Tuesday , January 27 2026
Breaking News
Home / செய்திகள் (page 105)

செய்திகள்

All News

மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக பட்டிமன்ற நிகழ்ச்சி.!

75 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக, இன்றைய இளைஞர்கள் எங்கே போகிறார்கள் திட்டமிட்ட பாதையிலா? திசை தெரியாமலா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

திட்டமிட்ட பாதையிலே என்ற தலைப்பில் போத்திராஜன், திருமலை முருகன், மாரிக்கண்ணன் ஆகியோரும், திசை தெரியாமலே என்ற தலைப்பில், கீதா பாபு, சினேகா, கவிஞர் துர்கா தேவி ஆகியோர் பேசினர்.

இந்நிகழ்ச்சிக்கு நடுவராக பங்கேற்ற டாக்டர் சண்முகம் திருக்குமரன், இளைஞர்கள் திட்டமிட்ட பாதையிலே தான் செல்கிறார்கள் என்ற தீர்ப்பை வழங்கினார்.

இந்நிகழ்வில் சபாராம் மருத்துவமனை டாக்டர் பாலசுப்ரமணியன்,தொழிலதிபர் பழனிவேல், திரைப்பட இயக்குனர் ரத்தினசாமி, முருகேசன், திருஞானசம்பந்தம்,போஸ் உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் டிரஸ்ட் அறங்காவலர் சோலை எஸ்.பரமன் நன்றியுரை கூறினார்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் வி.பி.ஆர்.செல்வகுமார் அவர்களின் இல்ல விழா.!

தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன், கழக பொருளாளர், அண்ணியார் அவர்களின் நல்லாசியுடன், கழக உயர்மட்டகுழு உறுப்பினர், ஜெ.பாலன் அவர்களின் ஆசியுடன் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வி.பி.ஆர்.செல்வகுமார் அவர்களின் மகள் மதுமிதா அவர்களின் இல்ல காதணிவிழா மதுரை- பாண்டிகோவில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

குழந்தை செல்வங்கள் பாலமுருகன் (எ) விஸ்வந்த், யஷ்வந்த் ஆகியோருக்கு கழக நிர்வாகிகள் பலர் வாழ்த்தினர்.

இவ்விழாவில் மாவட்ட அவைத் தலைவர் பாண்டியராஜ், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் பா.மானகிரியார், ராமு,செயற்குழு உறுப்பினர் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் சின்னச்சாமி, மாரிமுத்து,பகுதி கழகச் செயலாளர்கள் கோவிந்தராஜ், மேலமடை அய்யப்பன், தெய்வேந்திரன், கோல்டு முருகன், இளங்கோ, மாணவரணி செயலாளர் காளீஸ்வரன், நெசவாளர் அணி செயலாளர் பிரகாஷ், தொண்டரணி செயலாளர் வீரா, வர்த்தக அணி செயலாளர் பாண்டி, மாவட்ட செயல் வீரர் ரமேஷ்பாபு, பகுதி அவை தலைவர் கவிஞர் மணிகண்டன், வட்டக்கழக செயலாளர்கள் சுப்பிரமணி, சௌந்தரராஜன், துணைச் செயலாளர் அய்யனார் உள்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரை ஐராவதநல்லூரில் 41 வது வார்டு பாஜக சார்பாக சுதந்திர தின விழா.!

மதுரை மாநகர் மாவட்டம் 41வது வார்டு ஐராவதநல்லூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாரத பிரதமர் மோடி அவர்கள் ஆணைக்கிணங்க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் 75வது சுதந்திர தின விழா வார்டு தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

அனுப்பானடி மண்டல் பொதுச் செயலாளர் ராம்தாஸ் முன்னிலை வகித்தார்.. காவல்துறை ஓய்வு ஆய்வாளர் தங்கவேல், கிளைத்தலைவர் சுந்தரபாண்டி சாமி ஆகியோர் தேசிய கொடி ஏற்றி வைத்தனர்..

மாவட்ட கூட்டுறவு பிரிவு துணைத்தலைவர் மீசை முருகேசன் இனிப்பு வழங்கினார்..விழாவில் மாவட்ட மீனவர் அணி துணைத் தலைவர் கார்த்திக் ராஜா, மாவட்ட வர்த்த அணி செயலாளர் கோபாலா கிருஷ்ணன், மாவட்ட மகளிரணி செயலாளர் அம்பிகா, அனுப்பானடி மண்டல் துணைத்தலைவர்கள் ராஜசேகரன், ராஜீவ் காந்தி, செயலாளர் முருகன், மண்டல் கூட்டுறவு தலைவர் மகேசுவரன், துணைத்தலைவர் ராமராஜ், இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் ராஜ மதன், கிளைத்தலைவர்கள் செந்தில்குமார், கார்த்திக், பன்னீர் செல்வம், வண்டு முருகன், மோகன் . திரவியம் , முருகன், சுந்தரபாண்டி, தங்கபாண்டி, மலைச்சாமி, கிளிராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்திய அளவில் சிலம்பம் விளையாட்டில் சாதனை படைத்த இளம் பயிற்சியாளர் ஹரிணிக்கு குவியும் பாராட்டு.!

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில், சிலம்பம் கலையினை மாற்றுத் திறனாளிக்கு பயிற்சியளித்து இந்திய அளவில் முதல் பெண் என்ற சாதனை புரிந்த SRWWO பள்ளி மாணவி ஹரிணிக்கு, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் விருது வழங்கி கௌரவித்தார்! அருகில் ஹரிணி தந்தை சரவணபாண்டி உள்ளார்.

ஹரிணி இதுவரை 40 விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!ஹரிணியை பொதுமக்கள் மற்றும் சமூக சேவகர்கள் பாராட்டி வருகின்றனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியம், இரணியம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்.!

இந்திய நாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியம், இரணியம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா தேசியக்கொடியை ஏற்றி வைத்து கிராம பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

பின்னர் நடந்த கிராம சபை கூட்டத்தில் கிராம பொதுமக்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வசந்தி சிவலிங்கம், ஊராட்சி செயலர் கணேஷ்பிரபு, வார்டு உறுப்பினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார செவிலியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியம், இரணியம் ஊராட்சியில் கிராம சபைக்கூட்டம்

இந்திய நாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியம், இரணியம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா தேசியக்கொடியை ஏற்றி வைத்து கிராம பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

பின்னர் நடந்த கிராம சபை கூட்டத்தில் கிராம பொதுமக்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வசந்தி சிவலிங்கம், ஊராட்சி செயலர் கணேஷ்பிரபு, வார்டு உறுப்பினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார செவிலியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் 75ஆம் நாள் வெற்றி விழாவை முன்னிட்டு, மதுரை சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.!

பத்மஸ்ரீ கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் 75ஆம் நாள் வெற்றி விழாவை முன்னிட்டு, மதுரை மதிச்சியம் பகுதியில் உள்ள ஷா தியேட்டரில் வடக்கு தொகுதி மக்கள் நீதி மையம் சார்பாக சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் தலைமையில் திரைப்படத்தை காண வந்த ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

மேலும் திரையரங்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்து புத்தாடைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மண்டல செயலாளர் எம்.அழகர், சீனிவாசன், குணாஅலி, வண்டியூர் முருகன், கமல் நாகேந்திரன், நாகராஜ், மாரிமுத்து, சேக்முகமது, கரிசல்குளம் முருகன், சுரேஷ், பூமிராஜா, கணேசன், சீனி, சமூக ஆர்வலர் மகேந்திரன் ஜி, எஸ்.பி ஆசைத்தம்பி, செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம், காதக்கிணறு ஊராட்சியில் கிராம சபை கூட்டம்.!

75ம் ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம், காதக்கிணறு ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

பின்னர் நடந்த கிராம சபை கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆரோக்கிய ஜெயந்தி ஸ்டாலின் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள், கிராம நிர்வாக அலுவலர், தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார செவிலியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் ஊராட்சியின் வரவு,செலவு கணக்குகளை கிராம பொதுமக்களிடம் ஊராட்சி செயலர் செல்லப்பா விவரித்து பேசினார்.

மேலும் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் அவர்களின் சிறிய முயற்சியால், பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய டிராக்டர் மற்றும் ட்ரெய்லர் கிராமத்தின் தூய்மை பணிக்காக வாங்கப்பட்டு, கிராம சபை கூட்டத்தின் போது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. இதை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

மேலும் அன்னை தெரசா கார்டன்,ஜெம் ரெசிடென்சி பகுதிகளில் பொதுமக்கள் பங்களிப்புடன், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கழிவுநீர் வாய்க்கால் பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. சுத்தம், சுகாதாரம், தெருவிளக்கு போன்றவைகளுக்கு முன்னுரிமை தரப்பட்டு ஊராட்சியில் உடனுக்குடன் குறைகள் சரி செய்யப்பட்டு வருவதாக ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் தெரிவித்தார்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

சர்வ சமய ஒற்றுமைக்கு பாடுபட்டவர் ஜெயேந்திரர்: எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜன் புகழாரம்.!

சர்வ சமய ஒற்றுமைக்காக மிகவும் பாடுபட்டவர் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்று எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜன் பேசினார்.

மதுரை அனுஷத் தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில், காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமி களின் 88 ஆவது ஜெயந்தி விழா மதுரை எஸ்.எஸ்.காலனி ஸ்ரீ மகா பெரியவா கோவிலில் நடை பெற்றது. இதில், எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜன் ‘ குருவே சரணம் என்ற தலைப்பில் பேசினார் அவர் தனது உரையில் பேசியதாவது ஸ்ரீ மகா பெரியவர் என்ற நல்ல குருவின் சிஷ்யராக ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் விளங்கி னார்.குரு பக்திக்கு இலக்கண மாக திகழ்ந்தவர் ஸ்ரீ ஜெயந்திரர். நிறைய சத் காரியங்களை ஸ்ரீ ஜெயந்திரர் செய்திருக்கிறார். ஆன்மீக கல்வி சாலைகள் மருத்துவ மனைகள்”, கோவில்கள் சீரமைப்பு, வேத விற்பன்னர் களை கௌரவித்தல், போன்ற நிறைய காரியங் களை செய்திருக்கிறார். சர்வ சமய ஒற்றுமைக்கு இலக்கண மாக திகழ்ந்தவர். குருவின் கட்டளையை ஏற்று எதை செய்தாலும் அது சிறப்பு. யோக சக்தி இருந்தால் நாம் உலகில் எதையும் சாதிக்கலாம் என்று காஞ்சி பெரியவர் சொல்கிறார். ஹோமம், யாகத்தை செய்கிற போது அதில் பலன் கிடைக்கும். மந்திரங்க ளில் காயத்ரியும் விரதங்களில் ஏகாதசியும் சிறந்தது. எந்த காரியத் தையும் மனப் பூர்வமாக பக்தியோடு வழிபாடு செய்தால் அங்கு தேவர்கள் வருவார்கள். இன்று ஸ்ரீ மகா பெரியவர் போல ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமி களும் தோன்றாத் துணையாக நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.பக்தி மார்க்கத்தில் ஆதிசங்கரர் ராமானுஜர் மத்வாச்சாரியார் என்ற குருமார்கள் மூன்று அருள் கொள்கை களை நமக்கு தந்திருக்கிறார்கள். உலகத்தில் குரு வழிபாடு என்பது பாரத தேசத்தில் மட்டும்தான் உள்ளது. குருவின் அருள் இருந்தால் நாம் எதையும் சாதிக்கலாம். உலகம் என்பது வீடானால் பாரத தேசம் எனது பூஜை அறை என்கிறார் சுவாமி விவே கானந்தர். இந்தியா வின் யோக கலை உலக மெங்கும் விஸ்வரூபம் இன்று எடுத்து இருக்கிறது. இந்த மண்ணில் தோன்றிய குருமார்கள் குருநாதர்கள் உலகை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆதிசங்கரர் பரமேஸ்வரனின் அவதாரம் என்கிறார் ஸ்ரீ மகா பெரியவர். இவ்வாறு எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜன் பேசினார். முன்னதாக ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமி களின் திரு உருவப்படத்திற்கு கல்யாண சாஸ்திரிகள் தலைமை யில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.நிகழ்ச்சி ஏற்பாட்டினை அனுஷத் தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந் தார்.

மதுரை மாவட்டம் கப்பலூரில் ரோட்டரி சங்கங்கள் மூலம் 46 ஆயிரம் மரங்களுடன் மியாவாக்கி குறுங்காடுகள்.!

ரூபாய் 30 லட்சம் செலவில் கப்பலூரில் மதுரை ரோட்டரி சங்கங்கள் மூலம் 46 ஆயிரம் மரங்களுடன் மியாவாக்கி குறுங் காடுகள் மதுரையில் உள்ள 8 ரோட்டரி சங்கங்கள் மூலம் ரூபாய் 30 லட்சம் செலவில் 46 ஆயிரம் மரங்களுடன் கூடிய மியாவாக்கி குறுங்காடுகள் கப்பலூரில் உருவாக்கப் பட்டு வளர்ந்துள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு மதுரை இன்னோ வேட்டர்ஸ் ரோட்டரி சங்கமும் மெட்ரோ ஹெரிடேஜ் ரோட்டரி சங்கமும் முன்னிலை வகித்து மற்ற 6 ரோட்டரி சங்கங்களுடன் இணைந்து கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள திறந்த வெளி இட ஒதுக்கீடான சுமார் 4.25 ஏக்கரில் ஏறக்குறைய ரூ.30 லட்சம் செலவில் 46,000 மரக்கன்றுகளை மியாவாக்கி முறையில் குறுங்காடாக ஏப்ரல் 2021ல் நட்டு உருவாக்கினார்கள்.

அம்மரக்கன்றுகள் 16 மாதங்களில் 10 சதவிகித வளர்ச்சியை எட்டி ஒரு அடர்ந்த அழகிய வனமாக தோற்றமளிக்கிறதென இத்திட்டத்தின் தலைவர் சசி போம்ரா பெருமிதத்துடன் கூறினார்.
இந்த குறுங்காட்டினை ரோட்டரி 3000 மாவட்ட ஆளுநர் தேர்வு ஆனந்த ஜோதி தியாகராஜா மில்ஸ் நிர்வாக இயக்குனர் ஹரி தியாகராஜன் மற்றும் ரோட்டரி சங்க தலைவர்கள் பார்வையிட்டனர்.


இத்திட்டத்திற்கு மும்பையிலுள்ள சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தங்களுடைய சமூக நல நிதி யிலிருந்து ரூ.10 லட்சம் அளித்துள்ளனர். மேலும், விகாஸா பள்ளியின் 1984 மற்றும் 1985 ம் வருட மாணவர்கள் இணைந்து இத்திட்டத்திற்கு ரூ. 5 லட்சம் வரை உதவி புரிந்துள்ளனர்.

இம்மரங்களின் நீண்ட நெடிதுயர்ந்த வளர்ச்சிக்காக முதல் 18 மாதங்களுக்கு நீர் பாய்ச்சல், களையெடுத்தல் மற்றும் கத்தரித்தல் ஆகிய பணிகளை கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இது சம்பந்தமான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் ரோட்டரியுடன் இணைந்து கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கம் கையெழுத்திட்டுள்ளது என அச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. முகேஷ் அகர்வால் குறிப்பிட்டார். பதினாறே மாதங்களில் ஒரு அருமையான அடர்வனம் உருவாகியுள்ளது. அதிலும் சில மரங்கள் 12 அடியிலிருந்து 15 அடி வரை கம்பீரமாக வளர்ந்து உள்ளது

இத்திட்டத்தின் ஆக்கம் மற்றும் பராமரிப்பு பணிகள் சக்திவேல் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES