Tuesday , January 27 2026
Breaking News
Home / செய்திகள் (page 34)

செய்திகள்

All News

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு தினத்தை முன்னிட்டு, பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளை சார்பாக மாலை அணிவித்து மரியாதை..!

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளை சார்பாக மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.ஆர் சுரேஷ்பாபு தலைமையிலும்,
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமாறன், நாஞ்சில் பால்ஜோசப் பூக்கடை கண்ணன், பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் முத்துக்குமார், தொழிற்சங்க மதுரை மாவட்ட தலைவர் எஸ் என் பாலாஜி ஆகியோர் முன்னிலையிலும்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளர் போஸ், பகுதி தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் மணிவேல், இளைஞரணி குருபிரசாத், சரவணன், அய்யர் பாலாஜி, மகளிரணி பஞ்சவர்ணம், வார்டு தலைவர்கள் குமரகுரு, கோபால், மொக்கச்சாமி, உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை ஆழ்வார்புரத்தில் பெருந்தலைவர் நடிகர் திலகம் அறக்கட்டளை அலுவலகத்தில் பிறந்தநாள் விழா..!

காங்கிரஸ் கட்சி முன்னாள் மதுரை மாநகர் மாவட்ட தலைவரும், ஐ.என்.டி.யூ.சி தமிழக முன்னாள் தலைவருமான கே.எஸ். கோவிந்தராஜன் மற்றும் தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்க தேசிய பொதுச் செயலாளர் கே.எஸ்.ஜி குமார் ஆகியோர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதுரை ஆழ்வார்புரம் பகுதியில் உள்ள பெருந்தலைவர் நடிகர்திலகம் அறக்கட்டளை அலுவலகத்தில் பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் ஜி.முத்துக்குமார் தலைமையில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கே.ஆர்.சுரேஷ்பாபு, எஸ்.மீர்பாஷா, வீரவாஞ்சிநாதன், தொழிற்சங்க மாவட்ட தலைவர் எஸ்.என்.பாலாஜி, மாவட்ட பொதுச்செயலாளர் போஸ், மாவட்டத் துணைத் தலைவர் சுப்பையா ஐ.ஓ.பி, வார்டு தலைவர்கள் சரவணராஜ், பாலமுருகன், மொக்கச்சாமி, அப்துல்லா, நாகேந்திரன், இளைஞர் காங்கிரஸ் குருபிரசாத், ஷ்யாம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை அலங்காநல்லூர் ரோடு பாசிங்காபுரத்தில் லாவண்யா பேக்கரி திறப்பு விழா..!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ரோடு சிக்கந்தர் சாவடி அருகே உள்ள பாசிங்காபுரத்தில் லாவண்யா பேக்கரி திறப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு வருகை தந்தவர்களை கடையின் உரிமையாளர் லோகநாதன் – தமிழ்செல்வி மற்றும் அவர்களது மகன் பிரவின் மணி ஆகியோர் வரவேற்றனர்.

இங்கு குறைந்த விலையில் தரமான டீ,காபி,வடை,பிரட், கேக், பப்ஸ், பிஸ்கட் மற்றும் பிறந்தநாள் கேக் ஆகியவை கிடைக்கும் என உரிமையாளர் லோகநாதன் கூறினார்.

மதுரையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பாக மலர் தூவி மரியாதை..!

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை ஜான்சி ராணி பூங்காவில் உள்ள இந்திரா காந்தி சிலை முன்பு, மதுரை மாநகர் காங்கிரஸ் கட்சி ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பாக அதன் மாவட்ட தலைவர் ஜி.முத்துக்குமார் தலைமையிலும், தொழிற்சங்க மதுரை மாநகர் மாவட்ட தலைவர் எஸ்.என்.பாலாஜி மற்றும் வடக்கு மாவட்ட தலைவர் ப.தாமரைக்கண்ணன் ஆகியோர் முன்னிலையிலும், ராஜீவ்காந்தி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். மேலும் பயங்கரவாத எதிர்ப்பு தின
உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமாறன், நாஞ்சில் பால்ஜோசப், பூக்கடை கண்ணன், கே.ஆர்.சுரேஷ்பாபு, வீரவாஞ்சிநாதன் மற்றும் நிர்வாகிகள் போஸ் இளைஞரணி குருபிரசாத், பொதுச்செயலாளர்கள் செல்வராஜ், மூவேந்திரன், பகுதி தலைவர்கள் மீனாட்சிசுந்தரம், கோபிநாத், வார்டு தலைவர்கள் குமரகுரு, மொக்கச்சாமி, மணிவேல், பவர்.சிங்கம், ரவி, எஸ்.டி.கோபால், முருகேசன், பாலமுருகன், சரவணராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலத்தில் சிலம்பொலி கலை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி : வளசை முத்துராமன் ஜி பங்கேற்பு

சேலத்தில் சிலம்பொலி கலை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிலம்பொலி அறக்கட்டளை நிறுவனத்தலைவர் ரத்தினகுமார் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில சிலம்பாட்ட கழக தலைவர் வளசை முத்துராமன் ஜி முன்னிலை வகித்தார். பின்னர் அவர் பேசுகையில், டிஜிட்டல் இந்தியாவின் படி தொடுவது கம்ப்யூட்டர் முறையில் பாயிண்ட் எடுக்கும் செயல்முறை எடுக்கப்பட்டது.

இனிவரும் காலங்களில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து சிலம்ப போட்டியிலும் இந்த கம்ப்யூட்டர் முறை நடைமுறைக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று பேசினார்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை சிலம்பொலி அறக்கட்டளை பொதுச்செயலாளர் மோகனசுந்தரம் வரவேற்று பேசினார்.

இப்போட்டியில் 500 க்கும் மேற்பட்ட ஆண், பெண் வீரர்கள் கலந்து கொண்டனர்.

மதுரையில் ஜீவ அன்பாலயம் முதியோர் இல்லத்திற்கு மளிகை பொருட்களை வழங்கிய சமூக ஆர்வலர்..!

மதுரை மாவட்டம் யானைமலை ஒத்தக்கடை யா.புதுப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஜீவ அன்பாலயம் முதியோர் இல்லத்திற்கு சமூக ஆர்வலர்
சசிகுமார் சர்க்கரை, ரவை, சேமியா, சம்பா கோதுமை, கோதுமைமாவு, ராகிமாவு,உருட்டு உளுந்து உள்ளிட்ட
மளிகை பொருட்களை வழங்கினார்.


இதில் முதியோர் இல்லம் டிரஸ்ட் நிறுவனர் ஜான் மில்டன், இல்ல மேலாளர் விஜயபாஸ்கர், பத்மா,
எம்மால் இயன்றது நிறுவனர் கண்ணன், திருவள்ளுவர் நூலகம் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

மணப்பாறையில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கிய ஜி.ஹெச்.சி.எல் பவுண்டேஷன் மற்றும் பெட்கிராட் தொழில் பயிற்சி பள்ளி..!

மணப்பாறையில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கிய ஜி.ஹெச்.சி.எல் பவுண்டேஷன் மற்றும் பெட்கிராட் நிறுவனத்திற்கு மாணவர்களின் பெற்றோர்கள், கிராம பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பொடங்குப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகள் இல்லாததால் ஏழை மாணவ, மாணவிகள் கம்ப்யூட்டர் பயிற்சி பெற முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் ஜி.ஹெச்.சி.எல் பவுண்டேஷன் மற்றும் பெட்கிராட் நிறுவனம் இணைந்து ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சியை கோவில் வளாகத்தில் அளிக்க முன் வந்தனர்.

ஒரு மாதம் நடக்கவுள்ள இந்த கம்ப்யூட்டர் பயிற்சியின் தொடக்க விழாவை பொடங்குபட்டி ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா திருப்பதி தலைமையேற்று தொடங்கி வைத்து பேசுகையில்,
இந்த ஒரு மாத கம்ப்யூட்டர் பயிற்சியை மாணவ மாணவிகள் நன்றாக பயின்று கம்ப்யூட்டர் குறித்த அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என பேசினார்.

நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி பயிற்சியை அளிக்க வந்த நிர்வாகிகளுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக பேசினார்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை பெட்கிராட் பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார்.

பெட் கிராட் தொழில் பயிற்சி பள்ளி நிர்வாக இயக்குனர் ம.அ சுப்புராமன் துவக்க உரை நிகழ்த்தி பேசுகையில், உங்களை தேடி இந்த கம்ப்யூட்டர் பயிற்சியை வழங்க உள்ளோம். இந்த பயிற்சியை நன்றாக பயின்று சாதனையாளர்களாக நீங்கள் மாற வேண்டும் என பேசினார்.

இந்த பயிற்சியில் மொத்தம் 78 மாணவ மாணவிகள் (53 மாணவிகளும் 25 மாணவர்களும்) தனித்தனியாக இரண்டு பிரிவாக பயிற்சி பெற வந்துள்ளார்கள்.

இந்த அருமையான திட்டத்தை குறித்து ஜி.ஹெச்.சி.எல் பவுண்டேஷன் சி.எஸ்.ஆர் அலுவலர் D.சுஜின் பேசுகையில், ஜி.ஹெச்.சி.எல் பவுண்டேஷன் சார்பாக உங்களைப் போன்ற ஏழை எளிய மாணவர்கள் சாதனையாளராக உருவாக வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு மாதம் வழங்கப்பட உள்ள இந்த பயிற்சியை கவனமாக பயின்று கம்ப்யூட்டர் குறித்து நன்றாக தெரிந்து கொண்டு வாழ்வில் உயர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பேசினார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஊர் நாட்டாமைகள் ராதாகிருஷ்ணன், ராஜ்குமார், பழனிவேல் கவுண்டர், கருத்தகண்ணன் கவுண்டர் ஆகியோர் கலந்து கொண்டனர். பெட்கிராட் தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள்ரூபி, பயிற்சியாளர் கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சியாளர் விஜயகார்த்திகா நன்றி கூறினார்.

மதுரையில் கேசவ கேந்திரா சேவா மையம் மற்றும் நடராஜன் நினைவு கல்வி அறக்கட்டளை இணைந்து, பொதுமக்களுக்கு இலவச அக்குபஞ்சர் சிகிச்சை..!

மதுரை திருப்பாலை கிருஷ்ணன் கோவில் எதிரே உள்ள கேசவ கேந்திரா சேவா மையம் மற்றும் நடராஜன் நினைவு கல்வி அறக்கட்டளை இணைந்து, பொதுமக்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை இலவசமாக வழங்கப்பட்டது.
டாக்டர் என்.மாரி சிகிச்சை அளித்தார்.

இதில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இது குறித்து டாக்டர் என் மாரி கூறுகையில்,
கேசவ சேவா கேந்திரம் மற்றும் நடராஜன் நினைவு கல்வி அறக்கட்டளை இணைந்து இந்த அக்குபஞ்சர் முகாம் நடந்து வருகிறது. பொதுமக்களுக்கு சேவை செய்யும் விதமாக முற்றிலும் இலவசமாக சேவை செய்து வருகிறோம்..

கடந்த நான்கு மாதங்களாக நடந்து வரும் இந்த முகாமில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர். மேலும் ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை, சர்க்கரை நோய் போன்ற பல்வேறு நோய்களுக்கு இந்த அக்குபஞ்சர் சிகிச்சை அளித்து வருகிறோம். இந்த இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்த பொதுமக்கள் எங்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என கூறினார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆலோசனைப்படி பகுதி செயலாளர் கே.ஆர்.சித்தன் நீர் மோர் வழங்கினார்

மதுரையில் சுட்டெரித்து வரும் கோடை வெயிலில் மக்களின் தாகம் தீர்ப்பதற்காக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ ஆலோசனைப்படி,கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு மேற்கு 6-ஆம் பகுதி கழகத்தின் சார்பாக பகுதி செயலாளர் விளாங்குடி கே.ஆர்.சித்தன் ஏற்பாட்டில் நீர்,மோர்,தர்பூசணி பழங்கள் வெள்ளரிக்காய் ஆகியவை வழங்கப்பட்டது.

வட்டக் கழக செயலாளர்கள் சுந்தர்ராஜன், கேசவன்,மலைச்சாமி, நாராயணன், விஜயகுமார், ஜஸ்டஸ் ராஜா, இளைஞரணி எஸ்.கண்ணன்,ஐ.டி விங் மாவட்ட துணைச் செயலாளர் கந்தன் மற்றும் கூடல்நகர் பிரேம்குமார், கார்த்தி, 20 வது வார்டு நிர்வாகிகள் முரளி, ஜெயசித்ரபாண்டி உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரையில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் மற்றும் சுப்பராயலு நினைவு நடுநிலைப் பள்ளி இணைந்து இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள சுப்பராயலு நினைவு நடுநிலைப் பள்ளியில், டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் சார்பாக பள்ளி மாணவர்களுக்கான கோடைகால இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.

சிலம்புக்கலை, ஓவியப்பயிற்சி, யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

5-வயது முதல் 13-வயது வரை உள்ள குழந்தைகள் இருபாலர்களும் கலந்து கொள்ளலாம் எனவும், பயிற்சி முடிந்தவுடன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்படும் என அமைப்பின் தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES