Tuesday , July 1 2025
Breaking News
Home / இந்தியா (page 10)

இந்தியா

India

#BREAKING : இந்திய ஒற்றுமை யாத்திரையில் பரபரப்பு..! ராகுல் காந்தியின் ‘கான்வாய்’ வாகனம் மீது சிலர் தாக்குதல்.. தாக்குதலுக்கு பின்னால் யார்?

பீகாரில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையின் போது அவரது வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை பயணம்’ நடந்து வரும் நிலையில் வாகனம் (கான்வாய்) மீது நடத்தப்பட்ட தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலம், மால்டா என்ற இடத்தில் சென்ற போது ராகுல் காந்தியின் வாகனம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் ஒற்றுமை யாத்திராய் நடைபெற்று வரும் …

Read More »

திமுகவையும், திருமாவளவனையும் யாராலும் பிரிக்க முடியாது – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுகனூர் அருகே “வெல்லும் சனநாயகம்” மாநாடு விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. திருமாவளவனின் தேர்தல் அரசியல் “வெள்ளி விழா” திருமாவளவன் “மணிவிழா நிறைவு* இந்தியா கூட்டணி தேர்தல் வெற்றி கால்கோள் விழா ” என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் …

Read More »

கரூர் நாடாளுமன்றம் அரவக்குறிச்சி வட்டாரத்தில் 75 ஆவது குடியரசு தின விழா…

கரூர் நாடாளுமன்றம் அரவக்குறிச்சி வட்டாரத்தில், ஐயா சதாசிவம் அவர்களின் மகன் திரு. தமிழ்மணி அவர்கள் தலைமையிலும், அரவக்குறிச்சி வட்டாரம் திரு. காந்தி மற்றும் செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில், அரவக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த ஐயா சதாசிவம் அவர்களது மணிமண்டபத்தில் 75 ஆவது குடியரசு தின விழாவில் வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் முகமது அலி தேசிய கொடியேற்றி மரியாதை செய்தும், ஐயா சதாசிவம் அவர்களது திரு உருவ சிலைக்கு …

Read More »

மூன்று மந்தை 84 ஊர் சோழிய வெள்ளாளர்கள் சமூக நலச் சங்கம் சார்பில் உழவர் திருநாள் மற்றும் திருவள்ளுவர் தினம்…

17.01.2024கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டம், கூடலூர் கிராமம் பூசாரிபட்டியில் மூன்று மந்தை 84 ஊர் சோழிய வெள்ளாளர்கள் சமூக நலச் சங்கம் சார்பில் உழவர் திருநாள் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் சங்கத்தின் தலைவர் திரு. கௌரிசங்கர், செயலாளர் திரு.சண்முகராஜ், பொருளாளர் திரு.ஜெய சரவண பாலாஜி மற்றும் சங்க பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கரூர் நாடாளுமன்ற …

Read More »

திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் செல்லும் வழியில் கிரசன்ட் ஆட்டோ வாகன புகை பரிசோதனை நிலையம் திறப்பு…

திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் செல்லும் வழியில் கிரசன்ட் ஆட்டோ வாகன புகை பரிசோதனை நிலையம் திறப்பு விழா 13 -1-2024 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெற்றது. இத்திறப்பு விழாவில் ஏ எச் எஸ் ஜியாவுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்த எல் எஸ் அப்துல் ஹை முன்னிலையில் உயர்திரு அப்துல் சமது சட்டமன்ற உறுப்பினர் மணப்பாறை அவர்கள் திறந்து வைக்க, தென்னக நுகர்வோர் மற்றும் …

Read More »

“கரூர் மாவட்டத்துக்கு மோடி அரசு துரோகம் இழைத்துவிட்டது!” – குற்றம்சாட்டிய ஜோதிமணி

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலையில், தனியார் அமைப்பு சார்பில் பெண்களுக்கான நிதி கல்வியறிவு மேம்பாடு குறித்து பயிலரங்கம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜோதிமணி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்து சென்றுள்ளார். திருச்சி விமான நிலையம் யாருக்காக பிரதமர் மோடி திறந்து வைத்து சென்றுள்ளார் என்பதை பார்த்தால், விமான நிலையம் அதானிக்கு தாரைவார்த்து கொடுக்கத்தான் …

Read More »

மோடியின் கனவு தமிழ்நாட்டில் நிறைவேறாது: கே.எஸ்.அழகிரி உறுதி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி விழாவில் பிரதமர் மோடி திட்டங்களை துவக்கி வைத்து உரையாற்றும் போது வெள்ள பாதிப்புகளில் இருந்து மீள தமிழக மக்களுக்கு துணை நிற்போம் என்று உறுதி வழங்கியிருக்கிறார். வெள்ள சேதத்தை பேரிடராக அறிவித்து தமிழகத்திற்கு நிதி வழங்க பிரதமர் மோடியை நேரிலும், நேற்றைய கூட்டத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். ஒன்றிய குழு வருகை புரிந்து அறிக்கை தாக்கல் செய்ததோடு, நிதியமைச்சர் …

Read More »

காங்கிரஸில் இணைந்தார் ஒய்எஸ் ஷர்மிளா.. ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியும் காங்கிரஸில் இணைப்பு..!

ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனர் ஒய்எஸ் ஷர்மிளா இன்று டெல்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். ஒய்எஸ் ஷர்மிளா நேற்று இரவே அரசியல் காரணங்களால் டெல்லி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்குள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் இன்று காலை 11 மணியளவில் ஒய்எஸ் ஷர்மிளா கட்சியில் இணைந்தார். இவருடன் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தொண்டர்களும், ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியும் காங்கிரஸில் இணைக்கப்பட்டது. முன்னதாக நேற்று இரவு …

Read More »

போட்டியிடும் தொகுதிகள் எவை எவை ? காங்கிரஸ் இன்று எடுக்கும் முடிவு.. பரபரக்கும் டெல்லி வட்டாரம்.!

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக உருவாக்கி உள்ள இண்டியா கூட்டணி தங்களின் அடுத்த கட்ட தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து கடந்த முறை டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது விரிவாக விவாதிக்கப்பட்டது.இந்த விவாதத்தின் போது பிராந்திய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்வதற்கான குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் …

Read More »

INDIA கூட்டணியின் 4வது ஆலோசனை கூட்டம் – டெல்லியில் இன்று தொடக்கம்.!

இந்தியா கூட்டனியின் 4வது ஆலோசனை கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெற உள்ளது. 2024 மக்களவைத் தோதலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணியின் முதல் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்றன. தெலங்கானா, சத்தீஸ்கர், மத்தியப் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES