Tuesday , January 27 2026
Breaking News
Home / செய்திகள் (page 100)

செய்திகள்

All News

சீர்காழி-புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (2022 -2023) ஆம் ஆண்டுக்கான முதுநிலை பாடப்பிரிவருக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு.!

சீர்காழி-புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022_2023 ஆண்டுக்கான முதுநிலை பாடப்பிரிவருக்கு மாணவர்கள் கவிண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி-புத்தூரில் இயங்கி வருகின்ற பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-2023 ஆண்டு முதுநிலை மாணவருக்கான விண்ணப்பம் இணைய வழியில் 07.09.2022 முதல் 16.09.2022 வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்விதுறை அறிவித்துள்ளது.


சீர்காழி, புத்தூர் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை தமிழ் (MA Tamil) மற்றும் முதுநிலை அறிவியல் கணிதம் (MSc Maths) ஆகிய இரு பாடப்பிரிவுகள் மட்டும் உள்ளது. மேற்கண்ட இரு பாடப்பிரிவுக்கு மாணவ மாணவிகள் www.tngasapg.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று கல்லூரியின் முதல்வர் கி.விஜயலட்சுமி அவர்கள் கூறினார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மயிலாடுதுறை செய்தியாளர் திருமுருகன்

தரங்கம்பாடியில் உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத்துறை சார்பாக மக்கள் குறை தீர்ப்பு முகாம்.!

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை ஒவ்வொரு வட்டத்திலும் ஏதேனும் ஒரு கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடத்தி, பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்திட உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை ஆணையரால் ஆணையிடப்பட்டது.

அதன்படி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் ஆகியோர் உத்தரவின் பேரில் தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட செம்பனார்கோயில் அருகே ஆக்கூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிங்காரவேலு வரவேற்றார்.

மேற்படி முகாமில் ஊராட்சிக்கு உட்பட்ட ஆக்கூர், அன்னப்பன்பேட்டை, சவுரியாபுரம், ஆக்கூர் முக்கூட்டு, பட்டவர்த்தி, உடையவர்கோயில் பத்து புங்கையன்தோப்பு, அம்மன்கோயில்பத்து உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், பெயர் திருத்தம், பிறந்தநாள் தேதி மாற்றம், செல்போன் எண் மாற்றம், முகவரி மாற்றம், குடும்பத் தலைவர் பெயர் மாற்றம் மற்றும் அட்டை வகை மாற்றம் ஆகியவை தொடர்பாக 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அதில் 490 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு பெற்று பொதுமக்கள் பயனடைந்தனர். மீதமுள்ள 35 மனுக்கள் விசாரணைக்காக நிலுவையில் உள்ளன. முகாமில் 2 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையும், அட்டை வகை மாற்றம் தொடர்பான மனுக்களை வருவாய் ஆய்வாளர் மூலம் விசாரணை செய்திட அனுப்பி வைக்கப்பட்டும், மற்ற கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றம் செய்யவும் வட்ட வழங்கல் அலுவலர் பாபு ஒப்புதல் ஆணை வழங்கினார். இதில் கிராம நிர்வாக அலுவலர் கணேஷ்குமார், வருவாய் துறை ஆய்வாளர் ராஜ், வட்ட வழங்கல் கண்காணிப்பு குழு உறுப்பினர் சகாயராஜ், வட்ட பொறியாளர் ஐயப்பன், அங்காடி விற்பனையாளர்கள் மதன கண்ணன், சோமு, மணிகண்டன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மயிலாடுதுறை செய்தியாளர் திருமுருகன்

அதிமுகவில் இருந்து விலகி தேமுதிக கட்சியில் இணைந்த மதுரை நிர்வாகி.!!

அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் பகுதி கழகச் செயலாளராக இருந்த இரா.அரவிந்தன் அக்கட்சியில் இருந்து விலகி, சென்னையில் தேமுதிக தலைமை கழக அலுவலகத்தில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், முன்னிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.




ஏற்கனவே இவர் தேமுதிகவில் மாவட்ட செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் போது உயர்மட்ட குழு உறுப்பினர் ஜெ.பாலன், மதுரை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன், மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வி.பி.ஆர்.செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

வைகை திருமங்கலம் பிரதான கால்வாய் அணைப்பட்டி பேரணையில் இருந்து தண்ணீர் திறப்பு

வைகை திருமங்கலம் பிரதான கால்வாய் அணைப்பட்டி பேரணையில் இருந்து 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாசனம் பெறும் அணையை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஞானசேகரன், செயற்பொறியாளர் ,
அன்புச்செல்வன்,
துணை செயற்பொறியாளர்
அன்பு தலைமையில்
வைகை திருமங்கலம் பிரதான கால்வாய் பாசன கோட்ட தலைவர்கள் எம்.பி.ராமன் , தங்கராஜ், பகவான்,தியாக ராஜன்,ஆர்.பாண்டியன் மற்றும் விவசாய பிரதிநிதிகள் முன்னிலையில் உதவி பொறியாளர்கள் செல்லையா, கோவிந்தராஜன், பிரபாகரன், தளபதி, ராம்குமார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு அணையை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் பெரியாறு வைகை திருமங்கலம் பிரதான கால்வாய் விவசாய சங்க கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரை மாடக்குளம் ஸ்ரீ வில்லாயுதமுடைய அய்யனார் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

மதுரை மாடக்குளம் ஸ்ரீ வில்லாயுதமுடைய அய்யனார், ஸ்ரீ முத்தையா சுவாமி, ஸ்ரீ நாகப்பா சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமியின் அருள் பெற்று சென்றனர்.

விழா ஏற்பாடுகளை திருப்பணி குழு மற்றும் கணக்குப்பிள்ளை வகையறா பங்காளிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

மதுரையில் வ.உ.சி சிலைக்கு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில மகளிரணி தலைவி அன்னலட்சுமி ஷகிலா மாலை அணிவித்து மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில மகளிரணி தலைவி அன்னலட்சுமி ஷகிலா கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தென்னக மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் ஐயப்பா கார்த்தி பங்கேற்றார்.

திரு. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைப் பயணம்” வெற்றிபெற வாழ்த்து – தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின்

அன்புச் சகோதரர் திரு. ராகுல் காந்தி அவர்கள், இந்தியாவின் ஆன்மாவை மீட்டெடுக்க, நமது குடியரசின் உயர் விழுமியங்களை உயர்த்திப் பிடிக்க, நாட்டு மக்களை அன்பால் ஒன்றிணைப்பதற்கான பயணத்தை இன்று தொடங்கியிருக்கிறார்.

சமத்துவத்தின் சின்னமான வள்ளுவர் சிலை உயர்ந்து நிற்கும் குமரிமுனையைக் காட்டிலும் இந்த “இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கப் பொருத்தமான இடம் வேறு இருக்கமுடியாது. மதத்தால் பிளவுபடுத்தலும், கேடு விளைவிக்கும் வெறுப்புப் பரப்புரைகளும் மக்களின் மனங்களை மூழ்கடித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவை ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் அரும்பணியை நாட்டின் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் பேரியக்கம் முன்னெடுத்துள்ளது.

பெருமைமிகு நமது குடியரசை மீண்டும் கண்டெடுக்கும் தனது நோக்கத்தில் “இந்திய ஒற்றுமைப் பயணம்” வெற்றிபெற வாழ்த்துகிறேன். -தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின்

மதுரையில் நோபல் உலக சாதனை புரிந்த மாணவி அபிநிதா.!

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்துமதி மற்றும் பி.டி.ஆர் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் தனவேலன் ஆகியோர் முன்னிலையிலும், 18-ஆம் படி சிலம்பம் அகாடமியின் தலைமை ஆசான் சிலம்பு செல்வன் மாரிமுத்து மற்றும் நோபல் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் புரொபஷனல் எடிட்டர் தியாகராஜன் அவர்களின் தலைமையிலும் நோபல் உலக சாதனை முயற்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மதுரையை சேர்ந்த சிலம்புச்செல்வன் மாரிமுத்து- கல்யாணி ஆகியோரின் மகள் 9-ம் வகுப்பு பயிலும் மாணவி அபிநிதா (வயது 14) இடைவிடாது இரண்டு மணி நேரம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை படைத்தார். அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மதுரை விளாங்குடியில் நடந்த கந்தன் திருமண விழாவில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்து.!

மதுரை விளாங்குடியில் கந்தன் என்ற கந்தசாமி திருமண விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட முன்னாள் கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ, ஜெயந்தி ராஜூ ரம்யா கணேஷ்பிரபு மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் ராஜா, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ் பாண்டியன், அவைத்தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் பா.குமார், மாமன்ற உறுப்பினர்கள் சோலைராஜா,பி.கே.எம்.மாரிமுத்து,பி.ஆர்.சி.கிருஷ்ணமூர்த்தி, நாகஜோதி சித்தன்,அதிமுக பகுதி செயலாளர் சித்தன்,20 வது வார்டு வட்டக்கழக செயலாளர் மார்க்கெட் மார்நாடு, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவனத்தலைவர் திருமாறன் ஜி, முக்குலத்தோர் எழுச்சி கழகம் பொதுச்செயலாளர் வி.ஆர்.கே கவிக்குமார், பாஜக மாவட்ட செயலாளர் வேங்கை மாறன், உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மதுரையில் பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவனத்தலைவர் திருமாறன் ஜி மாலை அணிவித்து மரியாதை.!

பி.கே மூக்கையா தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை அரசரடி பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவனத்தலைவர் திருமாறன் ஜி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில செயலாளர் மாரிமறவன்,மாநில தொண்டரணி தலைவர் ஸ்ரீ ராம்ஜி, மாநில தொழிற்சங்க துணைத்தலைவர் விருமாண்டி, மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் தெய்வசக்தி, மாவட்ட தலைவர் மருதுஆனந்த், மாவட்ட பொதுச் செயலாளர் ஊமச்சிகுளம் சுரேஷ்,மாவட்ட செயலாளர் கமல் உள்பட நிர்வாகிகள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES