Monday , June 9 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது.!

மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது.!

மதுரையில் அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டப் பேரவை கூட்டம் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்
மாநில துணைத்தலைவர் ஞானத்தம்பி,
மாவட்ட செயலாளர் நீதிராஜா, மாவட்ட பொருளாளர் சந்திரபோஸ்,இணைச்செயலாளர் ராம்தாஸ், மாவட்டச்செயலாளர், தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் சீனிவாசகன், துணைத்தலைவர்கள்
த.மனோகரன், தூ.முருகன்,
இணைச்செயலாளர்கள்
ஆ.பரமசிவன், சி.பெரியகருப்பன்
மகளிர் துணைக்குழு மாவட்ட அமைப்பாளர் தீ.ராஜி,
பொதுச்செயலாளர் செல்வம், மாவட்ட துணை தலைவர் சந்திரபாண்டி, நெடுஞ்சாலைத்துறை மாநில பொருளாளர் தமிழ்,

மதுரை மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக கூட்டுறவு சங்க தலைவர் கே.கண்ணன், பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்க பொருளாளர் கே.டி.துரைக்கண்ணன், மாநில துணைச்செயலாளர் மகுடீஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்
2. சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள் ஊர் புற நூலகர்கள் எம்ஆர்பி செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மதிப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்கள் காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்து குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்
3.முடக்கப்பட்ட அகவிலைப்படி சரண்டர் உள்ளிட்டவற்றை தமிழக அசரசு உடனடியாக வழங்கிட வேண்டும்.



4.சாலை பணியாளர்களை 41 மாத பணி நீக்க காலம் பணிக்காலமாக வரன்முறை செய்யப்பட வேண்டும்.
5. அரசாணை என் 115,139&152 ரத்து செய்து அரசு துறையில் தனியாரை புகுத்துவதை கைவிட வேண்டும்

6. அனைத்து அரசுத் துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.



7.புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து உரிய காப்பீடு தொகை வழங்கிட வேண்டும்
8.21 மாத ஊதியமற்ற நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்
9. மாநகராட்சிகளில் பணிபுரியும் தேர்ச்சி திறனற்ற ஊழியர்களுக்கு ஒரு நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் தர ஊதியம் ரூ.1950/- என்ற ஊதிய விகிதத்தை வழங்கிட வேண்டும்.



10.மதுரை மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க கோரிப்பாளையத்திலிருந்து சிவகங்கை சாலை, அழகர்கோவில் சாலை, கோரிப்பாளையம் முதல் சிம்மக்கல், கோரிப்பாளையம் முதல் தெற்குவாசல் வரை உயர்மட்ட பாலங்களை ஏற்படுத்த வேண்டும்
11.மதுரை மாவட்டத்தில் சத்துணவுத் திட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்
12. உசிலம்பட்டி பகுதியில் இன்று நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்காக ஏற்படுத்தப்பட்ட 58 கிராம கால்வாய் பாசன திட்டத்திற்கு நிரந்தர அரசாணை ஏற்படுத்திட வேண்டும்.


13. ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய GST நிலுவைத் தொகை 1,186 கோடியை உடனடியாக வழங்கிட வேண்டும்
14. மதுரை திருமங்கலம் இடையே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை நீக்க வேண்டும்
15. மதுரை மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் விதமாக புதிய தொழிற் பூங்காக்களை ஏற்படுத்தி பல்வேறு நிறுவனங்கள் மதுரையில் தொழிற் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


16. தமிழக அரசு துறையில் கருணை அடிப்படை பணி நியமனத்திற்கு விண்ணப்பித்து காத்திருக்கும் அனைவருக்கும் சிறப்பு நிகழ்வாக கருததி பணிநியமனம் வழங்கிட வேண்டும்
17.கருவூலத்துறையில் அமல்படுத்தப்பட்டுள்ள IFHRMS திட்டத்தை அரசே ஏற்று நடத்திட வேண்டும்.
18. மதுரை நகருக்குள் காலை மாலை இரு வேளைகளிலும் பெண்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய வகையில் இலவச பேருந்து வசதியை அதிக எண்ணிக்கையில் இயக்கிட வேண்டும்.


19. மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பெண்கள் பாதுகாப்பாக பணிபுரிய விசாக குழுவை ஏற்படுத்த வேண்டும்
20. பள்ளிக்கல்வித்துறையில் நிர்வாக சீர்திருத்தம் என்று அக்டோபர் மாதம் முதல் ஊதியம் வழங்காமல் இருப்பதால், அரசு சிறப்பு கவனம் செலுத்தி பிரச்சனைகளை களைந்து ஊதியம் வழங்கிட உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்
21.மதுரை மருத்துவக் கல்லூரியில் MBBS, படிக்கும் மாணவர்களுக்கு விடுதி வசதி உள்ளது போல் மருத்துவ கல்லூரியில் பயிலும் மற்ற துறை மாணவர்களுக்கும் விடுதி வசதி ஏற்படுத்திட வேண்டும்.



22. மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்
23.மதுரை போடி ரயில் பாதையை விரைந்து முடித்து மதுரை-போடி, போடி-மதுரை என இரு மார்க்கங்களிலும் தொடர்ந்து ரயில் இயக்கிட வேண்டும்.
24. 1990களில் திமுக ஆட்சியின் போது பணியமரத்தப்பட்ட மக்கள் நல பணியாளர்கள் 32 ஆண்டுகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணி நீக்கத்திலும் பத்தாண்டுகள் பணிபுரிந்தும் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழக அரசு வாய்மொழி உத்தரவாக பணியில் இணைய உத்தரவிட்டது.
.

பணி நியமன ஆணை வழங்கப்பெற்று பணிநீக்க காலத்தை வரன்முறை செய்து குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்து தர வேண்டும் என இப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES