Tuesday , January 27 2026
Breaking News
Home / செய்திகள் (page 88)

செய்திகள்

All News

மதுரையில் வ.உ.சி எழுச்சி பேரவை மணிநேரம் சார்பாக, மாவட்டத் தலைவர் சுரேஷ் மற்றும் மாவட்ட செயலாளர் ஐஸ்.ஆறுமுகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.!

சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 86-வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அனைத்து அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்


அந்த வகையில் மணிநகரம் வ.உ.சி எழுச்சி பேரவை சார்பாக, மாவட்டத் தலைவர் சுரேஷ் மற்றும் மாவட்ட செயலாளர் ஐஸ்.ஆறுமுகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பேரவை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மதுரையில் பாஜக சார்பாக பட்டியலின மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் நிகழ்ச்சி.!

பாரதிய ஜனதா கட்சி மதுரை மாநகர் வைகை வடகரை மண்டலில் உள்ள பட்டியலின மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் செந்தூர் பாண்டியன், மத்திய அரசின் திட்டங்கள் பிரிவு மாநில செயலாளர் சதிஸ்ஆசாத், மாவட்ட செயலாளர் ரோஜாராணி, மீனவர் அணி மாவட்ட தலைவர் இளங்கோமணி, வைகைவடகரை மண்டல் தலைவர் அருண்பாண்டி, பொதுச்செயலாளர் யுவராஜ், முன்னாள் மண்டல் பொருளாளர் சண்முகசுந்தரம், துணைத் தலைவர் காசிவிஸ்வநாதன், வார்டு தலைவர்கள் பாஸ்கர் மற்றும் சிவாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மறைவை முன்னிட்டு, மதுரையில் அவரது படத்திற்கு பாஜக பிச்சைவேல் மலர் தூவி மரியாதை.!

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மறைவை முன்னிட்டு மதுரையில் பாஜக விளையாட்டு பிரிவு சார்பாக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தல்லாகுளம் விசாலம் காபி பார் அருகே வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு ஏராளமான பாஜக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.


இந்நிகழ்வில் பாஜக மாநகர் 62-வது வார்டு தலைவர் முனைவர் ஆர்.பிச்சைவேல் மற்றும் 74-வது வார்டு தலைவர் முருகேசபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பிரியாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா படத்திற்கு பாஜக வார்டு தலைவர் பிச்சைவேல் மலர் தூவி மரியாதை.!

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மறைவை முன்னிட்டு மதுரையில் பாஜக விளையாட்டு பிரிவு சார்பாக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தல்லாகுளம் விசாலம் காபி பார் அருகே வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு ஏராளமான பாஜக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.


இந்நிகழ்வில் பாஜக மாநகர் 62-வது வார்டு தலைவர் முனைவர் ஆர்.பிச்சைவேல் மற்றும் 74-வது வார்டு தலைவர் முருகேசபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பிரியாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

கருவனூர் ராஜேந்திரன் நினைவு தினத்தை முன்னிட்டு, விசிக அய்யங்காளை மாலை அணிவித்து மரியாதை.!




மதுரை வடக்கு மாவட்ட விசிக முன்னாள் மேற்கு ஒன்றியச் செயலாளர் கருவனூர் ராஜேந்திரன் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கருவனூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் மலர் தூவியும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்


இந்நிலையில் கருவனூர் ராஜேந்திரன் படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் இரா.அய்யங்காளை
வழக்கறிஞர் ரவிக்குமார்,
புதூர் பரமசிவம்,
ஒத்தக்கடை மலைச்சாமி,
தொண்டைமான், அன்பழகன்,
கருவனூர் பறைமுருகன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பால் விலை உயர்வை கண்டித்து மதுரை பெத்தானியாபுரத்தில் பாஜக விளாங்குடி மண்டல் தலைவர் கஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.!

பால் விலை உயர்வை கண்டித்து மதுரை பெத்தானியாபுரத்தில் பாஜக விளாங்குடி மண்டல் தலைவர் கஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வார்டு தலைவர்கள் ராதா, திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஓபிசி அணி மாநில பொருளாளர் மோகன்குமார் கண்டன உரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் வேங்கைமாறன், ஓபிசி அணி மாவட்ட துணைத்தலைவர் பாலன் ரேடியோஸ் பாலமுருகன், மகளிரணி மாவட்ட தலைவி ஓம்சக்தி.தனலட்சுமி, சோலை பரமன், பூமிநாதன், ராணுவ பிரிவு மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மண்டல் பொதுச் செயலாளர் கோச்சடை ரங்கராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மதுரை மூன்று மாவடியில் பாஜக வண்டியூர் மண்டல் சார்பாக பால் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.!


பால் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

அந்த வகையில் மதுரை கிழக்கு மாவட்டம் மூன்றுமாவடி சந்திப்பு அருகே பாஜக வண்டியூர் மண்டல் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் கே.வி கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்குவண்டியூர் மண்டல் தலைவர் திருப்பதி, துணைத் தலைவர் சுபசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் கண்டன உரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் செல்வமாணிக்கம், ஊடகப்பிரிவு மாவட்ட துணை தலைவர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் பாலமுருகன், கிளைத் தலைவர்கள் முருகவேல், ஜெய்கணேஷ், கூட்டுறவு பிரிவு பாக்யராஜ், நெசவாளர் பிரிவு மாநிலச் செயலாளர் பிச்சைமணி, நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், வார்டு தலைவர் பன்னீர்பாண்டி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பால் உயர்வை கண்டித்து பாஜக பரவை மண்டல் தலைவர் ரமேஷ் கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.!

தமிழக அரசின் பால் உயர்வை கண்டித்து மதுரை மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி பரவை மண்டல் சார்பாக அதன் தலைவர் ரமேஷ் கண்ணன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல் பொதுச் செயலாளர் துரைபாஸ்கர் வீரக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பரவை பேரூர் தலைவர் ஜெகநாதன் வரவேற்புரை ஆற்றினார்

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட விவசாய அணி முன்னாள் மாநகர் தலைவர் முத்துப்பாண்டி முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் செல்வகுமார் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவபாலன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இந்நிகழ்வில் எஸ்டி எனி மாவட்ட தலைவர் எம் கே முருகன் மற்றும் மண்டல் நிர்வாகிகள் பாலமுருகன் மீனாட்சிசுந்தரம் மோகன் கோவிந்தன் மாரிசாமி பாலாஜி தனபாலன் மணிகண்டன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்

திருச்சி அப்போலோ மருத்துவமனையில் குழந்தைகள் தின கொண்டாட்டம்.!

குழந்தைகளுக்கும் மருத்துவ உரிமை அவசியம்
மருத்துவமனை அலங்கரிக்கப்பட்டு சிறப்புக் கொண்டாட்டம்
குஷியான விளையாட்டுகளுடன் ஆரோக்கிய விழிப்புணர்வு

திருச்சி, நவ 15:

குழந்தைகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், அவர்களின் கல்வி மற்றும் நல்வாழ்வுக்கான விழிப்புணர்வைப் பரப்பும் விதமாக நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த குழந்தைகள் தின நாளில் ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் மிகுந்த நம்பிக்கைக்குரிய மருத்துவ சேவை குழுமமான அப்போலோ, குழந்தைகளுக்கான மருத்துவ உரிமை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் உள்ள அப்போலோ குழுமத்தின் சில மருத்துவமனைகளில் சிறப்பு நிகழ்ச்சியை நடத்துகிறது.
இந்த நிகழ்ச்சியில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை, அப்போலோ குடும்பத்தின் உறுப்பினர்களாக ஏற்று, சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்ட பகுதிக்கு அவர்களை வரவழைத்து மகிழ்வித்தோம். அத்துடன் குழந்தைகள் மருத்துவர்கள், செவிலியர்கள் போல் உடையணிந்து மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களையும், உள் நோயாளிகளையும் சந்தித்து நலம் பெற வாழ்த்து தெரிவித்து புது அனுபவத்தை பெற்றனர். மேலும் குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கள்ளம் கபடமில்லா குழந்தைகளின் இயல்பான மகிழ்ச்சியும் சிரிப்பும் தான் நமக்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசு. உணவு உடை உறைவிடம் மற்றும் கல்வி ஆகிய அடிப்படை உரிமைகளுடன், சிறந்த சுகாதார வசதிகளும் கிடைக்க வேண்டியது அவசியம் என்று திருச்சி அப்போலோ மருத்துவமனையின் முதுநிலை பொதுமேலாளர் சாமுவேல் தெரிவித்தார்.
குழந்தைகள் தங்களின் உடல் நலத்தையும், குடும்பத்தினரின் உடல் நலத்தையும் பாதுகாத்திட ஊக்கப்படுத்தும் புதிய முயற்சியாக அவர்களின் ஆடைகளில் ஃப்யூச்சர் ஹீலர் என்ற வாசகம் பதித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும் குழந்தைகள் மருத்துவர்கள் திவ்யா, ஹிம பிந்து ஆகியோர் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதின் நன்மைகள், தடுப்பூசியின் முக்கியத்துவம், சமசீர் உணவு மற்றும் மனஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மருத்துவமனை மருத்துவ நிர்வாகி Dr. சிவம் மற்றும் பொது மேலாளர் சங்கீத் ஆகியோர் குழந்தைகள் தின நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். குழந்தைகள், பெற்றோர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES