Tuesday , January 27 2026
Breaking News
Home / செய்திகள் (page 9)

செய்திகள்

All News

அதானியின் பங்குச் சந்தை மோசடிகள் குறித்து சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்….

May be an image of text

அதானியின் பங்குச் சந்தை மோசடிகள் குறித்து ஹிண்டன்பர்க் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரியும், சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில் நாளை (22.8.2024) வியாழக்கிழமை மாலை 3.00 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் இந்நாள் – முன்னாள் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் சர்க்கிள் / வட்டார நிர்வாகிகள், சென்னை மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துணை அமைப்புகள், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் பங்கேற்பார்கள்.

அதானியின் பங்குச் சந்தை மோசடி

May be an image of text

அதானியின் பங்குச் சந்தை மோசடி குறித்து அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆதாரத்துடன் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. இதில் செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி பூச்சும், அவரது கணவரும் சம்பந்தப்பட்டுள்ளது சமீபத்தில் ஆதாரங்களுடன் வெளி வந்திருக்கிறது. அரசாங்கத்தையே விலைக்கு வாங்கியுள்ள அதானிக்கு செபி தலைவரை விலைக்கு வாங்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

செபி தலைவரும், அவரது கணவரும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் ரகசியமாக முதலீடு செய்ததாக ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிதிகள் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, ரவுண்ட்-டிரிப்பிங் நிதிகள் மூலம் பங்குகளை உயர்த்த பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அதானி குழுமத்தில் சந்தேகத்திற்குரிய பங்குகள் தொடர்பாக செபி தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்காமல் இருக்க செபி தலைவர் அதானியின் சகோதரருடன் தொழில் கூட்டாளியாக இருப்பது தான் காரணமாக உள்ளது. செபி தலைவரும், அவரது கணவரும் அதானி நிறுவனத்தின் வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு வைத்திருப்பதன் காரணமாகவே அதானி தொடர்புடைய பங்கு மோசடிக்கு எதிராக செபி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியுள்ளது.

இந்திய பங்கு சந்தை என்பது ரூபாய் 25 லட்சம் கோடி முதல் ரூபாய் 30 லட்சம் கோடி வரை சந்தை மதிப்பு கொண்டது. முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு செபி அமைப்பிற்கு இருக்கிறது. அந்த அமைப்பே அதானி நிறுவனத்தோடு சேர்ந்து கொண்டு லாப நோக்கில் செயல்பட்டது குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டுமென எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். உச்சநீதிமன்றமும் இந்த குற்றச்சாட்டை தன்னிச்சையாக முன்வந்து சிறப்பு புலனாய்வுக் குழு மூலமாக விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சமூக நீதியை நோக்கமாகக் கொண்டு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று கடந்த மக்களவை தேர்தலின் போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. மேலும், இடஒதுக்கீட்டு வரம்பை 50 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமலும், 2021 இல் நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் மோடி அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதன்மூலம் சமூக நீதிக்கு எதிராக பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்கு எதிராக மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

அதானியின் பங்குச் சந்தை மோசடியில் சம்பந்தப்பட்டுள்ள செபியின் தலைவர் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்பட்டு இதுகுறித்து கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரிக்க வேண்டும், சாதி வாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் நாடு முழுவதும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக நாளை (22.8.2024) வியாழக்கிழமை மாலை 3.00 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகம் எதிரே எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று நாட்டையே உலுக்கி வருகிற பங்குச் சந்தை மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கவும், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்ப உள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் தமிழக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று சாஸ்திரி பவனே திணறியது என்கிற வகையில் அமைய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

புதுச்சேரியில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளை ஒட்டி அன்னாரது சிலைக்கு ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாநில தலைவர் சு.அமுதரசன் தலைமையில்நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் -ஒரு சிறப்பு பார்வை

சாமானிய மக்களுக்கும் ஆள வேண்டும் என்ற எண்ணத்தோடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை உருவாக்கியவரும் நவீன இந்தியாவை உருவாக்கிய தொலைநோக்கு பார்வை கொண்ட மகத்தான தலைவர் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுடைய பிறந்தநாள் விழாவை ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக

YouTube player

20 .8.2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணிக்கு தலைவர் ராஜீவ் காந்தியின் சிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்
Re சேகர் சேர்மன் ஊடகப்பிரிவு
பஞ்சாயத்து ராஜ் மாநில பொதுச் செயலாளர்கள் கோவிந்தன், புஷ்பராஜ்,
தொகுதி தலைவர்கள் சங்கர் பாபு,
ஹேமாவதி செல்வம், திருநாராயணன்,
தெற்கு மாவட்ட துணைத் தலைவர் பொன்னம்பலவாசன், பொதுச் செயலாளர் சத்தியசீலன் , மூர்த்தி பொதுச் செயலாளர்
சேவாதல் துணைத் தலைவர் ஆறுமுகம்,
தொகுதி செயலாளர் முகிலன்,
மோகன் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா…

Image

பாரத ரத்னா திரு.ராஜீவ்காந்தி அவர்களின் 80வது பிறந்தநாள் விழா மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நேற்று (20.08.2024) சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டேன். மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினேன். பாரத ரத்னா ராஜீவ்காந்தி அவர்கள் குறித்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட ஊடக ஆளுமைகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. விழாவில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவல்ல பிரசாத் அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் இந்நாள்- முன்னாள் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் சர்க்கிள் / வட்டார நிர்வாகிகள், சென்னை மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துணை அமைப்புகள், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றார்கள்.

உபி-யில் சுட்டு கொல்ல பட்ட தலித் இளைஞர் அர்ஜுன் பாசியின் குடும்பத்தினரை சந்தித்தார் ராகுல்…

Image

உபி-யில் சுட்டு கொல்ல பட்ட தலித் இளைஞர் அர்ஜுன் பாசியின் குடும்பத்தினரை சந்தித்தார் ராகுல். தலித் இளைஞர் அர்ஜுன் பாசி பொது இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு அவரது குடும்பத்தினர் தொடர்ந்து நீதி கேட்டு வருகின்றனர். இன்று எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தி ரேபரேலியில் அர்ஜுன் பாசியை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களை சந்தித்தார். இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்பி தலித் குடும்பத்திற்கு நீதி வழங்குவோம் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூரை உருவாக்குவதே குறிக்கோள்-தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை

நிலையான ஸ்ரீபெரும்புதூர் முயற்சியானது ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத்தை அதன் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் கட்டமைப்பில் நிலையான வளர்ச்சி நடைமுறைகளை ஒருங்கிணைத்து மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உள்ளூர் மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது, இந்த முயற்சி சமூக ஈடுபாட்டை வளர்க்கிறது மற்றும் மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கிறது.

ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (SDGs), குறிப்பாக SDG 13 (காலநிலை நடவடிக்கை) உடன் இணைவதன் மூலம், இந்த முயற்சி உள்ளூர் பொருளாதாரங்களை மேம்படுத்தும், சமூக பிணைப்புகளை வலுப்படுத்தும் மற்றும் பகிரப்பட்ட பொறுப்புணர்வு உணர்வை வளர்க்கும்.
காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு செயல் திட்டத்துடன் இணைந்து, இந்த முயற்சியானது, காலநிலையை எதிர்க்கும் தன்மையை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கிறது, மேலும் ஸ்ரீபெரும்புதூரை பசுமையான மற்றும் உள்ளடக்கிய எதிர்காலத்தை நோக்கி நகர்த்துகிறது.

Kwins Global International Relations, School of Policy and Governance (SPG), BlueDrop Enviro, Eva India மற்றும் Strategy & Governance Consultants ஆகியவற்றுடன் இணைந்து முக்கிய நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து, சுற்றுச்சூழல் நடவடிக்கைக்கான முன்மாதிரி தொகுதியாக ஸ்ரீபெரும்புதூரை உருவாக்குவதே குறிக்கோள். நிலையான மதிப்புகள்.

திமுக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்கள் சத்தியமூர்த்திபவனில் முத்தமிழறிஞர் கலைஞர் நாணயம் ஒன்றை நினைவு பரிசாக வழங்கினார்…

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) நடைபெற்ற விழாவில் முத்தமிழறிஞர் கலைஞர் நாணயம் வெளியிடப்பட்டது.

அந்த விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். திமுக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்கள் இன்று (20.08.2024) சத்தியமூர்த்திபவனில் முத்தமிழறிஞர் கலைஞர் நாணயம் ஒன்றை நினைவு பரிசாக வழங்கினார்.

உடன் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இருந்தார்கள்.

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட,விராலிமலை சட்டமன்ற தொகுதியில் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி

Image

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட,விராலிமலை சட்டமன்ற தொகுதியில் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியை துவங்கிவைத்து, ஐந்து நாட்கள் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும்,பேருராட்சிகளிலும் மிகச்சிறப்பாக நடத்தி முடித்த புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர், அன்பிற்குரிய அண்ணன் திரு.KKசெல்லபாண்டியன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! இந்நிகழ்வை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்து,வெற்றிகரமாக நடத்திக்கொடுத்த திமுக நகர,ஒன்றிய,பேரூராட்சி,ஊராட்சி செயலாளர்களுக்கும்,காங்கிரஸ் கட்சியின் வட்டார,நகர,பேரூராட்சி ,ஊராட்சி நிர்வாகிகளுக்கும்,இந்தியா கூட்டணி நிர்வாகிகளுக்கும், ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள். தேர்தல்காலம் போலவே நன்றி அறிவிப்பு நிகழ்விலும், இரவானாலும் பிள்ளைகளோடு காத்திருந்து பேரன்போடு வரவேற்கும் எனதருமை சகோதர,சகோதரிகளுக்கும், பேரன்போடும் ,பெருமகிழ்ச்சியோடும் ,இரவு நெடுநேரமானாலும் அரைத்தூக்கத்தோடு விழித்திருந்து வரவேற்கும் எமது பிள்ளைகளுக்கும், நெஞ்சார்ந்த நன்றிகள். உங்கள் பேரன்பிற்கும்,பேராதரவிற்கும் தலை வணங்குகிறேன்.

பாரத ரத்னா திரு.ராஜிவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சத்தியமூர்த்திபவனில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை

Image

முன்னாள் பிரதமர், பாரத ரத்னா திரு.ராஜிவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (20.08.2024) சென்னை, சத்தியமூர்த்திபவனில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தோம். பின்பு சமூக நல்லிணக்கநாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். பின்பு சத்தியமூர்த்தி பவனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமினை திறந்து வைத்தோம். நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திரு.எம்.கிருஷ்ணசாமி அவர்கள், திரு.கே.வீ.தங்கபாலு அவர்கள், திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை காங்கிரஸ் தலைவர் திரு.எஸ்.ராஜேஷ்குமார் அவர்கள், துணைத்தலைவர் திரு.சொர்ணா சேதுராமன் அவர்கள், அமைப்புச் செயலாளர் திரு.ராம்மோகன் அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், செயல்வீரர்கள் கலந்து கொண்டார்கள்.

நடமாடும் வாகனங்கள் சேவை….கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நடமாடும் வாகனங்கள் சேவை....கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 200 நடமாடும் வாகனங்கள் சேவைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தும், பயனாளிகளுக்கான ஆணைகளையும் வழங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 200 நடமாடும் வாகனங்கள் சேவைகளை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதற்கிடையேயே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசுப் பணிகளில் பணியாற்ற பணியமர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், கருவூலக் கணக்குத்துறை பதவிகளுக்குக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கும், பணிக்காலத்தில் மறைந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES