Tuesday , January 27 2026
Breaking News
Home / செய்திகள் (page 74)

செய்திகள்

All News

காந்தி சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைமை கழக செயலாளர் வேலுச்சாமி மாலை அணிவித்து மரியாதை.!

மதுரையில் மகாத்மா காந்தி சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக மாநில தலைமை கழக செயலாளர் வேலுச்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி நாடு முழுவதும் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடப்பட்டது

அந்த வகையில் மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாநில தலைமை கழக செயலாளர் வேலுச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் மாநில துணைத் தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் நாகராஜ் தேவர்,வைகை பத்மநாபன், சாலை பிரபாகரன், செல்வராஜ், ராமசாமி, முனியாண்டி, சேகர், பாலகிருஷ்ணன், வேல்முருகன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் விஜய் மக்கள் இயக்கம் தொண்டரணி சார்பாக காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அவரது திருவருவச் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கம் வடக்கு மாவட்ட தொண்டரணி சார்பாக ஆனையூர் பாலாஜி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பொன்ராஜ், நேசம் முத்துப்பாண்டி, துரைசெந்தில், பிரகாஷ், லாரன்ஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மகாத்மா காந்தி சிலைக்கு விஜய் மக்கள் இயக்கம் மதுரை வடக்கு மாவட்டம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!

மதுரையில் மகாத்மா காந்தி சிலைக்கு விஜய் மக்கள் இயக்கம் வடக்கு மாவட்டம் சார்பாக அதன் மாவட்ட தலைவர் விஜய் அன்பன் கல்லணை 200 க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நாட்டுக்காக அரும்பாடு பட்ட தலைவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் அவர்களின் பிறந்த நாள் அன்று அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் விஜய் அன்பன் கல்லணை நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்…

நகராட்சி மாநகராட்சி சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம்.!

நகராட்சி மாநகராட்சி சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் மாநில தலைவர் பஞ்சவர்ணம் தலைமையில் நடைபெற்றது.

கார்த்திகா வள்ளி சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் முருகானந்தம் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்க தலைவர் மகுடீஸ்வரன், கூட்டுறவு சங்கத் தலைவர் கே.கண்ணன், பொருளாளர் கே.டி. துணைக்கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் இ.ரா தமிழ், அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் சந்திரபோஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முடிவில் இந்திரா நன்றி கூறினார்.

இதுகுறித்து நகராட்சி மாநகராட்சி செவிலியர்கள் சங்க மாநிலத்தலைவர் பஞ்சவர்ணம் கூறுகையில் :-

தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சியில் பணிபுரியும் நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் பகுதி சுகாதார செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

கிராம சுகாதார செவிலியர்களுக்கு வழங்கப்படும் அரசாணையில் நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் பகுதி சுகாதார செவிலியர்களின் பெயர்களும் இடம்பெற்று ஒரே அரசாணையாக வழங்க வேண்டும்.

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் ‌மேலும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் அவர் கூறுகையில், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 17 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் மற்றும் (15/11/2023) அன்று காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என கூறினார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்…

டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!

டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மதுரை,அக்.01-

மதுரை காந்தி மியூசியத்தில் வலிமை டுடே பத்திரிகை மற்றும் தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்கம் இணைந்து வழங்கிய ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியில், தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை,ரமணா ஹோட்டல் உரிமையாளர் கோபாலகிருஷ்ணன், திரைப்பட நடிகர் மதுரை முத்து ஆகியோர் வழங்கி கௌரவித்தனர்.

உடன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் புயல் பாஸ்கர் உள்ளார். இந்நிகழ்வில் டாக்டர் சின்னசாமி,மாஸ்.மணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் சிவாஜி கணேசன் சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!

மதுரையில் சிவாஜி கணேசன் சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக முழுவதும் அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

அந்த வகையில் மதுரையில் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாநில தலைமை கழக செயலாளர் வேலுச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் மாநில துணைத் தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் செல்வராஜ், ராமசாமி, முனியாண்டி, சேகர், பாலகிருஷ்ணன் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரையில் நவம்பர் 24,25,26 தேதிகளில் சித்தர்கள் மகாசபை நடத்தும் மாபெரும் உலக சித்தர்கள் மற்றும் தமிழர்கள் நல்லிணக்க மாநாடு.!

சித்தர்கள் மகாசபை (மதுரை) நடத்தும் மாபெரும் உலக சித்தர்கள் மற்றும் தமிழர்கள் நல்லிணக்க மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் நவம்பர் 24,25,26 ஆகிய மூன்று தேதிகளில் நடக்க இருக்கின்றது.

மாநாட்டுக்காக இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்து சித்தர்கள், சங்கராச்சாரிகள், ஆதீனங்கள், சிவனடியார்கள், கவர்னர்கள்,மாநில முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள், கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இந்த மாநாட்டில் பாரம்பரிய தமிழ் கலாச்சாரம், மருத்துவம் மற்றும் உணவு வகையில் பற்றிய கருத்தரங்கள்,150 மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளது.


மேலும் உலக சித்தர்கள் கூட்டமைப்பின் தலைவராக-சிவயோகி அனுகூலநாதர் ராஜசேகர சுவாமிகள், துணைத் தலைவராக திருமுருகன்,செயலாளராக-
க.செல்வவேல்பாண்டி, துணைச் செயலாளராக டாக்டர் கஜேந்திரன், இணைச் செயலாளராக-
செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளராக ரமணன்,இணைப் பொருளாளராக-
ஹரிஹரன், செயற்குழு உறுப்பினர்கள்
சிமியோன்,மணிகண்டன், ஆறுமுகம், கோவிந்தராஜு, மாரிமுத்து, முருகேசன் அலாவுதீன் ஆகியோர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES