Tuesday , January 27 2026
Breaking News
Home / செய்திகள் (page 117)

செய்திகள்

All News

வீடு இருப்பவர்கள் வீட்டில் சமைத்துக் கொள்ளலாம் வீடு இல்லாதவர்களும் ஹோட்டல் கடை நம்பி இருப்பவர்கள் சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள்????

தமிழ்நாடு இளைஞர் கட்சி திருப்பூர் மாவட்டம் சார்பாக ஆதரவற்றவர்கள் மற்றும் வெளியூரிலிருந்து வந்த வேலை செய்பவர்களுக்கும் உணவு அளிக்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவை பின்பற்ற சொல்லி அரசாங்கம் சொல்லி இருந்தாலும் இவர்களுக்கு எதுவும் செய்யவில்லை.

வீடு இருப்பவர்கள் வீட்டில் சமைத்துக் கொள்ளலாம் வீடு இல்லாதவர்களும் ஹோட்டல் கடை நம்பி இருப்பவர்கள் சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள்????

இந்த மகத்தான சேவையை புரிந்த தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு இளைஞர் குரல் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மரபைத் தொலைத்தோம் மரணத்தை அறுவடை செய்தோம்…

கைகூப்பித்தானே கும்பிட்டோம்…தொழுதோம்…

கை கால் முகம் கழுவிதானே இல்லம் நுழைந்தோம்

ஆடி, தீபாவளிதானே
அசைவம் உட்கொண்டோம்

பயணம் செல்வோருக்கும்
கட்டுச்சோறு தவிர்த்து கலப்புக்கடை உணவு கலாச்சாரத்தில் இல்லையே!

பயிறு பொறி காராச்சேவு போன்றவற்றைத் தவிற பலகாரம் இல்லையே!

இட்டிலி தோசை கூட ஏகாதசி கார்த்திகைக்குத் தானே!

அரிசிச் சோறு அரிதாய் இருந்தது
மண்வீடாயினும் ஆரோக்கியமாய் இருந்தது

அம்மையும் காலராவையும் தவிற வேறு நோய் ஏது?

அஞ்சரைப்பெட்டி இல்லாத வீடேது?

மா,வேம்பு தோரணம் கட்டி
மக்கள் கூடும் விழா மஞ்சள் நீராட்டோடு முடிந்தது நோய் தொற்றை தவிர்க்கத்தானே…..

வாரம் இருமுறை பூசி மெழுகாத அடுப்பாங்கரை ஏது?

வெள்ளியும் செவ்வாயும் கோமியம் தெளிக்காமல் விடியல் ஏது?

கொடியேற்றம் துவங்கியதும் திருவிழா ஊரில் கவுச்சி இல்லை பால்நுகர்ச்சி இல்லை
ஆதலால் நோய் தொற்று இல்லை

மரபைத் தொலைத்தோம்
மரணத்தை அறுவடை செய்தோம்

என்றைக்கு அடிக்கடி அசைவம் உட்கொண்டோமோ?

என்றைக்கு நீராகாரம் மறந்து பேக்கரி சென்றோமா?

என்றைக்கு கலப்புக்கடையில் கண்டதை
தின்றோமோ?

என்றைக்கு ஓரிடத்தில் குவியத் தொடங்கினானோ?

என்றைக்கு பூமியயை ரசாயனத்தால் கொலை செய்தோமோ
பிளாஸ்டிக்கால் பூமியின் தாய்மை அழித்து மலடாக்கினோமோ?

சுயநலம் பெருகி
சுற்றம் சுருங்கியது

விளைவு மனிதகுலம் வீங்கி வெடிக்கிறது

மரபை மீட்போம்
மனிதத்தை காப்போம்

– இளைஞர் குரல்

கோரோன வைரஸ் – ஐயப்பபக்தர்கள் அனைவரும் வரவேண்டாம் என்று கேரள அரசு மற்றும் சபரிமலை தேவஸ்தானம் போர்டு அறிவிப்பு

ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் கொரானாவைரஸ் பரவும் அச்சம் கேரளாவில் அதிகம் உள்ள காரணத்தினால் இந்த மாதம் தமிழ் பங்குனி மாதம்பிறப்பிற்கு சபரிமலையில் சாஸ்தாவின் சன்னிதானம் 5 நாட்கள் நடை திறந்திருக்கும் பூஜைகள் எப்பொழுதும் போன்று நடைபெறும் ஆனால் பக்தர்களுக்கு மேலே செல்ல அனுமதி இல்லை ஆகையால் ஐயப்பபக்தர்கள் அனைவரும் வரவேண்டாம் என்று கேரள அரசு மற்றும் சபரிமலை தேவஸ்தானம் போர்டு அறிவிக்கிறது.

(NPR)என்பிஆருக்கு எந்த ஆவணமும் கேட்கப்படாது.. பயப்பட வேண்டாம்.. அமித் ஷா முக்கிய அறிவிப்பு

என்பிஆருக்கு எந்த ஆவணமும் கேட்கப்படாது.. பயப்பட வேண்டாம்.. அமித் ஷா முக்கிய அறிவிப்பு

டெல்லி: என்பிஆர் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் எந்த ஆவணமும் கேட்கப்படாது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது உறுதி அளித்தார்.

குடியுரிமை திருத்த சட்டம்(சிஏஏ), மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு இடங்களில் கடந்த டிசம்பர் மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருகிறது.

குறிப்பாக என்பிஆர் குறித்து அஸ்ஸாமில் கேட்கப்பட்ட ஆவணங்களாக தந்தையின் பிறந்த நாள் சான்றிதழ்கள் மற்றும் அவர்கள் இந்திய குடிமகன்கள் தானான என்பதை நிரூபிக்க கேட்கப்பபட்ட வாக்குரிமை ஆவணங்கள் உள்ளிட்டவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அத்துடன் பிறப்பு சான்றிதழ் இல்லை என்றால் முகாம்களில் அடைக்கப்படுவோமோ என்ற பயமும் பீதியும் பெரிய அளவில் பரவியதால் என்பிஆர் விவகாரம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்புக்கு வித்திட்டுள்ளது.

இதனால் என்பிஆர் மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நாடு முழுவதும் வேகமாக பரவின. இந்த போராட்டம் இன்று வரை பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில் ராஜ்யசபாவில் காங்கிரஸ் மூத்த எம்பி கபில் சிபல் CAA NPR உடன் இணைந்தால் என்ன ஆகும் என என்பிஆர் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில் , NPR இன் போது எந்த ஆவணமும் கேட்கப்படாது. எந்த ஆவணங்களும் அளிக்க தேவையில்லை. எனவே யாரும் பயப்பட வேண்டாம். ஒருவர் குறிப்பிட்ட தகவல்களை வழங்க விரும்பவில்லை என்றால், எந்த கேள்வியும் கேட்கப்படமாட்டாது, சிஏஏ குறித்து முஸ்லீம் சகோதர சகோதரிகள் மத்தியில் தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. என்பதை அவர்களிடம் நான் சொல்ல விரும்புகிறேன்” இவ்வாறு அமித் ஷா கூறினார்.

எதிர்க்கட்சியான காங்கிரஸ், இடதுசாரிகள் ஆளும் கேரளா, திரிணாமுல் ஆளும் வங்காளம் மற்றும் பாஜக கூட்டணி தலைவரான நிதீஷ்குமாரால் ஆளப்படும் பீகார் ஆகிய நாடுகளும் பல மாநிலங்கள் என்.பி.ஆர் பயிற்சியை மேற்கொள்ள மறுத்துவிட்டன. இதேபோல் தெலுங்கானா, ஆந்திராவும் என்பிஆரை அமல்படுத்த மறுத்துள்ளன. இந்நிலையில் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவும் தமிழகமும் என்பிஆரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

முடங்கிய ஐரோப்பா.. வேகமாக உயரும் பலி எண்ணிக்கை.. 1,26,139 பேரை தாக்கிய கொரோனா.. கொடூரம்

முடங்கிய ஐரோப்பா.. வேகமாக உயரும் பலி எண்ணிக்கை.. 1,26,139 பேரை தாக்கிய கொரோனா.. கொடூரம்

பெய்ஜிங்: உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 4,627 ஆக உயர்ந்துள்ளது.

டிசம்பர் மாதம் இறுதியில் திடீர் என்று சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது. சீனா, ஜப்பான், இத்தாலி, ஈரான், மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா நாடுகள், அமெரிக்கா என்று பல நாடுகளை இந்த வைரஸ் நிலைகுலைய வைத்துள்ளது.
கொரோனா இதுவரை 123 நாடுகளுக்கு பரவியுள்ளது. சீனாவில் வுஹான் நகரத்தில் இந்த வைரஸ் உருவானது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
கொரோனா வைரஸ் அவசர நிலை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. கர்நாடகா அரசு

எத்தனை பலி
உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 4,627 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,139 ஆக உயர்ந்துள்ளது.சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 3,169ஆக உயர்ந்துள்ளது.சீனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,796ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் இந்த வைரஸ் கொஞ்சம் கொன்ஜமாக் வேகமாக குறைந்து வருகிறது.

சீனா
இந்த கொரோனா வைரஸால் சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலிதான் அதிகம் பாதிக்கப்பட்டடுள்ளது. இத்தாலியில் முதலில் இரண்டு நகரங்கள் இந்த வைரசால் மூடப்பட்டது. தற்போது மொத்தமாக இத்தாலி மூடப்பட்டது, அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்தாலியில் மொத்தம் 12,462 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 827 ஆக அதிகரித்துள்ளது.

ஈரான் வைரஸ்
அதற்கு அடுத்து ஈரானிலும் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஈரானில் 9,000 பேருக்கு வைரஸ் ஏற்பட்டுள்ளது. அங்கு நேற்று மட்டும் 63 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர். 354 பேர் இதுவரை ஈரானில் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்து தென் கொரியாவில் 7,869 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 66 பேர் அங்கு இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி உள்ளனர்.

அமெரிக்கா எப்படி
அமெரிக்காவில் 1,313 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 38 பேர் பலியாகி உள்ளனர். இதனால் வாஷிங்கடன் மொத்தமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்சில் 2,281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 48 பேர் பலியாகி உள்ளனர். ஸ்பெயினில் 2277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 55 பேர் பலியாகி உள்ளனர். ஐரோப்பாவில் இந்த வைரஸ் தற்போது வேகம் எடுத்து வருகிறது.

மொத்தம் எத்தனை
இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கி மொத்தம் 57 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். முக்கியமாக தமிழகத்தில் வைரஸ் தாக்கிய நபர் குணப்படுத்தப்பட்டு இருக்கிறார். கேரளாவில் 14 பேருக்கு வைரஸ் தாக்கியுள்ளது. இதில் இரண்டு பேர் மோசமான நிலையில் இருக்கிறார்கள். கர்நாடகாவில் வைரஸ் தாக்கியதாக சந்தேகிக்கப்பட்ட முதியவர் நேற்று பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்இரத்த தான முகாம்

இன்று (11.03.2020) இரத்த தான முகாம் ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கிடையூர் இணைந்து இரத்த தான முகாம் ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இரத்த தானத்தின் அவசியம் பற்றியும் விழிப்புணர்வு பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இதில் 64 மாணவ மாணவிகள் ரத்ததானம் வழங்கினர் பெறப்பட்ட இரத்தம் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதில் கலந்து கொண்ட இரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் ரமதரன் வட்டார மருத்துவ அலுவலர், டாக்டர் ரமேஷ்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பஞ்சட்சரம், சுகாதார ஆய்வாளர்கள் கந்தசாமி, கார்த்திக் குமார், வெங்கடாசலம் ஆகியோர்களுக்கு கல்லூரி நிறுவனர் டாக்டர் சுஜாதா அவர்கள் நன்றியை தெரிவித்தார்.

YouTube player

கொரோனா பயத்தால்’ பள்ளிகளுக்கு கால வரையற்ற விடுமுறை… உச்சகட்டமாக ஆண்டுத்தேர்வை ‘ரத்து’ செய்து… கோடை ‘விடுமுறை’ அறிவித்த பள்ளி

கொரோனா அச்சத்தால் பள்ளி ஒன்று ஆண்டு இறுதித்தேர்வை ரத்து செய்து கோடை விடுமுறை அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக பெங்களூரில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளையும் நாளை மூடுமாறு கர்நாடகா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை முதல் அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்பட்டு என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் கிழக்கு பெங்களூரில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூல் என்னும் பள்ளியொன்று ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் ஆண்டு இறுதித்தேர்வை ரத்து செய்து, கோடை விடுமுறையாக அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடைசியாக நடத்தப்பட்ட தேர்வு மதிப்பெண்ணின் அடிப்படையில், மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று அந்த பள்ளி அறிவித்துள்ளது. இதேபோல கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SDPI இக்பால் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி…

SDPI கோவை மாவட்ட செயலாளர் இக்பால் பாய் அவர்களை பாசிச பயங்கரவாதிகள் ஏழு பேர் சேர்ந்து கொடூர ஆயுதங்களால் தாக்குதல். இக்பால் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி.

தமிழக அரசே! பயங்கரவாதிகளை உடனே கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடை.

வளையத்தில் இன்று செய்திகள் பரவுகிறது.

மகளிர் தினம் வெறும் கொண்டாட்டம் அல்ல! உரிமையை மீட்கும் நாள்.

1917 ஆம் ஆண்டு முதல் மார்ச் 8 சர்வதேச மகளிர் ஆண்டாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது கல்வி சுகாதாரம் பாதுகாப்பு வேலைவாய்ப்பு சம ஊதியம் போன்ற எல்லாவற்றிலும் போராடவேண்டிய நிலையில் உள்ள இவ்வேளையில் மகளிர் தின கொண்டாட்டத்தை முன்னெடுப்போம் உரிமைகளோடு…. மகளிர் தினம் வெறும் கொண்டாட்டம் அல்ல.. உரிமையை மீட்டெடுத்த நாள் அல்லது மீட்கும் நாள்.

மகளிர் தின கொண்டாட்டம் என்பது சந்தைப்படுத்துதல் இல்லை.

மகளிர் தின கொண்டாட்டம் என்பது 1910 ஆம் ஆண்டு டென்மார்க் தலை நகரில் ஏற்பட்ட மிகப்பெரிய பெண்கள் மாநாட்டில் பெண்கள் பிரச்சனைக்கு உரிமையை மீட்பதே தீர்வு என்ற முழக்கத்துடன் 1917 ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் தேதியன்று பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக மிகப்பெரிய பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர் இந்த தினத்தையே ஐ.நா சபை மகளிர் தினமாக அங்கீகரித்து அன்று முதல் மார்ச் 8ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்றைய தொழில் கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திய பொருளாதார சுதந்திரம் பெண்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டுபயந்து போகாமல் எதிர்த்து நின்று பிரகாசிப் போம்.

இந்த மகளிர் தின கொண்டாட்டத்தில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

K. Balamurugan, Founder, IlangyarKural

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஈரான் நாட்டினர் 495 பேரை கண்டறிய முடியவில்லை – வெளியுறவுத் துறை தகவல்…..

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஈரான் நாட்டினர் 495 பேரை கண்டறிய முடியவில்லை என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

ஈரானில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த 495 பேரை கண்டறிய முடியவில்லை என்று வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முன் அவர்கள் இந்தியா வந்ததாகவும், இது தொடர்பாக ஈரான் தூதகரத்திடம் எந்த தகவலும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
தற்போது இரு நாடுகளுக்கும் இடையே விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளர். இந்தியா – ஜரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருந்த நிலையில், கொரோனா பாதிப்பால் பயணத்தை தவிர்க்குமாறு சுகாதார துறை அறிவுறுத்தியதாகவும் இதனால் மாநாடு ஒத்தி வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார். கொரோனா வைரஸ் விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்றும்  ரவீஷ் குமார் நம்பிக்கை தெரிவித்தார்.
ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 107 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 3750 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES