Tuesday , July 29 2025
Breaking News
Home / கரூர் / கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களில் 28 நபர்கள் (13.4.2020) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
NKBB Technologies

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களில் 28 நபர்கள் (13.4.2020) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களில் 28 நபர்கள் (13.4.2020) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கூறி வழியனுப்பி வைத்தார்.

இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களில் 9 பேர் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய தொடர் சிகிச்சையால் தொற்று உள்ள நிலையில் அனுமதிக்கப்பட்ட 9 நபர்கள் தற்போது பூரண குணமடைந்து மனமகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றனர். மேலும் ரத்தப்

பரிசோதனையின் போது தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட 19 நபர்கள் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட 28 நாட்களை கடந்த பிறகு இன்று வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று அனைவருக்கும் வாழ்த்துக்கூறி அவர்களின் ஒத்துழைப்புக்கு நன்றி கூறி வழியனுப்பி வைத்தார்.

இந்த 28 நபர்களும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும், சிறப்பாக மருத்துவ சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் என அனைவருக்கும் தனது நன்றிகளை சமர்ப்பித்து சென்றனர்.

இந்த 28 நபர்களும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அசாதாரண சூழ்நிலையிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி சேவை புரிந்து வரும் அனைத்து மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார் இந்நிகழ்வின் போது கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரோஸி வெண்ணிலா, கூடுதல் முதல்வர் மரு.தேரணி ராஜன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.

Bala Trust

About Admin

Check Also

தெரு நாய் கடிகளால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த தேசிய செயல் திட்டம் வகுக்க வேண்டும்…

உலகில் ரேபிஸ் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இதை தடுக்க மத்திய மாநில அரசு கால்நடை மருத்துவத்துறையின் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES