ஜான்சிராணி பூங்கா பகுதியில் உள்ள இந்திரா காந்தி சிலை வரை, மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.கார்த்திகேயன் தலைமையில் பேரணி நடைபெற்றது.
இதில் கவுன்சிலர்கள் தல்லாகுளம் முருகன், ஜெய்ஹிந்த்புரம் முருகன் மற்றும் நிர்வாகிகள் சிதம்பரபாரதி, பாலு, சிலுவை, செய்யதுபாபு, ரவிச்சந்திரன், அப்துல்மாலிக், நாஞ்சில் பால் ஜோசப், மீர்பாட்ஷா, ராஜா பிரபாகரன், ஜாகிர்உசேன், பாண்டி. சுப்பையா. டாக்டர் ரவிச்சந்திரன், , மலர்பாண்டியன், வன்னி ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக 500 வது நாள் உணவு வழங்கும் நிகழ்ச்சியில் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது
மதுரை,செப்.07
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு தினமும் உணவு வழங்கி வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக 500-வது நாள் உணவு வழங்கும் நிகழ்ச்சியை பிரனேஷ் பிரிண்டர்ஸ் உரிமையாளர் கிஷோர்குமார், ஆரபி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி, செயலாளர் சித்ரா, துணைச் செயலாளர் ரகுபதி, பொருளாளர் அருள்ஜோதி ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விஸ்வகர்மா யோஜனா திட்டம் குறித்து வீண் வதந்தி. தமிழ்நாடு அண்ணா கைவினைஞர்கள் சங்கம். குற்றச்சாட்டு.
மதுரை, செப்7-
தமிழ்நாடு அண்ணா கைவினைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு.இரா.ராஜேந்திரன். மாநில துணைத் தலைவர் திரு. செல்வமணி* ஆகியோர் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் விஸ்வகர்மா கௌசல் யோஜனா திட்டத்தின் படி 18 வகையான தொழில்களை செய்யக்கூடிய பாரம்பரிய கைவினைஞர்கள் சுமார் 30 லட்சம் பேருக்கு தொழில் வளர்ச்சிக்கு முதல் தவணையாக ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாவது தவணையாக ரூபாய் இரண்டு லட்சமும் மிகவும் குறைந்த வட்டியில் கடனாக வழங்கப்பட உள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆன நிலையில் எந்த ஒரு அரசியல்வாதியும் சிந்தித்துக் கூட பார்க்காத நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாரம்பரிய கைவினைஞர்களை பாதுகாக்கும் வகையில் மிகச் சிறந்த விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை அறிவித்து .13 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வருகின்ற 17ஆம் தேதி இத்திட்டத்தை முறையாக துவக்கி வைக்க உள்ளார்கள்.
இத்திட்டத்தின் வாயிலாக பாரம்பரிய கைவினைஞர்களுக்கு நவீன திறன் மற்றும் உலக அளவில் சந்தைப்படுத்துதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சில தீய சக்திகள இந்த திட்டம் பரம்பரை சாதி தொழிலை நோக்கி நகர்த்த படுகின்ற வர்ணாசிரம சதித்திட்டம் என்று விஸ்வகர்மா சமுதாய மக்களை திசை திருப்பி வருகின்றனர்.
தற்போது நவீன தொழில் நுட்பங்களால் பாரம்பரிய கைத்தொழில்கள் முற்றிலுமாக அழிந்து வருகிறது. நிறைய தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தற்கொலை செய்து வருகின்றனர். மேலும் லட்சக்கணக்கான கைவினைஞர்கள் பாரம்பரிய வேலைவாய்ப்புகளை இழந்து தவிக்கின்றனர். இந்த திட்டம் பாரம்பரிய கைவினைஞர்களை காப்பாற்றுவதற்காககவும், சமுதாய முன்னேற்றம் பெறுவதற்காகவும்உருவாக்கப்பட்ட திட்டமாகும்.
பாரம்பரிய கைத்தொழில் செய்பவர்களுக்கு எந்தவித உதவியும் செய்யாத சில அரசியல் கட்சிகள் சுய லாபத்திற்காக மத்திய அரசு செய்கின்ற உதவியை தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். விஸ்வகர்மா சமுதாய பெருமக்கள் விஸ்வகர்ம யோஜனா திட்டம் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட நமக்கு எதிராக நாத்திகவாதிகள் செயல்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
எனவே விஸ்வகர்மா சமுதாய மக்கள் பிரதமர் மோடி அவர்களின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்துக்கு முழு ஆதரவு அளித்து பயனடைய வேண்டும். விஸ்வகர்மா யோஜனா திட்டம் தொடர்பாக அவதூறு பரப்புவதை தீய சக்திகள் கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
கல்வித்தந்தை பி.கே மூக்கையா தேவர் அவர்களின் 44 வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை அரசரடி பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, “அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாநில தலைமைக் கழகச் செயலாளர் வேலுச்சாமி அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வைகை மு.பத்மநாபன், துணைத் தலைவர் முத்துராமலிங்கம், தொழிற்சங்க பொருளாளர் செல்வராஜ், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் மணிகண்டன், மாவட்ட பொருளாளர் ராமசாமி மற்றும் முனியாண்டி, சேகர்,வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
கல்வித்தந்தை பி.கே மூக்கையா தேவர் அவர்களின் 44-வது குருபூஜை விழாவை முன்னிட்டு,மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா, அவைத்தலைவர் அண்ணாதுரை, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட பொருளாளர் குமார், பரவை பேரூர் செயலாளர் பரவை ராஜா, பகுதி செயலாளர்கள் ஞானசேகரன், கருப்புச்சாமி, எம்.ஜி.ராமச்சந்திரன், வட்டக் கழக செயலாளர்கள் பஜார் துரைப்பாண்டி, எஸ்.பி.சேகர், சுபேதார், ஜெயபாண்டி, கே.சாலை.முருகன், ராஜூவ் மற்றும் மகளிரணி மாவட்ட செயலாளர் சுகந்தி அசோக், மகளிரணி இணைச்செயலாளர் பாண்டிச்செல்வி மற்றும் டாக்டர் வி.பி.ஆர்.செல்வகுமார், டாக்டர் சின்னச்சாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
கல்வித்தந்தை பி.கே மூக்கையா தேவர் அவர்களின் 44 வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை அரசரடி பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, “நேதாஜி சுபாஷ் சேனை” மாநில தலைவர் “டாக்டர் மகாராஜன்” அவர்களின் ஆணைக்கிணங்க, மாநில செயலாளர் “சுமன் தேவர்” மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் நிர்மல்குமார், பாலா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
உலக எம்ஜிஆர் பேரவை மாநாடு நடத்துவது குறித்த முதல் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது
உலக எம்ஜிஆர் பேரவை மாநாடு நடத்துவது குறித்த முதல் ஆலோசனைக் கூட்டம் மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள ராஜ் பிலிம்ஸ் அலுவலகத்தில், “உலக எம்ஜிஆர் பேரவை நிறுவனர் “முருகு பத்மநாதன்” தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஜெயபால் கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை நசீர் பாட்ஷா வரவேற்று பேசினார். “ஸ்ரீ இறைவன் எம்ஜிஆர் தீவிர பக்தர்கள் குழுவை சேர்ந்த “தமிழ்நேசன்” நன்றியுரை கூறினார்.
மேலும் உலக எம்ஜிஆர் பேரவை மாநாடு சிறப்பாக நடத்துவது குறித்த இந்த ஆலோசனை கூட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
பூம்புகார் கல்லூரி ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஊதிய உயர்வுக்காக பெரிதும் போராடிய முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியனுக்கு பயனாளிகள் நேரில் வந்து நன்றிகளை தெரிவித்தனர்..
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மேலையூரில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் இயங்கும் சுயநிதி பிரிவு கல்லூரியில் பணியாற்றும் அலுவலக, ஆய்வக, நூலக உதவியாளர்கள், ஓட்டுநர், இரவு காவலர், துப்புரவு பணியாளர்கள் உட்பட்டவர்களுக்கு பல ஆண்டுகளாக மாதம் ரூபாய் 5000 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது.
மிகுந்த பொருளாதார கஷ்டத்திலும் வறுமையிலும் வாடி வந்த ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி ஊதிய உயர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டும் பல மாதங்களாக வழங்கப்படவில்லை என்னும் குற்றச்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்ட பூம்புகார் கல்வி கல்லூரி ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெக வீரபாண்டியனை நேரில் சந்தித்து முறையிட்டார்கள். தொழிற்சங்க விதிப்படி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஜெகவீர பாண்டியன் நேரடியாக கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டு கோரிக்கை வைத்தும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் இணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் எடுத்துரைத்து நியாயமான இந்த கோரிக்கையினை நிறைவேற்றித் தர பெரும் முயற்சி மேற்கொண்டார்.
மேலும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.எம்.முருகன் உள்ளிட்டவர்களின் கவனத்திற்கும் இப் பிரச்சினையை கொண்டு சென்று தற்பொழுது இந்த மாதம் முதல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி ஊதியத்தை பெற்றுக்கொண்ட பூம்புகார் கல்லூரி ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அலுவலக உதவியாளர் ஜெயமணி, சுமதி ஆய்வக உதவியாளர்கள் லட்சுமணன், ராம்குமார், நூலக உதவியாளர் கயல்விழி, ஓட்டுநர் எழிலரசன், இரவு காவலர் சக்கரவர்த்தி, கூட்டுபவர்கள் நிலமதி, சரோஜா, உஷாராணி, துப்புரவு பணியாளர் செல்விமாலதி உள்ளிட்டவர்கள் மயிலாடுதுறையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெக வீரபாண்டியன் அவர்களை அவர்களது அலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.
தங்களுடைய நெடுநாளைய கோரிக்கைக்காக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு ஊதிய உயர்வை பெற்று தந்ததற்காக கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தது மிகவும் நெகிழி செய்ததாக அமைந்தது.
இந்நிகழ்வின் பொழுது மயிலாடுதுறை மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் குத்தாலம் இரா. மனோகரன் மற்றும் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.மேலும் தலைமை செயற்குழு உறுப்பினர் மேலையூர் முத்து மகேந்திரனை சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டார்கள்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் திருமுருகன்
பொதுமக்களை திரட்டி சாலை மறியல் செய்ய போகிறேன் மதுரை மாநகராட்சி 27 வது வார்டு கவுன்சிலர் மாயத்தேவன் அறிவிப்பு
மதுரை,செப்.04-
மதுரை மாநகராட்சி 27 வது வார்டு 60 அடி ரோடு மெயின் ரோட்டில் சேரும் சகதியாக வயல்வெளி போல் இருப்பதால் பொதுமக்கள் தினமும் நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோர் சாகசம் செய்வது போல் அந்த ரோட்டில் தினமும் சென்று வருகின்றனர். மந்த நிலையில் வேலை நட்ப்பதால் அந்த பகுதியில் செல்லும் பொதுமக்கள் முகம் சுளித்து செல்கின்றனர்.
இதுகுறித்து 27-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆ.மாயத்தேவன் நம்மிடம் கூறுகையில்,
செல்லூர் 60 அடி ரோட்டில் சேரும் சகதியாக உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். நடந்து செல்வோர் வாகனங்களில் செல்வோர் விழுந்து செல்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் கடந்து செல்லும் இந்த ரோட்டில் உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும். பலமுறை இது குறித்து மாமன்ற கூட்டங்களில் எடுத்துரைத்தும் ஆணையாளரிடம் மனு வழங்கியும் பணிகள் நடைபெறவில்லை. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரியிடம் சொல்லியும் அவரும் எதுவும் செய்து கொடுப்பதில்லை.
நான் கவுன்சிலராக பொறுப்பேற்ற போது செல்லூர் 60 அடி ரோட்டில் பாதாள சாக்கடை பணிகள் தொடங்கியது.15 மாதங்கள் ஆகியும் இன்னும் பாதாள சாக்கடை பணிகள் நிறைவடையவில்லை.
மேலும் குப்பை அள்ளும் பேட்டரி வண்டிகள் ரிப்பேர் ஆகி உள்ளதால் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க முடியவில்லை. மேலும் குப்பைத்தொட்டியை எடுத்துச் செல்லும் குப்பை லாரிகளும் சரிவர இந்த வார்டுக்கு வருவதில்லை. எனது வார்டு அதிமுக வார்டு என்பதால் மாநகராட்சி அதிகாரிகள் இந்த வார்டை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.
பாதாள சாக்கடை கழிவு நீர் தெருக்களில் தேங்கி இருக்கும் போது கழிவுநீர் உறிஞ்சும் வாகனத்தை அனுப்பச் சொன்னால் அனுப்புவதில்லை. மேலும் இந்த வார்டில் நாய் தொல்லைகள் அதிகமாக உள்ளது. சமீபத்தில் ஒரு வெறி நாய் எட்டு பேருக்கும் மேல் கடித்தது. உடனடியாக அதிகாரிகளுக்கு இதைச் சொல்லியும் நாய் பிடிக்கும் வண்டியை அனுப்பி நாய்களை பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்ல முடியவில்லை நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல பயன்படுகின்றனர்.
மேலும் இந்த வார்டுக்கு உட்பட்ட பல தெருக்களில் சாலை வசதிகள் இல்லாமல் உள்ளதால் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் மழை நீர் தேங்கி கொசுத்தொல்லை அதிகமாகி வருகிறது. எனவே உடனடியாக அனைத்து தெருக்களிலும் தார் சாலைகளை அமைப்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் இது பற்றி கூறினால் எதுவும் கண்டு கொள்வதில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபட போகிறேன் என கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ மாயூரநாதர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மாயூரம் ஸ்ரீ அபயப்பிரதாம்பிகை சமேத ஸ்ரீ மாயூரநாதசுவாமி திருக்கோவில் பழமை மாறாமல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று 18 ஆண்டுகளுக்குப் பிறகு திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ. பி. மகாபாரதி, தகவல் தொழில்நுட்பத் துறை அரசு செயலாளரும், இந்து சமய அறநிலைத்துறை சிறப்பு அதிகாரியுமான குமரகுருபன் மற்றும் அரசு அலுவலர்கள் வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் திருமுருகன்