Monday , June 9 2025
Breaking News
Home / இளைஞர் கரம் / மாநில ஆளுநர் விருதிற்கு விண்ணப்பித்திருக்கும் சாரண மற்றும் சாரணியர்களுக்கு முன்தேர்வு பயிற்சி வகுப்புகள்….

மாநில ஆளுநர் விருதிற்கு விண்ணப்பித்திருக்கும் சாரண மற்றும் சாரணியர்களுக்கு முன்தேர்வு பயிற்சி வகுப்புகள்….

*கரூர் மாவட்டத்தில்
பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பாக மதிப்பிற்குரிய *மாவட்ட முதன்மை ஆணையர்*/ *முதன்மை கல்வி அலுவலர்*
திரு. இரா. மதன்குமார் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாநில ஆளுநர் விருதிற்கு விண்ணப்பித்திருக்கும் சாரண மற்றும் சாரணியர்களுக்கு முன்தேர்வு பயிற்சி வகுப்புகள் புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 22.10.21மற்றும்23.10.21 ஆகிய இரு நாள்கள் தகுந்த கொரானா விதிமுறைகளைப் பின்பற்றி பாரத சாரண இயக்கம்கரூர் மாவட்டச்செயலர் இரவிசங்கர் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது.
இந்த முகாமில் மாவட்ட செயலர் மற்றும் மாவட்ட அமைப்பு ஆணையர், மாவட்ட பயிற்சி ஆணையர் ஆகியோர் ,பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த பொறுப்பு சாரண ஆசிரியர்களும் 200 க்கும் மேற்பட்ட சாரணர்களும் கலந்து கொண்டு தங்களை மாநில ஆளுநர் விருது பெறுவதற்கான முன்தயாரிப்புகளுடன் முகாமில் கலந்து கொண்டனர்..இம்முகாமில் சாரணியருக்கான முதல் உதவி முதல் பல்வேறு அடிப்பயிற்சிகள் மீள்பார்வையும் ஆய்வும் செய்யப்பட்டு சிறப்பான ஆளுமைப்பண்புகளுடன் சிறந்த சாரணயர்களை உருவாக்கிடும் முனைப்புடன் இம்முகாம் அமைந்திருந்தாக புகழூர் தலைமையாசிரியர் திரு.விஜயன்
இம்முகாமினை பார்வையிட்டுவாழ்த்துகளைக் கூறினார்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES