Monday , July 28 2025
Breaking News
Home / செய்திகள் / “தேசிய மனித உரிமைகள்- சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பின் மதுரை வடக்கு மாவட்ட தலைவராக வி.பி.ஆர். செல்வகுமார் நியமனம்.!
NKBB Technologies

“தேசிய மனித உரிமைகள்- சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பின் மதுரை வடக்கு மாவட்ட தலைவராக வி.பி.ஆர். செல்வகுமார் நியமனம்.!

உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, மதுரையில் “தேசிய மனித உரிமைகள்- சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பு சார்பாக புதிதாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு அங்கீகார சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கும் விழா ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட தலைவர் முனைவர் ஆர்.பிச்சைவேல் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வின் போது புதிதாக நியமனம் செய்யப்பட்ட மதுரை வடக்கு மாவட்ட தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் தலைவராக வி.பி.ஆர் செல்வகுமார் அவர்களுக்கு, தேசிய தலைமையில் இருந்து வழங்கப்பட்ட நியமனம் செய்வதற்கான அங்கீகார கடிதம் மற்றும் அடையாள அட்டையை மாவட்ட தலைவர் பிச்சைவேல் முன்னிலையில் மாநில நிர்வாகிகள் வழங்கினர்.

மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு சமூக சேவைகள் செய்தோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் மாநில, மாவட்ட, தேசிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரையைச் சேர்ந்த உமா மகேஸ்வரிக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு…!

மதுரையைச் சேர்ந்த உமா மகேஸ்வரிக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு சென்னை ஜூலை 28 சென்னையில் சன்மார்க் சமூக கல்வி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES