Tuesday , January 27 2026
Breaking News
Home / செய்திகள் (page 53)

செய்திகள்

All News

ஆழ்வார்புரம் பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளை அலுவலகத்தில் குடியரசு தின விழா

மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளை அலுவலகத்தில் இந்திய நாட்டின் 75-வது குடியரசு தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது..

மேலும் மாநில பொதுக்குழு உறுப்பினர் பூக்கடை கண்ணன், தமிழ்நாடு சிறுபான்மை பிரிவு மாநிலத்தலைவர் அசலாம் பாஸ், மாவட்ட பொதுச் செயலாளர் கார்மேகம், கருப்பாயூரணி மாரிக்கனி ஆகியோர் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பின்னர் ஏழை எளிய மக்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

முன்னதாக பிறந்தநாள் கொண்டாடும் நிர்வாகிகள் நோய் நொடி இன்றி நீடூடி வாழ வேண்டும் என அருள்மிகு ஸ்ரீ மகா காளியம்மன் கோவிலில் சிறப்பு தீபாராதனை மற்றும் அர்ச்சனை செய்யப்பட்டது.

இவ்விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமாறன் மீர்பாஷா, கே ஆர் சுரேஷ் பாபு, வீரவாஞ்சிநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ் தொழிற்சங்க மாவட்ட தலைவர் பாலாஜி பஞ்சாயத்து ராஜ் மதுரை மாவட்ட தலைவர் முத்துக்குமார் மற்றும் கலை இலக்கிய பிரிவு கரண் மற்றும் வார்டு தலைவர்கள் கண்ணன், பாலமுருகன், ராஜராஜசோழன், கணேசன், மொக்கச்சாமி மனோகரன் நாகேந்திரன், கந்தவேல்,செல்வம் கோவிந்தராஜூ வர்த்தக அணி மாவட்ட தலைவர் வேல்பாண்டி மற்றும் அப்துல்லா இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் குருபிரசாத், முத்துக்குமார் கனகராஜ் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மயிலாடுதுறை மாவட்டம் வள்ளாலகரம் ஊராட்சி குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பாக குடியரசு தின விழா…!

இந்திய நாட்டின் 75 வது குடியரசு தின விழா மயிலாடுதுறை மாவட்டம் வள்ளாலகரம் ஊராட்சி குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில், விஜய் நர்சரி பள்ளியின் மாணவ மாணவிகளுக்கு, Rtn S. சத்யபால், Rtn கார்த்திகேயன், Rtn உதயகுமார் சார்பில் நோட் புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் கூட்டமைப்பு தலைவர் அய்யா சாமி செல்வம் தலைமையில் , செயலாளர் R.R. பாபு வரவேற்பு ஆற்றினார்.
மயிலாடுதுறை உதவி காவல் ஆய்வாளர் இராகவ சிவா தலைமையில் விழா நடைபெற்றது.


விழாவில் பசுமை நேச கரங்கள் அறக்கட்டளை சார்பில் மகத்தான பூமியை காக்கும் பணியில் ஞாயிறு தோறும் மரக்கன்றுகள் வைத்த 60,சமூக ஆர்வலர்களும் இயற்கை காவலர்
என்ற பட்டம் சூட்டி சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கப்பட்டது.

கூட்டமைப்பு மேலாண்மை குழு உறுப்பினர், பேராசிரியர்.துரை. குணசேகரன் சிறப்புரை ஆற்றினார்.
ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா ராபர்ட் ஜெயகரன் மற்றும்
ஒருங்கிணைப்பாளர் அன்பழகன், பொருளாளர் உதயகுமார்,
மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் மேலாண்மை குழு , செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அனைத்து நகர் நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


முடிவில் செய்தி தொடர்பாளர் G.B. கார்த்திகேயன் நன்றியுரை வழங்கினார்.

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மதுரை மண்டலம் சார்பாக குடியரசு தின விழா…!

இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை கீழமாசி வீதியில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மதுரை மண்டலம் சார்பாக, தெற்கு பகுதி தலைவர் செந்தில்நாதன் தலைமையில், மண்டல தலைவர் டி.எஸ் மைக்கேல் ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில அமைப்பு செயலாளர் தங்கராசு, இளைஞரணி மாவட்ட தலைவர் சில்வர் சிவா, மண்டல துணைத் தலைவர்கள் வாசுதேவன், கரண்சிங் மற்றும் சேது ராமச்சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை டி.ஆர்.ஓ காலனியில் செந்தமிழ் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக குடியரசு தின விழா : டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் பங்கேற்பு..!

மதுரை டி.ஆர்.ஓ காலனியில் செந்தமிழ் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பிஸ்மில்லாகான் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் துணைத்தலைவரும், அதிமுக நிர்வாகியுமான டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் சங்கத்தின் தலைவர் விஜயராஜா, செயலாளர் சாமுவேல் என்ற சரவணன், பொருளாளர் அசோக்குமார், துணைத்தலைவர் ராஜசேகரன், துணைச் செயலாளர்கள் விஜய் சீனிவாசன்,சண்முகம் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் அலுவலகத்தில் குடியரசு தின விழா..!

மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் அலுவலகத்தில் இந்திய நாட்டின் 75-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முன்னாள் ராணுவ வீரர் ரத்தினசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்விற்கு மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ் பரமன் தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை டிரஸ்டி திருஞானசம்பந்தம் வரவேற்று பேசினார்.டிரஸ்டிகள் முத்துலட்சுமி சுரேஷ் மற்றும் அபூர்வ கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் மாணவ மாணவிகளுக்கு நோட்புக் மற்றும் கல்வி உபகரணங்கள், ஏழை முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் டிரஸ்டி செந்தில்குமரன், பரந்தாமன், தேன்மொழி, சக்திவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கரூர் நாடாளுமன்றம் அரவக்குறிச்சி வட்டாரத்தில் 75 ஆவது குடியரசு தின விழா…

கரூர் நாடாளுமன்றம் அரவக்குறிச்சி வட்டாரத்தில், ஐயா சதாசிவம் அவர்களின் மகன் திரு. தமிழ்மணி அவர்கள் தலைமையிலும், அரவக்குறிச்சி வட்டாரம் திரு. காந்தி மற்றும் செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில், அரவக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த ஐயா சதாசிவம் அவர்களது மணிமண்டபத்தில் 75 ஆவது குடியரசு தின விழாவில் வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் முகமது அலி தேசிய கொடியேற்றி மரியாதை செய்தும், ஐயா சதாசிவம் அவர்களது திரு உருவ சிலைக்கு கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திரு. பாலமுருகன் கந்தசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தும் மற்றும் அரவக்குறிச்சி பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலைக்கு வழக்கறிஞர் திரு. முகம்மது பஜ்லுல் ஹக் அவர்கள் முன்னிலையில், அரவக்குறிச்சி ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் திருமதி பஜிலா பானு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அகில இந்திய தெலுங்கு சம்மேளனம், ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சி மற்றும் பெத்தானியாபுரம் நாயுடு சங்கம் இணைந்து மாமன்னர் திருமலை நாயக்கர் ஜெயந்தி விழா

அகில இந்திய தெலுங்கு சம்மேளனம், ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சி மற்றும் பெத்தானியாபுரம் நாயுடு சங்கம் இணைந்து மாமன்னர் திருமலை நாயக்கரின் 441 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பொது மருத்துவ முகாம், ஏழை, எளியோர்களுக்கு வேட்டி,சேலை மற்றும் மாணவ மாணவிகளுக்கு நோட்புக் மற்றும் கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் எவர்கிரீன் ஜி.வி பாலமுருகன் தலைமை வகித்தார்.

அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் தலைமை நிலைய செயலாளர் டி.எம் நாயுடு முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை இந்து கவரா நாயுடு அறக்கட்டளை தலைவர் பொம்மை பி.ரவிச்சந்திரன் நாயுடு மற்றும் ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் வரவேற்று பேசினர்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் குணசேகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மருத்துவ முகாமை அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் துணைத் தலைவர் டாக்டர் சி.எம் கிஷோர் தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினராக தென் இந்திய ஃபார்வர்ட் பிளாக் நிறுவன தலைவர் கே.சி திருமாறன் ஜி மற்றும் டாக்டர் சிட்டிபாபு ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

பின்னர் ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் சிலைக்கும், மஹாலில் உள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் தேனி கவுன்சிலர் கிருஷ்ணபிரபா, அய்யப்பன், அமைதிப்புயல் ரெங்கராஜ், பெத்தானியாபுரம் நாயுடு சங்க பொருளாளர் ரவிக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

என்.டி.சி மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் மாவட்ட இளைஞரணி தலைவர் பார்மா. ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

மன்னர் திருமலை நாயக்கரின் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக சுமன் தேவர் மாலை அணிவித்து மரியாதை..!

மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மஹாலில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் ஆணைக்கிணங்க மாநிலச் செயலாளர் சுமன் தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு வழக்கறிஞர் மகாராஜன் தலைமையின் கீழ் இயங்கி வருகிறது. இதன் மாநிலச் செயலாளராக மதுரையைச் சேர்ந்த சுமன் தேவர் உள்ளார். மேலும் ஜாதி,மத பாகுபாடு இல்லாமல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் அனைத்து இனத்தை சேர்ந்தவர்களும் நிர்வாகிகளாக உள்ளனர்.

காமராஜர், டாக்டர் அம்பேத்கர், வ.உ.சிதம்பரனார் போன்ற தலைவர்களின் சிலைகளுக்கும் மன்னர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் திருமலை நாயக்கர் ஆகியோர் சிலைகளுக்கும் அவர்களது பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் அன்று நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக மாலை அணிவித்து தொடர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மகாலில் உள்ள அவரது சிலைக்கு நிர்வாகிகளுடன் சென்று சுமன் தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அனைத்து இன மக்களையும் நேதாஜி சுபாஷ் சேனை கட்சியில் இணைத்து சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் மற்றும் மாநிலச் செயலாளர் சுமன் தேவர் ஆகியோரை நிர்வாகிகள் பாராட்டி வருகின்றனர்

இந்நிகழ்வில் களஞ்சியம் முருகன், விஜய்,வேல் மற்றும் தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்க மாவட்ட செயலாளர் ஜெகநாதன், இளைஞரணி ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கரூர் MP சகோதரி ஜோதிமணி அவர்கள் முயற்சியால், பஞ்சந்தாங்கி புதூர் மலை கிராமத்தில் மூன்றே மணி நேரத்தில் மின்சாரம்…

5 மாதங்களுக்கு முன்னாள் அய்யலூர் பேரூராட்சி கிழக்கே கரூர் MP அக்கா ஜோதிமணி அவர்கள் மலைகிராமங்களில் சுற்று பயணம் மேற்கொண்டு பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்கள். ஏழு பெண்கள் குடிநீர் தேவைக்காக அடிபம்பு மூலம் தண்ணீர் பிடித்து கொண்டு MP அவர்களிடம் பெண்களும் ஓடி வந்து மின் பவர் மோட்டார் வைத்து சின்க்டெஸ் வையுங்க ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா என்றதும், பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் நிதி மூலம் கருப்பு சின்டெக்ஸ் மற்றும் மின்பவர் மோட்டார் அமைத்து தருகிறேன் என்றார்கள்.

YouTube player

கூறிய வாக்குபோல் வைத்து எல்லா வேலைகள் முடித்ததும் பெரிய சிக்கல் மின்சாரம் வாங்க நத்தம் செந்துறை மின்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. என்ன செய்வது என்று திரு திருவென்று முழித்த வடமதுரை வட்டார காங்கிரஸ் தலைவர் பாலமுருகன், காசிபாளையம் சாமிநாதன் அண்ணா அவர்களிடம் வாட்ஸாப்ப் தகவல் கூறவே, கரூர் MP அவர்களுக்கு தகவல் எட்டி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களுக்கு அக்கா ஜோதிமணி அவர்கள் தொலைபேசி மூலம் பேசியதும், மூன்றே மணி நேரத்தில் கம்பத்தில் மின்சாரம் கொடுத்து போட்டோக்கள், MP அக்கா ஜோதிமணி அவர்கள் வாட்ஸாப்ப் நம்பர்க்கு அனுப்பபட்டது. பஞ்சந்தாங்கி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மின்பவர் மூலம் குடிநீர் வழங்கிய மிக்க மகிழ்ச்சியும் என்றாலும், பின்னோட்டமோ கரூர் MP அக்கா ஜோதிமணி அவர்கள் முயற்சியும்தான்.

மூன்றே மணி நேரத்தில் நடந்தது கூடுதல் மகிழ்ச்சி மக்களுக்கு…

இவண்,
வேடசந்தூர் தொகுதி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி செய்தி தகவல் தொடர்பு அணி

அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி மரக்கன்றுகளை வழங்கினார்.

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் இளைஞர்களைக் கவர்ந்த ஜனாதிபதியாக திகழ்ந்ததோடு, இந்தியா வல்லரசாக வேண்டுமென்ற கனவையும் கொண்டிருந்தார். அவர் கண்ட பல கனவுகளில் ஒன்று பசுமையான இந்தியாவை உருவாக்குவது!

உலக வெப்பமயமாதலுக்கு எதிரான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தவும்,அப்துல்கலாம் அவர்களின் கனவை நனவாக்கும் விதமாக, அவரது அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் அவர்களின் ஆலோசனைப்படி தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கவும் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கத்தின் சார்பாக அதன் மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மரக்கன்றுகளை வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகே உள்ள கேரன் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இரண்டாயிரம் மரக்கன்றுகளை ஆபேல் மூர்த்தி வழங்கினார்.

இந்நிகழ்வில் சமூகசேவகர் செல்லப்பாண்டி மற்றும் பள்ளியின் முதல்வர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாணவர்களிடையே ஆபேல் மூர்த்தி பேசியதாவது :- புவி வெப்பமாவதை தடுக்க முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஐயா அவர்கள் மரக்கன்றுகளை நட வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். அவர் கனவை நனவாக்கும் விதமாக அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் சார்பாக மாணவர்களிடம் மரம் நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று இரண்டாயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

அடுத்த கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று மரக்கன்றுகளை வழங்க உள்ளோம். இந்த மரக்கன்றுகளை பெற்றுச்செல்லும் மாணவர்கள் அதை நட்டு வைத்து தினமும் இந்த மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வாட விடாமல் பாதுகாப்புடன் வளர்க்க வேண்டும். மரத்தை நேசியுங்கள். மரம் உங்களை நேசிக்கும்.

மரங்களை நட்டு வைத்தால் மழை பெறுவது மட்டுமில்லாமல் புவி வெப்பமாவதையும் தடுக்கலாம். எனவே மரங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு அவசியம் என பேசினார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES