Tuesday , January 27 2026
Breaking News
Home / செய்திகள் (page 11)

செய்திகள்

All News

பாரத ரத்னா ராஜிவ்காந்தி அவர்களின் 80 ஆவது பிறந்தநாள் ஆகஸ்ட் -20 ஆம் தேதி

May be an image of 1 person and smiling

இந்தியாவை 21 ஆம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்வேன் என்று உறுதிபூண்ட ராஜிவ்காந்தி உலகமே வியக்கும் வகையில் ஒப்பற்ற சாதனைகளை நிகழ்த்தினார். தமது 40 ஆவது வயதில் இந்திய நாட்டின் இளைய பிரதமராக பொறுப்பேற்று அவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் தான் இந்த நாட்டின் வறுமையை விரட்ட உதவும் என்று நம்பியவர். இன்று அறிவியல் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு அன்றே வித்திட்டவர். நாட்டை எதிர்நோக்கியிருந்த பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு திறந்த மனதுடன் பல முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டவர்.

ஜனநாயகத்தில் அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிந்திருப்பதை தடுத்து நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றுக்கு அடுத்த நிலையில் பஞ்சாயத்து ராஜ், நகர்பாலிகா என்கிற அமைப்புகளை உருவாக்கி மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்தை அரசமைப்புச் சட்ட திருத்தத்தின் மூலம் உருவாக்குவதில் வெற்றி கண்டவர். இதன்மூலம் ஜனநாயகத்தை பரவலாக்கினார். இலங்கை தமிழர்களின் 40 ஆண்டுகால பிரச்சினையை தீர்க்க உடன்பாடு கண்டவர். இலங்கையில் தமிழர் ஆட்சியை உருவாக்கி, தமிழை அரியணையில் ஏற்றி, தமிழ் தாயகப் பகுதியை உருவாக்கியவர் ராஜிவ்காந்தி. இந்தியாவின் சிறந்த வல்லமைமிக்க பிரதமராக அவர் சுடர்விட்டார். இந்தியாவை பற்றி ராஜிவ்காந்திக்கு நிறைய கனவுகள் இருந்தது. இந்தியாவும், இந்தியர்களும் உலகில் முன்னணியில் இருக்க வேண்டுமென்று ராஜிவ்காந்தி கனவு கண்டார். அதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். இந்திய நாட்டின் பிரதமராக ஐந்தாண்டுகளில் தேசிய, சர்வதேச அரங்கில் உலகம் போற்றும் வகையிலே சாதனைகளை படைத்து இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற தலைவராக விளங்கினார்.

தமிழ்நாட்டு மக்களோடு ராஜிவ்காந்தி கொண்டிருந்த நெருக்கமும், அன்பும் அளவற்றவை. 1988 ஆம் ஆண்டில் 13 முறை தமிழகத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிராமம் கிராமமாக அவரே வாகனத்தை ஓட்டிச் சென்று வழிநெடுக மக்களை சந்தித்து அவர்களோடு உரையாடி, அவர்களது பிரச்சினைகளை அறிந்து ஏழை, எளிய மக்கள் மீது அன்பை பொழிந்தவர். தமிழ் மக்களின் பாச வெள்ளத்தில் திளைத்தவர். எதிர்கால இந்தியாவுக்கு இன்னும் 50 ஆண்டுகளுக்கு மக்களின் ஆதரவோடு வழிநடத்தக் கூடிய ஆற்றல்படைத்த தலைவராக திகழ்ந்த ராஜிவ்காந்தி, 1991 தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது, தமிழ் மண்ணில் ஸ்ரீபெரும்புதூரில் பயங்கரவாத சக்திகளின் சதித் திட்டத்தினால் நயவஞ்சகமாக நம்மிடமிருந்து பறிக்கப்பட்டார். அவரது நினைவை தமிழக மக்களிடமிருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.

பாரத ரத்னா ராஜிவ்காந்தி அவர்களின் 80 ஆவது பிறந்தநாளான ஆகஸ்ட் 20 ஆம் தேதி அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் அவரது திருவுருவப் படத்தை வாகனங்களில் அலங்கரித்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிநெடுக அவரது ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளின் துண்டு பிரசுரத்தை விநியோகிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்நிகழ்வை மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராமம் என அனைத்து நிலைகளிலும் நடத்தி மறக்க முடியாத மாபெரும் தலைவர் ராஜிவ்காந்தியின் நினைவை போற்றுவோம்.

தலைவர் திரு. கு .செல்வப்பெருந்தகை

நரேந்திர மோடி அரசியலமைப்பை தாக்குகிறார்.

May be an image of 1 person, beard and text

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்குப் (UPSC) பதிலாக ‘ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்’ (RSS) மூலம் அரசு ஊழியர்களை நியமிப்பதன் மூலம், நரேந்திர மோடி அரசியலமைப்பை தாக்குகிறார்.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள முக்கியமான பதவிகளில் லேட்டரல் என்ட்ரி மூலம் ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் SC, ST மற்றும் OBC பிரிவினரின் இடஒதுக்கீடு வெளிப்படையாகப் பறிக்கப்படுகிறது.

நாட்டின் உயர்மட்ட அதிகாரத்துவம் உட்பட அனைத்து உயர் பதவிகளிலும் தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதித்துவம் பெறவில்லை என்று நான் எப்போதும் கூறி வந்தேன்.

இதை சரி செய்வதற்கு பதிலாக, குறுக்குவழி மூலம் அவர்கள் உயர் பதவிகளில் இருந்து மேலும் வெளியே தள்ளப்படுகிறார்கள்.

இது UPSCக்குத் தயாராகும் திறமையான இளைஞர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகவும், தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதியின் மீதான தாக்குதலாகவும் உள்ளது.

ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களின் பிரதிநிதிகள், முக்கிய அரசாங்கப் பதவிகளை ஆக்கிரமிப்பதன் மூலம் என்ன செய்வார்கள் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் SEBI. அங்கு முதல்முறையாக தனியார் துறையைச் சேர்ந்த ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிர்வாக அமைப்பு மற்றும் சமூக நீதி இரண்டையும் புண்படுத்தும் இந்த தேச விரோத நடவடிக்கையை இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்க்கும்.

இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர, ‘ஐ ஏ எஸ்’ பணியை தனியார்மயமாக்குவதுதான் ‘மோடியின் உத்தரவாதம்’.

– மக்கள் தலைவர் திரு . ராகுல் காந்தி.

உலக மனிதாபிமான தினம்

May be an image of 9 people and text

உலக மனிதாபிமான தினம் என்பது, மனிதகுலத்திற்கான உலகளாவிய முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசு எடுத்த முயற்சிகள், வறுமை ஒழிப்பு, கிராமப்புற மேம்பாடு மற்றும் சமூக நீதி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த நாள் மனிதாபிமான காரணங்களை ஆதரிப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறதோடு, வாழ்க்கை மற்றும் சமூகங்களை மேம்படுத்துவதற்கான பங்களிப்புகளை அங்கீகரிக்கிறது.

திண்டுக்கல்லில் இந்தியன் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் தென் மண்டல மாநாடு…

இந்தியன் பத்திரிக்கையாளர்கள் சங்கம் தென் மண்டல மாநாடு திண்டுக்கல்லில் இன்று காலை 10 மணிக்கு பிச்சாண்டி பில்டிங் வருவாய் துறை அலுவலர் சங்கத்தில் திரு பி.பி நடராஜன் மாநில துணை அமைப்பாளர், ஐபிசி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் வரவேற்புரை திண்டுக்கல் மாவட்ட தலைவர் திரு. சந்திரன் மற்றும் திண்டுக்கல் மாவட்ட செயலாளர், பி.ஆர்.டி ராஜா அவர்கள் வரவேற்புடன் இனிதே நிகழ்ச்சி ஆரம்பித்தது.

முகமது மைதீன் மாநில செயலாளர் அவர்கள் சிறப்புரை மற்றும் பின்னர் விழா பேருரை ஐபிசி மாநில தலைவர் திரு. சாம் திவாகர் அவர்கள் ஆற்றினார்கள். திரு. பிரபு மாநில துணைத்தலைவர், திரு. செல்லப்பாண்டி மாநில துணைத்தலைவர், திரு. அன்பரசு மாநில அமைப்பாளர், திரு. துரைப்பாண்டி மாநில செயற்குழு உறுப்பினர், திரு. சந்திரசேகர பெருமாள் மாநில செயற்குழு உறுப்பினர், திரு. பாலமுருகன் ஐடி விங் மாநில செயலாளர், திரு. போஸ் மாநில செயற்குழு உறுப்பினர், திரு. அலெக்சாண்டர் மாநில செயற்குழு உறுப்பினர், திரு. ஜெயபிரகாஷ் மாநில செயற்குழு உறுப்பினர், திரு. மலர் சின்னத்தம்பி மாநில செயற்குழு உறுப்பினர், திரு. அருண்குமார் மாநில செயற்குழு உறுப்பினர், திரு. ஸ்டாலின் மேற்கு மாநில துணை செயலாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டு விழா சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் ஐபிசி மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

திரு. காதர் சுல்தான் கரூர் மாவட்ட துணைத் தலைவராக இம்மாநாட்டில் ஐபிசி மாநில தலைவர் திரு. சாம் திவாகர் அவர்களால்அறிவிக்கப்பட்டார்.

டாக்டர் ஜி.சஞ்சீவ ரெட்டி Ex. MP அவர்களுக்கு பாராட்டு விழா காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார்…

Image

இன்று (17.08.2024) தமிழ்நாடு தேசிய மின்சார தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொதுக்குழு, மாநில மாநாடு மற்றும் ஐ.என்.டி.யு.சி (INTUC) யின் அகில இந்திய தலைவர் டாக்டர் ஜி.சஞ்சீவ ரெட்டி Ex. MP அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் முப்பெரும் விழாவில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சசிகாந்த் செந்தில் (Retd. IAS) அவர்கள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டேன்.

காமராஜர் அறக்கட்டளை மூலமாக மாணவர்களுக்கு ‘கல்வி உதவித் தொகை’ வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

Image

சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் வரும் (20.08.2024) செவ்வாய் கிழமை அன்று காமராஜர் அறக்கட்டளை மூலமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு ‘கல்வி உதவித் தொகை’ வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

மேற்கண்ட நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து மூன்று மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் இன்று (17.08.2024) சென்னை, சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடைபெற்றது.

காமராஜர் அவர்களின் நினைவு இல்லத்தைப் பார்வையிட்டார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை

Image

விருதுநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போது, தமிழகத்தில் கல்விப் புரட்சி, அதிகப்படியான அணைக்கட்டுகள், மக்களுக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்களை வழங்கி மக்களின் நலனுக்காக மட்டுமே வாழ்ந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு இல்லத்தைப் பார்வையிட்டார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை அவர்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார் .

இன்று (17.08.2024) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரர் டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்தநாள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களது இல்லத்தில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் திரு.சொர்ணா சேதுராமன் மற்றும் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் சிவ.ராஜசேகரன் அவர்களுடன் கலந்து கொண்டார்.

விருதுநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் சந்திப்பு கலந்தாய்வு கூட்டம்

Image

விருதுநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் சந்திப்பு கலந்தாய்வு கூட்டம் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் திரு.ஸ்ரீராஜா சொக்கர், விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் திரு. A ரங்கசாமி ஆகியோர் தலைமையில் V V V அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் . இந்நிகழ்வில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு.எஸ்.ராஜேஷ்குமார், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம் தாகூர் MP, திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் திரு ராபர்ட் ப்ரூஸ், மூத்த தலைவர் திரு திருச்சி வேலுசாமி, துணைத்தலைவர் திரு.சொர்ணா சேதுராமன், அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு லெனின் பிரசாத், பொது செயலாளர் திரு D செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதனை தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் மற்றும் அவர்களின் வழித் தோன்றல்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள், பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

கல்வராயன் மலைவாழ் மக்களுடன்RGPRS அமைப்புகலாச்சார கலந்தாய்வு முகாம்

ராஜீவ்காந்தி பஞ்சாயத்ராஜ் சங்கதன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இரண்டு மாநிலங்களும் இணைந்து ஜூலை 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் (இரண்டுநாள் முகாம்) கல்வராயன்மலை மக்களின் வாழ்வாதாரம் குறித்த ஆய்வு முகாம் நடைபெற்றது.

மலைவாழ் மக்களின் இல்லங்களில் உண்டு, உரையாடி, தங்கி அவர்களின் நிலை அறிந்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து வெள்ளிமலையில் நடைபெற்ற சுதந்திரதின கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களின் கோரிக்கைகள் தீர்மானமாக வைக்கப்பட்டது.
முன்னதாக சுதந்திரதினத்தை கொண்டாடும் விதமாக தேசியக்கொடி ஏற்றப்பட்டும், மரக்கன்று நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் Dr.S.சசிகுமார், புதுவை மாநில ஒருங்கிணைப்பாளர் Dr.சு.அமுதரசன்,

YouTube player

பஞ்சாயத்துராஜ் தேசிய செயலாளர் கடலூர் க.ரமேஷ், மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் N.சுகுமார், திரு.அண்ணாதுரை, ST பிரிவு மாநில பொது செயலாளர் திரு.சரவணன், வாழப்பாடி மணிமாறன், புதுச்சேரி மாநில பஞ்சாயத்து ராஜ் பொதுச்செயலாளர்கள் அரங்க.முருகையன், கோவிந்தன், புஷ்பராஜ் இவர்களுடன் தமிழ்நாடு மற்றும் புதுவை மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பஞ்சாயத்து ராஜ் காங்கிரஸ் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்,

இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு பணியை
கள்ளக்குறிச்சி மாவட்ட பஞ்சாயத்து ராஜ் ஒருங்கிணைப்பாளர் N.செந்தில்குமார் செய்திருந்தார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES