இன்று 03/04/2024 காலை கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் : கேர்நகர், அண்ணாநகர், சௌந்திராபுரம், மொடக்கூர் கீழ்பாகம் ஊராட்சி – வடுகபட்டி ஆகிய பகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கரூர் மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் அன்பிற்குரிய அண்ணன் திரு. அப்துல்லா எம்.பி அவர்கள், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.மொஞ்சனூர் இளங்கோ ஆகியோர் தலைமையில், கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அன்பிற்குரிய அண்ணன் திரு. சின்னசாமி அவர்கள் முன்னிலையில். அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி திமுக பொறுப்பாளர் திருமிகு. மீனா ஜெயக்குமார் அவர்கள், ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகத்தின் செயலாளர் அண்ணன் திரு எம்.எஸ். மணி அவர்கள், வட்டாரத் தலைவர் அண்ணன் திரு. காந்தி அவர்கள், நாகம்பள்ளி பேரூராட்சி தலைவர் அண்ணன் திரு. மணி அவர்கள், ம.தி.மு.க ஒன்றிய செயலாளர் அண்ணன் திரு. பூபதி ஆகியோருடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் இரண்டரை ஆண்டுகால பொற்கால ஆட்சி மற்றும் எனது ஐந்தாண்டு சாதனைகளை மக்களின் பேராதரவோடு விளக்கமாக எடுத்துரைத்தோம். மிகுந்த அன்போடும், மகிழ்ச்சியோடும் வரவேற்பு அளித்த அப்பகுதி தாய்மார்கள், பெரியோர்கள் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி நமதே!
கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதியாரின் நல்வாழ்த்துக்களுடன்,
கழக இளைஞரணிச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களது வாழ்த்துக்களுடன், கரூர் மண்ணின் மைந்தர் மாண்புமிகு எங்கள் அமைச்சர் அண்ணன் V செந்தில்பாலாஜி அவர்களது ஆதரவு பெற்ற,
கரூர் நாடாளுமன்ற தொகுதி திமுக, காங்கிரஸ் இந்தியா அணி கூட்டணி வேட்பாளர் செல்வி செ ஜோதிமணி அவர்கள் மகத்தான வெற்றி பெற,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு செல்வப் பெருத்தகை MLA அவர்கள்,
இன்று 2.4.2024 செவ்வாய் மாலை 7 மணிக்கு,
கரூர் மாநகரம், உழவர் சந்தை அருகே நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் திரளாக கூடியிருந்த பொதுமக்களிடத்திலே கைச்சின்னத்திற்கு ஆதரவு திரட்டி எழுச்சியுரையாற்றினார். தொகுதிப் பொறுப்பாளர் புதுகை அப்துல்லா எம்பி உள்ளட்ட நிர்வாகிகள், கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
டெல்லி: வாக்குப் பதிவு இயந்திரம், விவிபாட் இயந்திரம் என தேர்தல் களத்தில் புயலால் கிளப்பிவிடப்படும் சந்தேகங்கள் மற்றும் வதந்திகள் குறித்து விரிவான விளக்கங்களைத் தருவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் தனி இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது.
பி.வி.பி கல்லூரி குழுமத்தின் சேர்மன் டாக்டர் “பண்ணை செல்வகுமார் புதுமை பெண் விருதை வழங்கி பாராட்டினார்
மதுரை, ஏப்ரல்.02-
மதுரை வில்லாபுரத்தில் ஆதிநாகசக்தி அம்மன் திருக்கோவில் அறக்கட்டளை சார்பாக மகளிர் தின விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் பல்வேறு சாதனைகளை செய்த பெண்மணிகளை கவுரவப்படுத்தும் விதமாக “புதுமை பெண் விருது” மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகளுக்கான “சாதனை மாணவி விருதுகள்” வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பி.வி.பி கல்லூரி குழுமத்தின் சேர்மன் டாக்டர் “பண்ணை செல்வகுமார்” விருதுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் நளினி செய்திருந்தார்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் வழிமறித்து சோதனை நடத்தினர்.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கும் வகையில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 54 பறக்கும் படை குழுக்கள், 54 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 6 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவினர் தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தூத்துக்குடி 3-வது மைல் அருகே புள்ளியியல் துறை உதவி இயக்குநர் ஸ்மிருதி ரஞ்சன் பிரதான் தலைமையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஞானகுரு மற்றும் போலீஸார் அடங்கிய பறக்கும் படை குழுவினர் நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேடபாளரும், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக தூத்துக்குடியில் இருந்து காரில் புறப்பட்டு, அந்த வழியாக வந்தார்.
அவரது காரையும் தேர்தல் பறக்கும் படையினர் வழிமறித்து, முழுமையாக சோதனை செய்தனர். சோதனைக்கு கனிமொழி முழுமையாக ஒத்துழைத்தார். அவரது காரில் பணமோ, பொருட்களோ எதுவும் இல்லை. தீவிர சோதனைக்கு பிறகு அவர் திருநெல்வேலிக்கு புறப்பட்டு சென்றார்.
சென்னை: தமிழ்நாட்டை ஏமாற்றிய மோடி, இப்போது தமிழையே ஏமாற்றப் பார்க்கிறார் என முரசொலி குற்றம் சாடியுள்ளது.
இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள முரசொலி தலையங்கத்தில் ‘தாய்மொழி தமிழ்மொழியாக இல்லையே என்று வருத்தப்படுகிறேன்’ என்று பிரதமர் சொல்லி இருப்பதைப் பார்க்கும்போது புல்லரிக்கிறது. சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ.1500 கோடி ஒதுக்கும் மோடி, தமிழ் வளர்ச்சிக்கு ரூ.67 கோடிதான் ஒதுக்கி இருக்கிறார். அப்போது எங்கே போனது தமிழ்ப் பாசம்? 2008ம் ஆண்டு நடந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலகத் திறப்பு விழாவில் பேசிய கலைஞர் அவர்கள் மகத்தான அறிவிப்பு ஒன்றைச் செய்தார்கள். “150 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட கனவு, அந்த கனவு நினைவாக வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கு முன்பே நான் கொண்ட நினைவு.
செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் காலூன்றுகின்ற இந்த இனிய நாளில் எனக்கென்று உள்ள சொந்த பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாயை நிறுவனத்தின் பொறுப்பில் கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை ஒன்றினை நிறுவிட வழங்குகிறேன்” என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை’ வாயிலாக ஆண்டுதோறும் தகுதி வாய்ந்த தமிழறிஞருக்குக் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது இந்தியாவிலேயே மிக உயரிய அளவில் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டிதழும், கலைஞரின் உருவம் பொறித்த நினைவுப் பரிசும் அடங்கியதாகும்.
முதல் விருது 2010, ஜூன் 23 அன்று கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அன்றைய குடியரசுத் தலைவர் அவர்களால் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா’ அவர்களுக்கு வழங்கப்பட்டது. 2011 முதல் 2019ம் ஆண்டு வரையிலான விருதுகள் வழங்கப்படவே இல்லை. பத்து ஆண்டுகள் அந்த விருதை யாருக்கும் வழங்கவே இல்லை. கழக அரசு பொறுப்பேற்றவுடன் விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 22.01.2022 அன்று நடைபெற்ற விழாவில் பரிசுகள் அளிக்கப்பட்டன. அப்போதெல்லாம் மோடியின் தமிழ்ப் பாசம் எங்கே போனது?
ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, மொத்தம் 112 பரிந்துரைகள் கொண்ட 11ஆவது அறிக்கையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறது. ஆட்சி மொழி எனும் பெயரால் முழுக்க முழுக்க இந்தி மொழியை வலிந்து திணிப்பதற்கான பரிந்துரைகளையே இவர்கள் அளித்திருக்கிறார்கள்.
* கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி நிச்சயம் இடம் பெற வேண்டும்.
* கல்லூரிகளில் ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியைக் கொண்டு வரவேண்டும்.
* போட்டித் தேர்வுகளில் கட்டாய ஆங்கில மொழி வினாத்தாள் நிறுத்தப்பட வேண்டும்.
* இந்தியில் பணிபுரியாத அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எச்சரிக்கப்பட வேண்டும்.
* ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வில் தேர்வாளர்களின் இந்தி மொழி அறிவை உறுதி செய்ய வேண்டும்.இப்படி இந்திய மயமாகவே இருக்கிறது அந்த அறிக்கை. அப்போது மோடியின் தமிழ்ப் பாசம் எங்கே போனது?
தமிழ் -ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை கொண்டதாக தமிழ்நாடு இருக்கிறது. இதில் இந்தியைப் புகுத்தி மும்மொழிக் கொள்கை மாநிலமாக ஆக்கப் பார்க்கிறார்கள். அதற்காகத்தான் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வருகிறார்கள். புதிய கல்விக் கொள்கையில் முடிந்த இடத்தில் எல்லாம் சமஸ்கிருத மொழியைத் திணிக்கிறார்கள்.
* சமஸ்கிருதம், மும்மொழிப் பாடத்திட்டத்தின் ஒரு மொழியாகப் பள்ளிக் கல்வித் திட்டத்தின் எல்லா நிலைகளிலும், கல்லூரிகளிலும் ஒரு முக்கியமான வளமூட்டக் கூடிய விருப்பப் பாடமாக வழங்கப்படும்.
* மொழிச் சுவையுடனும், அனுபவப் பூர்வமாகவும் மட்டுமல்லாமல் தற்காலத்திற்குப் பொருந்தும் வகையில் சமஸ்கிருத ஞான மரபுகளின் வழியில் முக்கியமாக ஒலிப்பு மற்றும் உச்சரிப்பு முறைகளின் மூலம் கற்பிக்கப்படும். ஆரம்ப மற்றும் இடைநிலை சமஸ்கிருதப் பாடப் புத்தகங்கள் எளிய தரமான சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு, மாணவர்கள் உண்மையிலேயே அனுபவித்துக் கற்கும் வண்ணம் சமஸ்கிருத மொழியின் மூலமே கற்பிக்கப்படும்.
* ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தும் மும்மொழிக் கொள்கையில் சமஸ்கிருத மொழி ஒருபாடமாக்கப்பட்டு பள்ளி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு முக்கிய திறன் வளர்ப்பு விருப்பப் பாடமாக அளிக்கப்படும்.
* சமஸ்கிருத பாடப்புத்தகங்கள் அதிகமாக உருவாக்கப்படும்.
* சமஸ்கிருத துறைகள் மூலமாக சமஸ்கிருதம் பற்றியும் சமஸ்கிருத அறிவு முறைகள் (Sanskrit Knowledge System) பற்றியும் மிகச் சிறந்த இடைநிலை (Inter Disciplinary) ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.
* உயர்கல்வித் துறையில் முழுமையான பல்துறை (Holistic Multidisciplinary) பயிற்று மொழியாக சமஸ்கிருதம் விளங்கும். நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் உள்ள சமஸ்கிருத ஆசிரியர்கள் பாடப் புலமை பெற்றவர்களாக (Professionalized) ஆக்கப்படுவார்கள்.
– இப்படி இந்து – சமஸ்கிருத திணிப்பாக உருவாக்கப்பட்டது தான் புதிய கல்விக் கொள்கை ஆகும். மோடியின் தமிழ்ப்பாசம் எங்கே போனது?
ஆங்கிலத்தை அகற்றி விட்டு அந்த இடத்தில் இந்தியை உட்கார வைப்பதும், இந்தியை உட்கார வைத்த இடத்தில் சமஸ்கிருதத்தை உட்கார வைப்பதும்தான் அவர்களது நோக்கம். இவ்வளவு தமிழ்ப் பாசம் இருக்கும் பிரதமர் மோடி, தமிழ் மொழியை இந்திய அரசின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக ஏற்பாரா? மாநில ஆட்சி மொழிகள் அனைத்தும் இந்திய அரசின் ஆட்சிமொழியாக ஆக்குவாரா? தமிழகத்தில் இயங்கும் ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இணை அலுவல் மொழியாக தமிழை அங்கீகரித்து, அனைத்து அலுவலகச் செயல்பாடுகளும் தமிழிலேயே இயங்க உரிய சட்டத் திருத்தம் செய்ய முன் வருவாரா? சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை ஆக்க முயற்சிப்பாரா? இதையெல்லாம் செய்து விட்டு தமிழைப் பற்றி பேசவும். தமிழை ஏமாற்ற வேண்டாம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரையில் பிரவேசி ஒர்க்கர்ஸ் சார்பாக பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பிறமொழி பிரிவு மாநில செயலாளர் கன்பத்லால் தலைமை தாங்கினார். தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளரும், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளருமான டி.எஸ்.கே ஞானேஸ்வரன் வரவேற்று பேசினார்.
பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் வேட்பாளர் பேராசிரியர் இராமஸ்ரீநிவாசனை அறிமுகப்படுத்தி பேசினார்.நகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் சிறப்புரையாற்றினார்.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கே.சீனிவாசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், மண்டல் தலைவர் மணிமாறன், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் பள்ளி இறுதி நாள் வரை பணிபுரிய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:
பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் நகராட்சி / அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில் 2023- 2024ஆம் கல்வியாண்டில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்காலிப் பணியிடங்களை நேரடி நியமனம், பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மை குழு மூலமாக தகுதி வாய்ந்த தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை தற்காலிக ஆசிரியர்கள் பணி
இந்நேர்வில், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் உயர்நிலை , மேல்நிலை பள்ளிகளில் 2023-2024ஆம் கல்வியாண்டில் காலிப்பணியிடங்கள், பணியில் உள்ள ஆசிரியர்கள் மகப்பேறு விடுப்பில் சென்றதால் ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்து சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் ஆணை வழங்கப்பட்டது.
பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளின்படி, பள்ளி (மேலாண்மைக்குழு மூலம் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் கீழ்க்கண்டவாறு, சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நியமனம் பள்ளி இறுதி செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள்
முதுகலை ஆசிரியர்கள்- 25.03.2024 வரை (மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு இறுதி நாள்) பள்ளி இறுதி வேலை நாளாக இருக்கும்.
அதேபோல இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் – 2023- 2024 ஆம் கல்வியாண்டில் பள்ளியின் இறுதி வேலை நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை எப்போது?
முன்னதாக ஏப்ரல் 12ஆம் தேதியோடு 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகள் முடிந்து, பள்ளி இறுதி வேலை நாளாக இருக்கும் என்றும் ஏப்ரல் 13 முதல் கோடை விடுமுறை தொடங்கும் என்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, முன்கூட்டியே தேர்வுகள் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோடை விடுமுறையும் முன்கூட்டியே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.