இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அசஞ்சர் நிறுவனத்தின் சமூக நிதி பங்களிப்புடன் பெட்கிராட் நிறுவனத்துடன் இணைந்து மதுரை எஸ்.எஸ் காலனியில் உள்ள பெட்கிராட் கூட்டரங்கில் சணல் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி கடந்த (25/09/2023) முதல் ஒரு மாத காலமாக நடைபெற்றது.
இந்த பயிற்சியில் 50 பெண்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு 17 வகையான சணல் பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் சொந்தமாக தொழில் தொடங்க வங்கிக் கடன் வழங்குவதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
இந்த பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை அன்று பெட்கிராட் நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராமன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பெட்கிராட் தலைவர் எஸ்.கிருஷ்ணவேணி, பொருளாளர் ஜி.சாராள்ரூபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் இ.டிஐ.ஐ உதவி மேலாளர் திருமதி எம்.சுனிதா அவர்கள் கலந்து கொண்டு பயிற்சியாளர்களிடம் கலந்துரையாடினார்.
மேலும் அவர்கள் பயிற்சி கற்ற விதம். பொருட்களை சந்தைப்படுத்தும் அனுபவம், சணல் பொருட்கள் உற்பத்தி செய்யும் விதம் குறித்து ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் இ.டி.ஐ.ஐ முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சியாளர் விஜயவள்ளி நன்றி கூறினார்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
மதுரை அன்சாரி நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவக் கழிவுகள் சேகரிப்பு மையத்தை மேயர் இந்திராணி பொன்வசந்த் தொடங்கி வைத்தார்.
உயிரியல் கழிவு மேலாண்மை விதிகள் 2016-இன்படி அனைத்து சுகாதார மையங்களிலும் உயிரியல் கழிவுகள் சேமிப்பு அமைத்துப் பயன்படுத்த வேண் டும். சுகாதார மையங்களில் உற் பத்தியாகும் உயிரியல் மருத்துவக் கழிவுகளைச் சேமித்து வைத்து 48 மணி நேரத்துக்குள் அதை அகற்றும் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
உற்பத்தியாகும் உயிரியல் மருத்துவக் கழிவுகளை மஞ்சள், சிகப்பு, நீலம், வெள்ளை என்று நான்கு வகைப்படுத்தி சேமித்து அகற்றப்பட வேண்டும். இவ்வாறு வகைப்படுத்தி அகற்றும் போது, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
இந்த உயிரியல் கழிவுகள் சேமிப்பு அறை மதுரை மாவட்டத்தில் 6 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் (நகர்ப்புறம் 3, கிராமப்புறம் 3) தனியார் நிறுவ னமான முத்தூட் நிதி நிறுவனத்தின் சமூக பங்களிப்புத் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக, மதுரை மாநகராட்சி அன்சாரி நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ், ரூ.50 ஆயிரத்தில் அமைக் கப்பட்ட மருத்துவக் கழிவுகள் சேகரிக்கும் மையத்தை மேயர் இந்திராணி பொன்வசந்த் தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, நகர்நல அலுவலர் வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மண்டல மருத்துவ அலுவலர் ராம்மோகன், மாவட்ட நிர்ணய மருத்துவ அலுவலர் பொன்.பார்த்திபன், முத்தூட் பைனான்ஸ் சி.எஸ்.ஆர் மேலாளர் ஜெயக்குமார் மற்றும் விஜயகுமார், மருத்துவ அலுவலர் ஷோபனா, சுகாதார ஆய்வாளர் கவிதா மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அசஞ்சர் நிறுவனம் மற்றும் பெட்கிராட் தொழில் பயிற்சி பள்ளி இணைந்து இலவச ஜூட் பேக் தயாரிக்கும் பயிற்சி மதுரை பீ.பீ.குளம் பகுதியில் பெட்கிராட் நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராமன் அவர்களின் தலைமையிலும், தலைவர் கிருஷ்ணவேணி, பயிற்சியாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார். மாமன்ற உறுப்பினர் முரளி கணேஷ் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து அவர் பேசுகையில் :- பகுதி மக்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், சுய தொழில் துவங்க தேவையான அனைத்து உதவிகளையும் தான் செய்து தருவதாக பேசினார்.
மதுரை மாவட்ட தொழில் மைய உதவி பொது மேலாளர் ஜெயா பேசுகையில், தொழில் தெரிந்தவர்கள் மத்திய மாநில அரசுகள் மானியத்துடன் வழங்கும் வங்கி கடனை பெற்று வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என கூறினார்.
இ.டி.ஐ.ஐ முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் பேசுகையில் :- தொழில் முனைவோராக மாறுவதற்கு உங்களின் விடாமுயற்சியும், ஆர்வமும் முக்கியம். தயாரித்த பொருட்களை விற்பனை செய்யவும் விற்பனை கூடம் மற்றும் கண்காட்சி அமைக்கவும் வழிவகை செய்யப்படும்என பேசினார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் தங்கமலர் பேசுகையில் மானியத்துடன் வங்கி கடன் பெறுவது தற்போது எளிமையாக்கப்பட்டுள்ளது எனவே சிறப்பாக பயிற்சியை முடிக்க வேண்டும் என கூறினார்.
நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சியாளர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.
மதுரையில் ROYAL SOUCO 1974-1977 முன்னாள் மாணவர்கள் சார்பாக கீழவெளி வீதியில் உள்ள சௌராஷ்டிரா துவக்க பள்ளியில் பயிலும் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கும் விழா ஜே.கே.ரமேஷ் மற்றும் கே.என்.கே ரகுநாத் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
விழாவிற்கு வருகை தந்தவர்களை முன்னாள் கவுன்சிலர் ஆர்.கே.பாலயோகி வரவேற்று பேசினார்.
ஆர்.கே.விஜயன், எஸ்.ஆர்.சதாசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் ஜே.கே.கிருஷ்ணகுமார், என்.கே.ராகவன், டாக்டர் பி.ஆர்.ஜே கண்ணன், மற்றும் பேராசிரியர் எல்.ஆர் கோவர்தனன், தாளாளர் ஏ.ஆர்.ஜெகந்நாத், வி.கே.விஸ்வநாத், டி.ஆர்.ரவீந்திரநாத், கே.எஸ்.சந்திரசேகரன், டி.எஸ். சௌந்தரராஜன், ராமஈஸ்வர்லால், எம்.டி.மனோகரன், பி.ஆர்.முரளிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியில் திமுக சிறுபான்மையினர் பிரிவு வடக்கு மாவட்டம் சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கையெழுத்து இயக்கம் சோழவந்தான் எம்.எல்.ஏ வெங்கடேசன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறுபான்மை பிரிவு வடக்கு மாவட்ட அமைப்பாளர் எஸ்.எம்.ஜான் செய்திருந்தார்.
இந்நிகழ்வில் திருப்பாலை பகுதி செயலாளர் சசிகுமார், கிழக்கு ஒன்றிய சேர்மன் மணிமேகலை, மீராஜான், கா.கவியரசு, தேவதாஸ், சிங்கராயர், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் மற்றும் ஸ்டாலின், வட்டச் செயலாளர்கள் லட்சுமணன், ராமமூர்த்தி, ஜெங்சிஸ்கான், தம்பி செந்தில் மற்றும் நிர்வாகிகள் ரவி, வேல்முருகன், குருசாமி, அன்பு, கூலு (எ) ஆறுமுகம், விவேக்குமார், தோபினிக்சேவியர், பாலமுருகன், செல்வகுமார், தன்ராஜ், உதயா ஆகியோர் கலந்து கொண்டனர்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன் ஜி அவர்கள் விருதுநகர் மாவட்டம் கல்லு மடத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் கட்சி கொடியை ஏற்றி வைத்து மாபெரும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அவருக்கு ஊர் தலைவர், கிராம பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஏ.பி.சைக்கிள் & பிட்னஸ் சேல்ஸ், சர்வீஸ் ஷோரூமை மூத்த மண்டல மேலாளர் பாரதி, ரீஜீனல் மேனேஜர் வினோத்குமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை ஷோரூம் உரிமையாளர்கள் 85-வது வார்டு அதிமுக வட்டக்கழக செயலாளர் ஜெயக்குமார், மற்றும் அருணாச்சலம், பிரதீப் ஆகியோர் வரவேற்றனர்.
இவ்விழாவில் முக்கிய பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இங்கு ஹெர்குலிஸ், பி.எஸ்.ஏ, ஹீரோ உள்பட அனைத்து கம்பெனியை சேர்ந்த சைக்கிள்கள், உடற்பயிற்சிக்கு தேவையான பிட்னஸ் கருவிகள், குழந்தைகளுக்கான சைக்கிள் மற்றும் பேட்டரி கார்கள் பல மாடல்களில் குறைந்த விலையில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
மதுரையில் பாஜக தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மற்றும் ம.பொ.சி அறக்கட்டளை இணைந்து நடத்திய ம.பொ.சி அவர்களின் புகழைப் போற்றும் விதமாக கருத்தரங்கம்
மதுரை காமராஜர் சாலையில் உள்ள காமாட்சி திருமண மண்டபத்தில் பாஜக தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மற்றும் ம.பொ.சி அறக்கட்டளை இணைந்து நடத்திய தமிழகத்தை மதராஸ் மாகாணம் என்கிற பெயரை மாற்றி தமிழ்நாடு என்று பெயரை சூட்டக்கோரி போராடி வெற்றி கண்ட ம.பொ.சி அவர்களின் புகழைப் போற்றும் விதமாக கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பாஜக மதுரை மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர்கள் பேராசிரியர் ராம.ஸ்ரீனிவாசன், பொன்.பாலகணபதி, பெருங்கோட்ட பொறுப்பாளர் பேராசிரியர் கதலி நரசிங்க பெருமாள்,மதுரை மாநகர் கோட்ட பொறுப்பாளர் கார்த்திக் பிரபு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன், மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளரும், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளருமான டி.எஸ்.கே.ஞானேஸ்வரன் சிறப்பாக செய்திருந்தார். மாவட்ட தலைவர்கள் தெய்வேந்திரன் மற்றும் மகாலிங்கம் ஆகியோர் வரவேற்று பேசினர்.
நிகழ்ச்சியின் முடிவில் மண்டல் தலைவர் மணிமாறன் நன்றியுரை கூறினார்.
இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டில் வர்த்தகம், தொழில் வளர்ச்சி, முதலீடுகள், வேலைவாய்ப்புகள் என அனைத்துத் துறைகளும் முற்றிலும் சிதைந்து போயுள்ளன.
குறிப்பாக வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வேலையில்லாமல் இருந்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் வேலையில்லா திண்டாட்டத்தின் சதவீதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டில் மட்டும் வேலையின்மை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதனால், ஆண்டுக்கு 2 கோடி வேலை என்ற பிரதமரின் வாக்குறுதி என்ன ஆனது? என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டின் வேலையில்லா இளைஞர்கள்தான் பா.ஜ.க ஆட்சிக்கு கவுண்டவுன் என்ற சங்கை ஊதுவார்கள் என காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், “நாட்டில் வேலையின்மை விகிதம் 10% க்கும் அதிகமாக உள்ளது. மந்தநிலை மற்றும் பணவீக்கத்திற்கு மத்தியில், மோடி அரசாங்கம் இதுபோன்ற “வேலையின்மை கண்காட்சியை” ஏற்பாடு செய்துள்ளது, இது கோடிக்கணக்கான இளைஞர்களை வீடு வீடாக அலைய வைக்கிறது. நாட்டின் வேலையில்லா இளைஞர்கள்தான் பாஜக ஆட்சிக்கு கவுண்டவுன் என்ற சங்கை ஊதுவார்கள்” என தெரிவித்துள்ளார்.
சென்னை: 161 படி ஆளுநர் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயம். அவருக்கு இந்த அவசியம் உள்ளது.
பேரறிவாளன் விடுதலையில் இதுதான் நடந்தது. ஆளுநர் இதை செய்ய வில்லை என்றால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும், என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர். என் ரவி மசோதாக்களை கிடப்பில் வைத்திருப்பதற்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ஆர். என் ரவியின் செயல்பாட்டிற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது. தமிழ்நாடு அரசின் மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதாக வழக்கு தொடுத்துள்ளது. ஆளுநருக்கு உடனே உத்தரவிடக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
தமிழக சட்ட சபை மற்றும் அரசு அனுப்பிய மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்றுவதில் தாமதம் உள்ளது.. இதை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. ஆளுநருக்கு எதிராக ஆளும் திமுக கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது.
பேட்டி; இது தொடர்பாக பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஆளுநர் எப்போதும் மாநில அரசின் உரிமைகளை மட்டுமே செயல்படுத்த முடியும். மாநில அரசின் கோரிக்கைளை மட்டுமே.. அவர்களின் விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். கண்டிப்பாக இந்த வழக்கு விவாதத்தை ஏற்படுத்தும். இது தேசிய அளவில் மாற்றங்களை கூட ஏற்படுத்தலாம். விவாதங்களை ஏற்படுத்தலாம். அதனால் மாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அப்படிதான் ஆளுநருக்கு லாக் வைக்க திமுக பார்க்கிறது. ஒரு ஆளுநருக்கு என்று இல்லாமல் நாடு முழுக்க எல்லா ஆளுநருக்கும் எதிராக இந்த வழக்கு மாறலாம்.
161 படி ஆளுநர் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயம். அவருக்கு இந்த அவசியம் உள்ளது. பேரறிவாளன் விடுதலையில் இதுதான் நடந்தது. ஆளுநர் இதை செய்ய வில்லை என்றால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும். ராஜினாமா செய்துவிட்டு போக வேண்டும். திமுகவின் மனுவில் ஆளுநருக்கு எதிராக முக்கியமான சில கோரிக்கைகள் இருக்கும். இதில் ஒரு சில கோரிக்கைகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலும் கூட அது ஆளுநருக்கு எதிரான மோதலில் மிகப்பெரிய வெற்றியாக மாறும்.
தேசிய அளவில் சிக்கல்: தேசிய அளவில் ஆளுநரை வைத்து மோசமான அரசியல் செய்யும் பாஜகவிற்கு பெரிய அடியாக மாறும். எதிர்கட்சிகளை திட்டமிட்டு மோடி அரசு கழுத்தை நெரிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் வழக்கு போட்டுள்ளனர் . இந்த போக்கு தொடர்வது இந்திய ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குழி தோண்டி புதைக்கும் செயலை மத்திய அரசு செய்கிறது. இதை விடக்கூடாது என்று இவர்கள் ஜெயிலுக்கு சென்றுள்ளனர். ஏற்கனவே பஞ்சாப்பில் இது தொடர்பாக வழக்கு தொடுத்தனர். இப்போது மீண்டும் வழக்கு தொடுத்துள்ளார். இப்போது தமிழ்நாட்டிலும் வழக்கு தொடுத்துள்ளனர்.
இது கண்டிப்பாக பாஜகவிற்கு எதிராக பெரிய பிரஷர் கொடுக்கும். ஆளுநர் இங்கே பாஜகவிற்கு பெயரை கெடுகிறார். ஆனால் அதை பற்றி பாஜகவிற்கு கவலை இல்லை. இங்கே திமுக அரசை எவ்வளவு சீர்குலைக்க முடியுமோ அவ்வளவு முயலுங்கள் என்று பாஜக கூறி உள்ளது. இங்கே 5 சதவிகித வாக்குகள் உள்ளன. அது 3 சதவிகித வாக்குகள் ஆக குறைந்தால் கூட பரவாயில்ல்லை. தமிழ்நாட்டில் வெல்ல முடியாது, தமிழ்நாட்டில் ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்துங்கள் என்று ஆளுநர் ஆர். என் ரவியை அனுப்பி வைத்துள்ளனர், என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.