Tuesday , July 1 2025
Breaking News
Home / செய்திகள் (page 68)

செய்திகள்

All News

ரூ.7,500,00,00,00,000 காணவில்லை.! மோடியோ, BJPயோ.. ஒரு வார்த்தை சொல்லல. பரபரப்பு குண்டை போட்ட உதயநிதி.!!

ரூ.7,500,00,00,00,000 காணவில்லை.! மோடியோ, BJPயோ.. ஒரு வார்த்தை சொல்லல. பரபரப்பு குண்டை போட்ட உதயநிதி.!!

சென்னை: திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , ஹிண்டர்பெர்க் என்கின்ற ஆய்வு செய்கின்ற அமெரிக்க நிறுவனம் அவர்கள், ஆய்வு அறிக்கை வெளியிட்டார்கள்.

ஒரு தனியார் நிறுவனம் ஒன்பது வருஷத்துல எப்படி இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்தது ? அதானி அவர்கள் இப்போது உலக பணக்காரர் பட்டியல்ல இரண்டாவது இடம். இதெல்லாம் ஹிண்டர்பெர்க் நிறுவனம் அந்த ஆய்வில் கேள்வியாக கேட்டாங்க.

ஆனால் இதுவரைக்கும் திரு மோடி அவர்களோ, பாஜகவோ அதை பற்றி வாய் திறக்கவே இல்லை. சமீபத்தில் லண்டனில் இருந்து வருகின்ற பைனான்சியல் டைம்ஸ் இன்னொரு முறைகேட்டையும் வெளிபடுத்தி உள்ளது. அதாவது இன்றைக்கு நாட்டின் பல இடங்களில் மின்சார கட்டணம் உயர்ந்ததற்கு அதானி தான் காரணம் என பைனான்சியல் டைம்ஸ் ஆதாரத்தோடு கட்டுரை எழுதியுள்ளது. அதுமட்டுமல்ல சமீபத்தில் வந்த சிஏஜி அறிக்கை.

இந்த அமைப்போட வேலை என்னன்னா…. மத்திய அரசு, மாநில அரசு என்கின்ற செலவுகளை தணிக்கை செய்வது. CAG ரிப்போர்ட் படி ஒன்பது வருஷத்துல 7.50 லட்சம் கோடி ரூபாய்க்கு கணக்கே கிடையாது. ஏழரை லட்சம் கோடி ரூபாய்க்கு எங்க போச்சுன்னு தெரியல ? ஆயுஷ்மான் பாரத் அப்படின்னு ஒரு திட்டம். அதுல 88 ஆயிரம் இறந்தவர்களுக்கு மருத்துவ காப்பீடு செஞ்சிருக்காங்க.

துவாரக் மாதா என்ற திட்டம். அதுல ஒரு கிலோ மீட்டர் ரோடு போடுவதற்கு 250 கோடி ரூபாய் செலவு செய்து இருக்கிறதா ? இந்த CAG ரிப்போர்ட் சொல்லுது. இதையெல்லாம் தொடர்ந்து நம்முடைய தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் வாய் திறக்க வழியில்லை. அது மட்டுமல்ல இந்த ஒன்பது ஆண்டுகள்ல 12 லட்சம் கோடி மதிப்பிலான கார்ப்பரேட் கடன்களை மட்டும் தள்ளுபடி செய்திருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க கார்ப்பரேட்களுக்கான ஆட்சி ஒன்றிய பாஜக ஆட்சி என விமர்சனம் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி தான் NO 1 லீடர்; திருநாவுக்கரசர் எம்.பி பேட்டி..!!

காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி தான் NO 1 லீடர்; திருநாவுக்கரசர் எம்.பி பேட்டி..!!

சிதம்பரம் தமிழக காங்கிரஸ் பதவியை ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்னார். உங்களுக்கு மாநில தலைவர் பதவி கொடுத்தால் ஏத்துப்பீங்களா என்ற கேள்விக்கு பதிலளித்த திருநாவுக்கரசர் எம்.பி,

யாராவது பதவி கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்வாங்க. அது கார்த்திகா இருந்தா என்ன ? நானா இருந்தா சிதம்பரமா இருந்தா என்ன ? தங்கபாலோ, இளங்கோவனோ…. யாரா இருந்தாலும் என்ன ? கட்சியில இருக்க கூடிய முக்கியஸ்தர்கள் நிறைய பேர் இருக்கிறாங்க. நிறைய பேர் கேட்குறாங்க, விரும்புறாங்க…

ஒரு மாநில தலைவரா இருந்து செயல்படுவது என்பது ஒரு கட்சியில…. மாநிலத்துக்கு அதுதான் ஒரு முக்கியமான போஸ்ட்… அது தான் பெரிய போஸ்ட்…. அந்த பெரிய போஸ்ட்ல தலைவரா இருந்து செயல்படுவது… காங்கிரஸ் தலைவர் ராமையா இருந்திருக்காங்க… கக்கன் இருந்திருக்கிறார்… காமராஜர் எல்லாம் பல வருஷம் வந்திருக்காரு….

தலைவர்கள் என்பது ஒரு கௌரவமான ஒரு பதவி, ஒரு பொறுப்பு. செயல்படுவதற்கு ஒரு வாய்ப்பு.. அதனால அந்த வாய்ப்பில் யாருக்கு கிடைத்தாலும் சந்தோசமா தான் பார்ப்பார்கள்… மாநில தலைவர் பதவியை கேட்பதற்கு என்ன இருக்கின்றது ? எனக்கு கொடு… உனக்கு கொடு.. என்று கேட்கிறது எல்லாம் கிடையாது… அது அவங்களுக்கு தெரியும்…

காங்கிரஸ் கட்சி கேக்குறதுனாலயே கிடைக்காது.. அதனால மாநில தலைவர் பொறுப்பு கேட்டவுங்களுக்கு தான் கொடுப்பாங்க… தட்டினவங்களுக்கு தான் கொடுப்பாங்கன்னு கிடையாது. தலைமைக்கு தெரியும்… மாநில தலைவராக போடும் போது பல்வேறு ரொட்டேஷன்…. பல்வேறு ஆலோசனைகள் பண்ணி போடுவாங்க…. ஒரு ஆல் இந்தியா பாட்டில் எந்த மாநிலம் என வைப்பாங்க… ஏரியா செல்வாக்கு…. சமுதாய செல்வாக்கு… இந்த மாதிரி மாநிலத்துக்கு மாநிலம் பார்த்து நிர்வாகிகளை போடுவாங்க.

தமிழ்நாட்டில் ஏற்கனவே யார் யார் இருந்திருக்கா ? இப்ப யாரை போடணும் ? அவங்கள திருப்பி போடணுமா ? புதுசா போடணுமா ? மிடில் ஏஜ்ல போடணுமா ? அல்லது எக்ஸ்பீரியன்ஸ் ஆளை போடணுமா ? யங்ஸ்டரை போடணுமா ? என பல்வேறு ஆலோசனை செய்து தலைமை போடுவாங்க. போடும்போது உங்களுக்கெல்லாம் தெரியும். பிஜேபில பொன் ராதாகிருஷ்ணன் வந்திருக்காரு… சி.பி ராதாகிருஷ்ணன் இருக்கிறார்.

இப்போ இளைஞருக்கு ஒரு சான்ஸ் கொடுத்து இருக்காங்க ? ராகுல் காந்தி இளைஞர் தான்.. அகில இந்திய தலைவராக இருக்காரு. அவரு தான் NO 1 கட்சியில்… அதனால் தமிழக காங்கிரஸில் இளைஞரை தலைவராக போடுவதற்கு காங்கிரஸ் மத்திய தலைமை கருதினால் போடுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. இளைஞரை போட்டாலும் சரி, இல்லை எக்ஸ்பீரியன்ஸ் ஆட்களை போட்டாலும் சரி, யாரை போட்டாலும் எல்லாரும் இணைந்து செயல்படுவோம் என தெரிவித்தார்.

மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் சிலைக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பாக மாலை அணிவித்து மரியாதை.

மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 222 வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவரும், 85 வது வார்டு அதிமுக வட்டக்கழக செயலாளருமான கே.ஜெயக்குமார், மாநிலத் துணைத் தலைவர்கள் மணிமாறன், சுப்பையா, மாநில செயலாளர்கள் மதுரை கருணாநிதி, சுடலை, செல்லையா மற்றும் அதிமுக இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் வில்லாபுரம் ஆர்.கே.ரமேஷ் மற்றும் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் கந்தவேல், மாவட்ட செயலாளர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட பொருளாளர் வெங்கடாச்சலம், மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன், இளைஞரணி மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், இளைஞரணி மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சுந்தர், மாயக்கண்ணன், பூதக்குடி செல்வமணி, எஸ்.எஸ்.காலனி தங்கப்பாண்டி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ரயில்களின் பராமரிப்புக்கு நிதி ஒதுக்காமல் மக்களின் உயிருடன் விளையாடுகிறது பாஜக அரசு!!

Image

தொடர்ச்சியாக இதுபோன்ற நிகழ்வுகள், பெரும் விபத்துகள் பாஜக அரசின் தனியார்மய ஆசையின் விளைவுகள்!! பாஜக கூட்டணியை ஆட்சியிலிருந்து அகற்றுவோம். ஒன்றிய சேவை நிறுவனங்களை காப்போம்!! #India4India

தேசிய அளவில் நடைபெற உள்ள கூடைப்பந்து போட்டிக்கு மதுரையை சேர்ந்த பள்ளி மாணவி தேர்வு.!

மதுரை எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி தேசிய அளவில் நடைபெற உள்ள கூடைப்பந்து போட்டிக்கு தேர்வு

மதுரை கேந்திரிய வித்யாலாயா பள்ளிகளில் நடந்த கூடைப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்று தமிழ்நாடு அணியில் விளையாட மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி தன்யஸ்ரீ குறிஞ்சி குமரன் அவர்கள் தேர்வாகியுள்ளார்


இவர் தேசிய அளவில் உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடக்க உள்ள 17 வயதுக்குட்பட்டோர் கூடைப்பந்து போட்டியில் விளையாட உள்ளார் இவரை பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டினர்

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்…

மதுரை டி.ஆர்.ஓ காலனியில் உள்ள டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா

மதுரை கோ.புதூர் டி.ஆர்.ஓ காலனியில் உள்ள டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இன்று ஆயுத பூஜை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.தாங்கள் தொழில் செய்யும் இயந்திரங்களுக்கு மரியாதை செய்யும் விதமாக சந்தனம், குங்குமம் இட்டு வழிபட்டனர்.

அந்த வகையில் மதுரை கோ.புதூர் டி.ஆர்.ஓ காலனியில் உள்ள டாக்டர் வி.பி.ஆர். செல்வகுமார் அவர்களின் அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் டாக்டர் சின்னச்சாமி, மாஸ்.மணிகண்டன், இன்சூரன்ஸ் ராஜா, செல்வம், இளமி.நாச்சியம்மாள், மலர்விழி, மன்னாதி மன்னன், கவிஞர் மணிகண்டன், சுமதி, திவ்யபாரதி, முத்துமணி ஜெயபாண்டி, எம்.எஸ்.மாறன், இயக்குனர் வீரமணிபிரபு, ரமேஷ்காந்தி மற்றும் மதுரை கால் டாக்சி அசோசியேட் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்….

மதுரையில் ஆதரவற்ற முதியோர்களுக்கு தினமும் உணவு வழங்கி வரும் கல்வி பவுண்டேஷன் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் அங்குலட்சுமி.!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விப்பட்டியில் “கல்கி பவுண்டேஷன் டிரஸ்ட்” என்ற அமைப்பை ஏற்படுத்தி அப்பகுதியை சேர்ந்த கணவனை இழந்தவர்கள், பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருக்கும் 50 க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு கடந்த ஒரு வருடமாக “தினமும் மதிய உணவு” வழங்கி வருகிறார் டிரஸ்ட் நிறுவனத்தலைவராக உள்ள “அங்குலட்சுமி”.

மேலும் அப்பகுதியில் வசிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் தனக்கென ஒரு சுயதொழிலை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக குறைந்த கட்டணத்தில் தையல் பயிற்சி, டைப்ரைட்டிங் பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி பள்ளியும் நடத்தி வருகிறார்.

இவரின் தன்னலமற்ற பொது சேவையை பொதுமக்கள் மற்றும் சமூக சேவகர்கள் பாராட்டி வருகின்றனர்.

திண்டுக்கல்லில் அனைத்திந்திய பிள்ளைமார் சங்க மாநில கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல்லில் அனைத்திந்திய பிள்ளைமார் சங்க மாநில கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல்,அக்.22-

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார்கள் சங்கத்தின் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் பி.எஸ்.என்.எ. ஆடிட்டோரியத்தில் நடந்தது.

மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ரகுராம் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பு செயலாளர் ரவிபிள்ளை வரவேற்றார்.


நாடு முழுவதும் இச்சமுதாயத்தின் நிர்வாகிகளை தொழில்களின் அடிப்படையில் ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்து இக்கூட்டத்தில் பேசப்பட்டது.

சங்கத்தின் நிர்வாகிகள் நடத்திவரும் கல்வி நிறுவனங்களில் இச்சமுதாயத்தினருக்கு இலவச கல்வி அளிப்பது, கல்வி அளிப்பது, மகளிருக்கு சுயசார்பு தொழில் முனைவு திட்டங்களை கொண்டு சேர்ப்பது, சட்ட உதவிகள் வழங்குவது, புதிய நிர்வாகிகள் நியமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் உடனடியாக நிறைவேற்றுவது என தீர்மானிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மகளிர் அணி தலைவர் வேலம்மாள், ஸ்ரீவில்லிபுத்துார் வி.பி.எம். கல்வி குழுமத் தலைவர் சங்கர், நாமக்கல் மருத்துவ குழுமத் தலைவர் டாக்டர் குழந்தைவேல், காரைக்கால் ராகவேந்திரா கல்வி குழுமத் தலைவர் இளங்கோ, ஈரோடு நுாட்பாலை உரிமையாளர் அருண், டாக்டர்கள் பழனியப்பன், ராஜவேல், வழக்கறிஞர் பிரிவு தலைவர் கற்பக ரத்னபிரியா, அபுதாபி தமிழ்சங்க நிர்வாகி சிவக்குமார், திருப்பூர் நெசவு தொழிற்காலை உரிமையாளர் ஜெயக்குமார் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மகளிரணி நிர்வாகிகள் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக தலைமை செய்தியாளர் கனகராஜ்….

ககன்யான் திட்டம் | வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சோதனை வாகனம்

ககன்யான் திட்டம் | வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சோதனை வாகனம்

ஸ்ரீஹரிகோட்டா: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை சோதனை வாகனம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இஸ்ரோ தலைவர் சோமநாத் இதனை உறுதிப்படுத்தினார்.

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதனை அனுப்பியுள்ள நிலையில், இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான திட்டத்திற்கு ககன்யான் என பெயரிடப்பட்டு இது தொடர்பான ஆராய்ச்சிகள் கடந்த 2014 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூமியில் இருந்து 400 கி.மீ. தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 2-3 விண்வெளி வீரர்களை அனுப்பி, 1 முதல் 3 நாள் ஆய்வுக்கு பிறகு பூமிக்கு திரும்ப அழைத்து வருவதே ககன்யான் திட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கான முதல்கட்ட சோதனை இன்று காலை 8 மணி முதல் 9 மணிக்குள் தொடங்க இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் ஏவுதளத்தில் இருந்து வாகனத்தை விண்வெளிக்கு அனுப்பி, அதை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து, வங்காள விரிகுடாவில் இறங்கியதும் அதை அங்கிருந்து மீட்பது என திட்டமிடப்பட்டிருந்தது. இந்த சோதனைக்கு டிவி-டி1 எனும் ஒரு பூஸ்டர் கொண்ட ராக்கெட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

புவியில் இருந்து ராக்கெட் புறப்பட்டு சுமார் 17 கி.மீ உயரத்தில் சென்றதும் விண்கலத்தில் வீரர்கள் அமரும் பகுதி தனியாக பிரிந்துவிடும். அதை பாராசூட்கள் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் வங்கக்கடலில் பத்திரமாக இறக்கி சோதனை செய்யப்பட உள்ளது. வங்கக்கடலில் விழுந்த உடன் விண்கலத்தை இந்திய கடற்படையின் சிறப்பு கப்பல் மற்றும் நீச்சல் குழுவினர் மீட்டு இஸ்ரோவிடம் ஒப்படைப்பார்கள். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட ஆராய்ச்சி பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்வார்கள்.

இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோ தயாராக இருந்த நிலையில், விண்கலம் மேலே எழும்புவதில் சிக்கல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, காலை 8.30 மணிக்கு விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டது. அப்போதும் மேலே எழும்புவதில் சிக்கல் இருந்ததால், நேரத்தை 8.45 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எனினும், 5 நிமிடங்களுக்கு முன்பாக, இந்த சோதனை ஓட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என இஸ்ரோ முடிவெடுத்து, அதனை அறிவித்தது.

“விண்கலம் மேலே எழும்புவது இயல்பாக நடக்க வேண்டும். இரண்டு முறை அதற்காக முயன்றும் அது மேலே எழும்பாததால், அதற்கான காரணத்தைக் கண்டறிய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். முழுமையாக ஆய்வு செய்து அதன் பிறகு விரைவில் சோதனையை நாங்கள் துவங்குவோம். தற்போதைய நிலையில், ககண்யான் விண்கலம் பாதுகாப்பாக இருக்கிறது” என இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, விண்கலம் பகுதிக்குச் சென்று விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொழில்நுட்ப சரிபார்த்தலுக்குப் பிறகு மீண்டும் சோதனை வாகனத்தை விண்ணில் ஏவும் பணி அடுத்த சில மணி நேரங்களில் தொடங்கப்பட்டது. அப்போது சோதனை விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதையடுத்து, விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் திளைத்தனர். திட்ட இயக்குநர் எஸ். சிவகுமாரை ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இஸ்ரே தலைவர் சோமநாத், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “டிவி-டி1 திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என அவர் குறிப்பிட்டார். இதையடுத்துப் பேசிய எஸ். சிவகுமார், தாங்கள் மேற்கொண்ட தொடர் உழைப்புக்கு இன்று பலன் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.

மதுரை மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம்

மதுரை மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் விழா மதுரையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் கலை வளர்மணி செ. நாகேஸ்வரன் வரவேற்பு வழங்கினார். மாநிலத் தலைவர் எஸ்.தங்கவேல் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக நாடக நடிகர் குண்டுசேகரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட செயலாளர் அழகர்சாமி நன்றி கூறினார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES