Sunday , June 8 2025
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player

திமுக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்கள் சத்தியமூர்த்திபவனில் முத்தமிழறிஞர் கலைஞர் நாணயம் ஒன்றை நினைவு பரிசாக வழங்கினார்…

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) நடைபெற்ற விழாவில் முத்தமிழறிஞர் கலைஞர் நாணயம் வெளியிடப்பட்டது. அந்த விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். திமுக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்கள் இன்று (20.08.2024) சத்தியமூர்த்திபவனில் முத்தமிழறிஞர் கலைஞர் நாணயம் ஒன்றை நினைவு பரிசாக வழங்கினார். உடன் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இருந்தார்கள்.

Read More »

மதுரையில் பெருந்தலைவர் நடிகர் திலகம் அறக்கட்டளை சார்பாக ராஜீவ்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை செல்லூர் பகுதியில் பெருந்தலைவர் நடிகர் திலகம் அறக்கட்டளை சார்பாக பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மதுரை மாவட்ட தலைவர் ஜி.முத்துக்குமார் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் மீர்பாஷா, சோசியல் மீடியா மாநில பொதுச் செயலாளர் நாஞ்சில் பால் ஜோசப், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கே.ஆர்.சுரேஷ்பாபு, பூக்கடை கண்ணன், வீரவாஞ்சிநாதன், பகுதி …

Read More »

கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா மத்திய அரசு விழா என்று முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேட்டி..!

கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா மத்திய அரசு விழா என்று முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் பேட்டி மதுரை ஆகஸ்ட் 20 மதுரை காந்தி மியூத்தில் மாற்று திறனாளிகளுக்கு அக்சயபாத்திரம் டிரஸ்ட் சார்பில் நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார் எம்எல்ஏ வழங்கினார். இதற்கான ஏற்பாட்டினை டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார். இந்த …

Read More »

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட,விராலிமலை சட்டமன்ற தொகுதியில் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட,விராலிமலை சட்டமன்ற தொகுதியில் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியை துவங்கிவைத்து, ஐந்து நாட்கள் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும்,பேருராட்சிகளிலும் மிகச்சிறப்பாக நடத்தி முடித்த புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர், அன்பிற்குரிய அண்ணன் திரு.KKசெல்லபாண்டியன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! இந்நிகழ்வை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்து,வெற்றிகரமாக நடத்திக்கொடுத்த திமுக நகர,ஒன்றிய,பேரூராட்சி,ஊராட்சி செயலாளர்களுக்கும்,காங்கிரஸ் கட்சியின் வட்டார,நகர,பேரூராட்சி ,ஊராட்சி நிர்வாகிகளுக்கும்,இந்தியா கூட்டணி நிர்வாகிகளுக்கும், ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் …

Read More »

பாரத ரத்னா திரு.ராஜிவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சத்தியமூர்த்திபவனில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை

முன்னாள் பிரதமர், பாரத ரத்னா திரு.ராஜிவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (20.08.2024) சென்னை, சத்தியமூர்த்திபவனில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தோம். பின்பு சமூக நல்லிணக்கநாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். பின்பு சத்தியமூர்த்தி பவனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமினை திறந்து வைத்தோம். நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திரு.எம்.கிருஷ்ணசாமி அவர்கள், திரு.கே.வீ.தங்கபாலு அவர்கள், திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள், தமிழ்நாடு …

Read More »

நடமாடும் வாகனங்கள் சேவை….கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 200 நடமாடும் வாகனங்கள் சேவைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தும், பயனாளிகளுக்கான ஆணைகளையும் வழங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 200 நடமாடும் வாகனங்கள் சேவைகளை, முதல்-அமைச்சர் …

Read More »

முன்னாள் பிரதமர், பாரத ரத்னா திரு.ராஜிவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை

முன்னாள் பிரதமர், பாரத ரத்னா திரு.ராஜிவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (20.08.2024) தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஏற்பாட்டில் சைதாப்பேட்டை சின்னமலையில் அமைந்துள்ள ராஜிவ்காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தோம். பின்பு சமூக நல்லிணக்கநாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். அங்கிருக்கும் கொடிக்கம்பத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தின் கொடியேற்றினோம். நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திரு.கே.வீ.தங்கபாலு அவர்கள், திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள், …

Read More »

இன்று, முன்னாள் இந்திய பிரதமர் மறைந்தார். இன்று ஸ்ரீ ராஜீவ் காந்தி பிறந்த தினம்.

இதை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் திரு. Mallikarjun Kharge மற்றும் CPP தலைவர் திருமதி. சோனியா காந்தி ஜி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தினர்.

Read More »

பாரத ரத்னா திரு ராஜீவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பெரும்புதூரில் அவரது நினைவிடமான தியாக பூமியில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மாரியாதை

இன்று (20.08.2024) இந்தியாவை உலக அரங்கில் தனித்துவமாய் காட்டிய இளம் பிரதமர் பாரத ரத்னா திரு ராஜீவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பெரும்புதூரில் அவரது நினைவிடமான தியாக பூமியில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மாரியாதை செய்தோம். பின்பு நினைவிடத்தில் நுழைவு வாயில் அருகே அமைந்துள்ள இரும்பு பெண்மணி அன்னை இந்திரா காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தோம்.

Read More »

ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் சுரேஷ் கோபி பேச்சுக்கு கண்டனம்

ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் சுரேஷ் கோபி பேச்சுக்கு கண்டனம் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் சுரேஷ்கோபி, முல்லைப் பெரியாறு அணை இடிந்தால் யார் பொறுப்பு ? நீதிமன்றம் பதில் சொல்லுமா ? அல்லது நீதிமன்றங்களில் இருந்து அத்தகைய முடிவுகளை பெறுபவர்கள் பொறுப்பேற்பார்களா ? என்று மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துகிற வகையில் விஷமத்தனமான கருத்துகளை கூறியிருக்கிறார். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். திரு.கு.செல்வப்பெருந்தகை தலைவர்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES