
இதில் அர்ச்சகர் பேரவைத் தலைவர் தெய்வேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நாகராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சசிகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்,ஐடி விங் மாயாண்டி, ஜெ.புரம் நகர்த்தலைவர் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் திருக்கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அகில பாரத இந்து மகா சபா மாநில இளைஞரணி செயலாளர் மற்றும் மண்டலத்தலைவர் எம்.டி.ராஜா தலைமையில் மனு வழங்கப்பட்டது.
இதில் அர்ச்சகர் பேரவைத் தலைவர் தெய்வேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நாகராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சசிகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்,ஐடி விங் மாயாண்டி, ஜெ.புரம் நகர்த்தலைவர் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் மக்கள் நீதி மையம் வடக்கு தொகுதி நற்பணி இயக்க மாவட்ட செயலாளர் அண்ணாநகர் முத்துராமன் அவர்கள் யானைக்குழாய் பகுதி, கோ.புதூர், மதிச்சியம் போன்ற மூன்று இடங்களில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானங்களை வழங்கினார்.
பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் அருகே மக்கள் நீதி மய்யம் வடக்கு தொகுதி நற்பணி இயக்க மாவட்ட செயலாளர் சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன் தலைமையில் சலவை தொழிலாளிகளுக்கு அயர்ன்பாக்ஸ் மற்றும் அயர்ன் வண்டிகள், இனிப்புகள் வழங்கப்பட்டது.
மேலும் கோ.புதூர் தாமரைத் தொட்டி அருகே உள்ள பூங்காவில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் குன்றியோருடன் கேக் வெட்டி கொண்டாடிய அண்ணாநகர் முத்துராமன் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, மளிகை பொருட்களையும் வழங்கினார்.
பின்னர் மதிச்சயம் ஆர்.ஆர்.மண்டபம் பகுதியில் உள்ள தாணு மலையன் அறக்கட்டளை ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் உள்ள பெரியோர்களுக்கு மதிய உணவை அவர் வழங்கினார்.
மேலும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கு பதக்கம் அணிவித்து கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு மக்கள் நீதி மய்யம் மண்டல தலைவர் அழகர் முன்னிலை வகித்தார்.இதில் மாற்றம் தேடி பாலமுருகன், நாகேந்திரன், குணா அலி, முருகன், குமார், பூமிராஜா, பூசாரி மகாலிங்கம், ராமலிங்கம், மைதீன், ஆர்.சி.மணிகண்டன், ஆசைத்தம்பி, பாண்டியன், பி.கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
தமிழகத்தில் உள்ளாட்சி தினம் (நவம்பர் 01) இன்று கடைப்பிடிக்கப்பட்டது. எனவே மாநிலம் முழுவதும் இன்று கிராம சபை மற்றும் நகர சபை கூட்டங்கள் நடைபெற்றது.
மதுரை நெல்பேட்டை உமர்புலவர் பள்ளி திடலில் பகுதி சபை கூட்டம் 49- வது வார்டு மாமன்ற உறுப்பினர் செய்யது அபுதாகீர் தலைமையில் நடைபெற்றது
இக்கூட்டத்தில் மாநகராட்சி உதவி பொறியாளர் முருகன் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்