Saturday , December 20 2025
Breaking News
Home / செய்திகள் (page 80)

செய்திகள்

All News

மதுரையில் ரயில் தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரையில் ரயில் தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரை,ஆக.26-

மதுரை ரயில்வே நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் பரிதாபமாக பலியாகிநர் மேலும் ஆறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தீ விபத்து நடைபெற்ற இடத்தை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி உதயகுமார் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும் விபத்து ஏற்பட்டதிற்கான காரணம் மற்றும் விபத்தில் காயமடைந்த பயணிகள் விபரங்கள் குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து ரயில் தீ விபத்தில் காயமடைந்து ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளிடம் ஆறுதல் தெரிவித்ததோடு அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் சிகிச்சை பெறுபவர்களுக்கு பிரட்,பழங்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவருமான ஆர்பி உதயகுமார் கூறுகையில்:- மதுரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் பலி ஆகியுள்ளது மிகவும் வேதனையும் வருத்தமும் அளிக்க கூடிய நிகழ்வாக உள்ளது. கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் உத்தரவின் பேரில் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்ததோடு விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தேன்.

ரயில் தீ விபத்தில் பலியான ஒன்பது பேருக்கு கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் சார்பிலும் அதிமுக சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரயில்வே துறைக்கென்று தனியாக பேரிடர் மேலாண்மை குழு இருக்கிறது. இந்த ரயில் தீ விபத்துக்கு முக்கிய காரணம் கேஸ் சிலிண்டர் கொண்டு வந்தது தான். இந்த கேஸ் சிலிண்டர்களை எப்படி ரயில்வே போலிஸார் அனுமதித்தார்கள் என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. இனி வரும் காலங்களில் இது போன்ற விபத்துகள் ஏற்படாதவாறு ரயில்வே துறை அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்…

பத்திரத்தை வாங்க 2 லட்சம் லஞ்சம்; 2 பேர் கைது!

பத்திரத்தை வாங்க 2 லட்சம் லஞ்சம்; 2 பேர் கைது!

காஞ்சிபுரம்  மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பெறுவதற்கு ரூபாய் 2 லட்சம் லஞ்சம் கேட்டு முன்பணமாக ஒரு லட்ச ரூபாய் பெற்ற பதிவுத்துறை ஊழியர்  மற்றும் அலுவலக உதவியாளர் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

காஞ்சிபுரம் மாவட்டம்,  வாலாஜாபாத் வட்டம், பண்ருட்டி பகுதியை சேர்ந்த பத்மாவதி என்பவரிரன் தந்தை சொத்தினை தனது சொத்திற்கான பவர் பத்திரத்தை பத்மாவதிக்கும் அவரது சகோதரர் பச்சையப்பன் ஆகியோருக்கு வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பச்சையப்பன் போலி ஆவணங்கள் மூலம் இந்த சொத்தினை அபகரித்து விற்பனை செய்துள்ளார்.

சில காலத்திற்குப் பிறகு இதனை அறிந்த  பத்மாவதியின் மருமகன் உலகநாதன் இம்மோசடியை அறிந்து இதனை ரத்து செய்ய கோரி காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

இது காலதாமதம் ஏற்பட்டதால் நீதிமன்றத்தை நாடி இதற்கான உத்தரவை பெற்று அதனை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்த நிலையில் மீண்டும் பத்திரம் பெறுவதற்கு மாவட்ட பதிவாளர் அலுவலக ஊழியர் நவீன்குமார் ரூபாய் 2 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதை அளிக்க மனமில்லாத பத்மாவதியின் மருமகன் உலகநாதன் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரினை பெற்று லஞ்ச ஒழிப்பு துறையினர், அவர் கேட்ட லஞ்சத்தின் முன்பணமாக ரூபாய் ஒரு லட்சம் வழங்க ஒப்புதல் தெரிவிப்பதாகவும் அதனைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார்.

பின்னர் அன்பழகன் பதிவாளர் அலுவலகத்தில் இப்பணத்தை வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட பதிவுதுறை ஊழியர் நவீன்குமார், தற்கால ஊழியராக பணிபுரிந்து வரும் சந்தோஷ்பாபுவிடம் இந்த பணத்தை அளித்துள்ளார். மறைந்திருந்து இவற்றை பார்த்த  லஞ்ச ஒழிப்புத் துறையினர் இருவரையும் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூபாய் இரண்டு லட்சம் கேட்டு அதற்கு முன்பணமாக ரூபாய் ஒரு லட்சம் பெற்ற நிலையில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளது காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளுக்கும் தடை

கனிமவளம் திருட்டு போவதை தடுக்க மாவட்ட அளவிலும், தாலுகா அளவிலும் அமைக்கப்பட்ட பறக்கும் படை என்ன செய்கிறது என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

அதேபோல, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது கோர்ட்டு உத்தரவுப்படி குற்றவியல் நடவடிக்கை எடுத்து ஏன் பணி நீக்கம் செய்யக்கூடாது எனவும் கேள்வியெழுப்பினர்.

அதனை தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த குவாரியும் செயல்படாமல் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என குவாரிகளின் செயல்பாட்டுக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்

மதுரையில் இன்று அதிகாலை நின்றிருந்த சுற்றுலா ரயிலில் தீப்பற்றியதில் 9 பேர் பலி. 6 பேர் படுகாயம்

மதுரையில் இன்று அதிகாலை நின்றிருந்த சுற்றுலா ரயிலில் தீப்பற்றியதில் 9 பேர் பலி. 6 பேர் படுகாயமடைந்தனர்

மதுரை,ஆக.26-

மதுரை ரயில்வே நிலையம் அருகே இன்று அதிகாலை நின்றிருந்த சுற்றுலா ரயிலில் தீப்பற்றியதில் 9 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.

ரயிலில் பயணிகள் சட்டவிரோதமாக சமையல் எரிவாயு சிலிண்டரை கொண்டு சென்றதே விபத்துக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் உ.பி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 3 பேர் பெண்கள், 4 பேர் ஆண்கள் மற்றும் ஒருவரின் அடையாளம் தெரியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்தது என்ன? கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஆன்மிகப் பயணமாக 60-க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவினர் தமிழகம் வந்தனர். இவர்கள் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புனிதத்தலங்களுக்கும் சென்றுள்ளனர். கடைசியாக நேற்று நாகர்கோவிலில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை 3.45 மணியளவில் மதுரை வந்துள்ளனர். புனலூரில் இருந்து வந்த ரயில் மூலம் அவர்கள் மதுரை வந்தனர்.

அவர்கள் வந்த இரண்டு ரயில் பெட்டிகள் தனியாகப் பிரிக்கப்பட்ட மதுரை ரயில்வே சந்திப்பில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கனெக்டிங் ரயில் மூலமாக நாளை சென்னை செல்லவிருந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 5.15 மணியளவில் ரயிலில் தீப்பிடித்துள்ளது. ரயிலில் இருந்த பயணிகள் சிலிண்டர் பயன்படுத்தி சமைத்துள்ளனர். அப்போது சிலிண்டர் வெடித்து தீ பிடித்துள்ளது. தீ மளமளவெனப் பரவ ரயில் பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறியுள்ளனர். 55 பேர் உயிர் தப்பியுள்ளனர். சமையல் செய்வதற்காக ரயில் பெட்டியின் ஒருபுறம் உள்ள கதவில் உள்புறம் தாழிடப்பட்டிருந்த நிலையில் பயணிகள் அனைவரும் ஒரே பக்கத்தில் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் தீயில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.

விபத்து நடந்த பகுதியில் அமைச்சர் மூர்த்தி நேரில் சென்று ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, காவல் உயரதிகாரிகள், தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் விரைந்து சென்றனர். விபத்துப் பகுதியை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது “நிகழ்விடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சிலிண்டர் வெடித்ததே விபத்துக்குக் காரணம் என 9 பேர் பலியாகியுள்ளனர். 6 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்றார்.இதற்கிடையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் பயணிகள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை ரயில் நிலையத்துக்குள்ளும், ரயிலிலும் எடுத்துச் செல்லக் கூடாது என்று தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி பவள விழா நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி பவள விழா நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்பித்தார்

மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் 75-ஆம் ஆண்டு பவள விழா நிறைவை முன்னிட்டு நடைபெற்ற முப்பெரும் விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தருமபுரம் ஆதீனத்தின் இவ்விழாவிற்கு 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலை வகித்தார். பின்னர் திருக்குறள் உரைவளம் என்ற நூலை முதலமைச்சர் வெளியிட்டார்.

இவ்விழாவில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வி. மெய்யநாதன், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் எம். பன்னீர்செல்வம், நிவேதா எம். முருகன், எஸ். ராஜ்குமார், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பி. மகாபாரதி, தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் சி. சாமிநாதன், செயலாளர் முனைவர் இரா. செல்வநாயகம், இந்து சமய அறநிலையத் துறை உயர்நிலை குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ தலைமையில் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது

மதுரை,ஆக.25-

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் பகுதி, வட்டக்கழக செயலாளர்கள், மகளிரணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கொடநாடு வழக்கு குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அதிமுக அரசு : அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது திமுக அரசு.முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி

கொடநாடு வழக்கு குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அதிமுக அரசு : அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது திமுக அரசு ஆர்.பி.உதயகுமார் பேட்டி

மதுரை,ஆக.25-

அதிமுகவில் குழப்பம், இடையூறு ஏற்படுத்தியவர்களுககு  சரியான சம்பட்டி‌ அடியான தீர்ப்பை நீதிமன்றம் கொடுத்துள்ளது என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புரட்சித்தமிழர் பட்டம் வழங்கியதை தொடர்ந்து மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள செய்தியாளர் அரங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 இதில் நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் எம்எல்ஏ வழங்கினார் . இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், கே.தமிழரசன், எம்.வி.கருப்பையா, மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல் உட்பட பலர் கலந்து  கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது :

ரோம் நகர் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல, இன்றைக்கு சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, காய்கறி விலை உயர்வு  இதைப் பற்றி எல்லாம் ஸ்டாலின் கவலைப்படவில்லை.
 54 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணித்திட்டத்தை வழங்கினோம், 13 லட்சம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம்  திட்டத்தை வழங்கினோம். ஆனால் அதையெல்லாம் மூடு விழா கண்டு சில திட்டங்களுக்கு திறப்பு விழா காண்கிறார்கள்.மேலும் தேர்தல் அறிக்கையில் கல்வி கடன் ரத்து, நீட் தேர்வு என்று பச்சை பொய் பேசினார்கள் எதையும் நிறைவேற்றவில்லை.

கொடநாடு கொலை வழக்கு குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அதிமுக அரசு. ஆனால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது திமுக அரசு .குற்றச்சாட்டப்பட்குற்றவாளியுடன் திமுக முதலமைச்சர் அருகில் நின்று புகைப்படம் எடுத்திருக்கிறார். கேரளாவில் உள்ளவர்க்கு இங்கு இருக்கும் வழக்கறிஞர் எப்படி ஜாமீன் பெற்றார். தொடர்ந்து கடத்தல், கொலை, கொள்ளை, திருட்டு வழிப்பறி கொடும் குற்றம் புரிந்தவர்களுக்கு  திமுகவைச் சேர்ந்தவர்கள் எப்படி ஜாமீன்தார்களாக இருந்தார்கள்.

அவர்களுக்கும் திமுகவுக்கும் என்ன தொடர்பு, அவர்கள் விடுதலை செய்ய வாதாடிய திமுக வழக்கறிஞர்களை நீலகிரி சார்பு நீதிபதியாக நியமித்திருக்கின்றனர்.இதில் மர்மம் இருக்கிறது  என தெளிவாக கூறியுள்ளார் இது சட்டமன்ற பதிவில் உள்ளது.

இரண்டு நிகழ்வுகள் உலகம் முழுவதுமாக பேசப்பட்டு வருகிறது ஒன்று சந்திராயன் 3 நிலவில் வெற்றி பெற்றது,மற்றொன்று எடப்பாடியார் தலைமையில் நடைபெற்ற மாநாடு வெற்றியை பேசப்பட்டு வருகிறது. இதையெல்லாம் திசை திருப்ப காலவதியானவர்கள் சிலர் பேசி வருகிறார்கள் இவர்களுக்கு தோல்விதான் பரிசாக கிடைக்கும்.

மதுரையில் நடந்த திமுக உண்ணாவிரத போராட்டத்தில் நிர்வாகிகள் ஜெயவிஷ்வா தர்ஷன்,புதூர் வி.சி.மாதவன், புதூர் சி.மோகன் பங்கேற்பு.!

நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசை கண்டித்து, மதுரை அண்ணாநகர் அம்பிகா திரையரங்கம் அருகே திமுக சார்பாக மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில் மருத்துவரணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜெயவிஷ்வா தர்ஷன், 10-வது வட்டக் கழக செயலாளர் புதூர் வி.சி.மாதவன், வடக்கு மாவட்ட பிரதிநிதி புதூர் சி.மோகன், புதூர் வி.சி.எம். தீபக் ,விவசாய அணி ராஜேஷ் கண்ணா, சம்பக்குளம் துரைப்பாண்டியன், பிரேம், மாணவரணி சுகந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கிராமப்புற பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு களநீர் பரிசோதனை பெட்டி FTK பயன்படுத்துதல் குறித்த பயிற்சி

மதுரை,ஆக.25-

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக, கிராமப்புற பெண்கள் சுகாதாரக் குழுக்கள், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு களநீர் பரிசோதனை பெட்டி FTK பயன்படுத்துதல் மற்றும் வலைத்தளத்தில் பதிவு குறித்த பயிற்சி வகுப்பு,கிராம குடிநீர் திட்ட கோட்ட நிர்வாக பொறியாளர் வி.செந்தில்குமரன் தலைமையில் நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பா.வீரராகவன் விழாவை துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பா.உலகநாதன் சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர் பி.கருத்த பாண்டியன் மற்றும் பெட்கிராட் நிர்வாக இயக்குனர் M.A.சுப்புராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பெட்கிராட் பொருளாளர் எஸ்.கிருஷ்ணவேணி நன்றியுரை கூறினார். இந்நிகழ்வில் மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 29 கிராம பஞ்சாயத்துகளில் பணியாற்றும் பம்ப் ஆப்ரேட்டர்களுக்கு நீரின் தன்மைகள் குறித்து செய்முறைகள் மூலமாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நீர் பரிசோதனையாளர் விளக்கி கூறினார்.

இந்த நிகழ்ச்சி மூலமாக நீரின் பல்வேறு தன்மைகள் குறித்து தாங்கள் அறிந்து கொண்டதாக பம்ப் ஆப்ரேட்டர்கள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜூபிடர் பெண்கள் கூட்டமைப்பு பெட்கிராட் நிர்வாகிகள் எஸ்.அங்குசாமி, ஜி.சாராள் ரூபி, பா.மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

தமுமுக மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக 29 ஆம் ஆண்டு துவக்க விழா

User Rating: Be the first one !

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 29 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, மதுரை தெற்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹிம் தலைமையில் கழக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநில மருத்துவ சேவை அணி பொருளாளர் அப்துல் ரஃபி கொடியை ஏற்றி வைத்தார். இதில் தமுமுக மாவட்ட செயலாளர் ஆம்புலன்ஸ் சேக், மமக மாவட்ட செயலாளர் முபாரக் நிஜாமுதீன், தமுமுக மமக மாவட்ட பொருளாளர் அப்துல் ஹமீது மற்றும் மாவட்ட துணை அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES