Monday , July 28 2025
Breaking News
Home / Kanagaraj Madurai (page 23)

Kanagaraj Madurai

மதுரை திருமங்கலத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆபேல் மூர்த்தி பங்கேற்று பேச்சு

மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில், தோட்டக்கலைத் துறை சார்பாக வழங்கப்படும் ஹைபீரிட் சீடு விதைகளை பரிசோதனை செய்யாமல் வழங்குவதால் அதன் மூலம் விளைவிக்கப்படும் பொருட்களை உண்பதால் மக்களுக்கு மலட்டுத்தன்மை, புற்றுநோய் மற்றும் மரபணுக்களில் மாற்றம் உண்டாகிறது. மேலும் தரம் இல்லாமல் உள்ளது இந்த …

Read More »

உசிலம்பட்டியில் நடந்த கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட நேதாஜி சுபாஷ் சேனை கட்சி நிர்வாகிகள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட கோரி தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த கடையடைப்பு போராட்டம் மற்றும் பேரணியில் பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் முருகன்ஜி, நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் மகாராஜன் ஆலோசனைப்படி மாநில செயலாளர் சுமன் மற்றும் மருது தேசிய கழகத்தின் தலைவர் மருதுபாண்டியன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Read More »

உசிலம்பட்டியில் நடந்த கடையடைப்பு போராட்டத்தில் அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்கம் பங்கேற்பு.!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கால்வாயில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விட கோரியும், நிரந்தர அரசாணை வேண்டி தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், வணிகர் சங்கங்கள் உட்பட பல்வேறு சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு 58 கால்வாயில் விவசாயத்திற்காக தண்ணீர் …

Read More »

சட்ட மாமேதை அம்பேத்கர் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக மாலை அணிவித்து மரியாதை

சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் ஆலோசனைப்படி, மாநில செயலாளர் சுமன் தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட பொருளார் களஞ்சியம் முருகன், மருது தேசிய கழக தலைவர் மருதுபாண்டியன் தத்தனேரி கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர் .

Read More »

மதுரை நெல்பேட்டையில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்

மதுரை நெல்பேட்டையில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் தகர்ப்பு 31 ஆண்டுகால அநீதி,பாசிச எதிர்ப்பு தின மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் எஸ்டிபிஐ கட்சியின் மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் மதுரை நெல்பேட்டை பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர்ரகுமான் துவக்க உரையும்,  வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் வரவேற்புரையும் நிகழ்த்தினர். …

Read More »

உசிலம்பட்டியில் நாளை டிச.7ல் நடைபெற உள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி ஆதரவு.

உசிலம்பட்டியில் 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட கோரி நாளை டிச.7ல் நடைபெற உள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அப்துல்கலாம் இயக்கத்தைச் சேர்ந்த வணிக பெருமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கால்வாயில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட கோரியும், நிரந்தர அரசாணை வழங்க கோரியும் …

Read More »

மதுரையில் மருத்துவர் கஜேந்திரனுக்கு விருது வழங்கி கௌரவிப்பு

ரஷியாவை தலைமையகமாக கொண்டு செயல்படும் குளோபல் பீஸ் பில்டிங் நெட்வொர்க் மற்றும் பெடரேஷன் ஆப் இன்டியன் என்ஜிஓ’ஸ் மற்றும் ஹ்யூமன் சர்விசஸ் இணைந்து சிறந்த சமூக சேவைகள் செய்தோர்களுக்கு உலக அமைதிக்கான அம்பாசிட்டர் விருதை வழங்கும் விழா மதுரை மாட்டுத்தாவணியில் தனியார் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் கொரோனா ஊரடங்கின் போது பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் பல்வேறு மருத்துவ உதவிகள் செய்ததற்காக டாக்டர் கஜேந்திரனுக்கு, “உலக அமைதிக்கான அம்பாசிட்டர்” விருதை …

Read More »

அகத்தியர் அன்னதான அறக்கட்டளை நிறுவனர் முத்துப்பாண்டிக்கு உலக அமைதிக்கான அம்பாசிட்டர் விருது வழங்கி கௌரவிப்பு.!

ரஷியாவை தலைமையகமாக கொண்டு செயல்படும் குளோபல் பீஸ் பில்டிங் நெட்வொர்க் மற்றும் பெடரேஷன் ஆப் இன்டியன் என்ஜிஓ’ஸ் மற்றும் ஹ்யூமன் சர்விசஸ் இணைந்து சிறந்த சமூக சேவைகள் செய்தோர்களுக்கு உலக அமைதிக்கான அம்பாசிட்டர் விருதை வழங்கும் விழா மதுரையில் நடைபெற்றது. இவ்விழாவில் மதுரை திருமங்கலம் அருகே கரிசல்பட்டியில் இயங்கி வரும் அகத்தியர் அன்னதான அறக்கட்டளை நிறுவனர் முத்துப்பாண்டி அவர்களுக்கு அவரின் பல்வேறு சமூக சேவைகளை பாராட்டி விதமாக நீதியரசர் வைத்தியநாதன், …

Read More »

மதுரையில் வள்ளல் பாண்டித்துரை தேவரின் சிலைக்கு முக்குலத்தோர் எழுச்சி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை

மதுரையில் தமிழ்ச்சங்கம் நிறுவிய வள்ளல் பொன்.பாண்டித்துரை தேவரின் 112 வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முக்குலத்தோர் எழுச்சி கழக பொதுச்செயலாளர் வி.ஆர்.கே.கவிக்குமார்அவர்களின் ஆலோசனைப்படி, மாவட்டச் செயலாளர் வெற்றிச்செல்வம், புறநகர் மாவட்ட செயலாளர் துரை, கோபிநாதன்,குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Read More »

மதுரையில் வள்ளல் பாண்டித்துரை தேவரின் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக மாலை அணிவித்து மரியாதை

நான்காம் தமிழ் சங்கம் கண்ட வள்ளல் பாண்டித்துரை தேவரின் 112 வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை மாநில செயலாளர் சுமன்தேவர் மற்றும் மருது தேசிய கழகத்தின் தலைவர் மருதுபாண்டியன், சுதந்திர புலிகள் கட்சி தலைவர் தத்தனேரி கார்த்திக் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Read More »
NKBB TECHNOLOGIES