Tuesday , February 3 2026
Breaking News
Home / செய்திகள் / காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக மாபெரும் மருத்துவ முகாம்.!!
NKBB Technologies

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக மாபெரும் மருத்துவ முகாம்.!!

அக்டோபர் 2 தேச பிதா மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் பிறந்த நாள் மற்றும் கர்ம வீரர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு, மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக வறுமையில் வாடும் முதியோர்களுக்கு மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் விளாங்குடி சபா ராம் மருத்துவமனை டாக்டர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.டாக்டர் ராகவன், சிவக்குமார், ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் உதயசூரியன் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக மத்திய அரசு வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் பங்கேற்றார்.

மாபெரும் அன்னதானத்தை டாக்டர் பாலசுப்பிரமணியம் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அறக்கட்டளை அறங்காவலர்கள் பூமிராஜன், சோலை பரமன், முருகன் மற்றும் போஸ், திருஞான சம்பந்தம், இர்வின் பார்க்கர், முத்துலட்சுமி, சதிஷ்கண்ணா, முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES