Saturday , February 22 2025
Breaking News
Home / செய்திகள் (page 119)

செய்திகள்

All News

இந்திய அஞ்சல் அட்டைக்கு வயது 140

இந்திய அஞ்சல் அட்டைக்கு வயது 140

அஞ்சல் அட்டை என்பது ஒரு செவ்வக துண்டு தடிமனான காகிதம் அல்லது மெல்லிய அட்டை, உறை இல்லாமல் எழுதுவதற்கும் அஞ்சல் செய்வதற்கும் நோக்கம் கொண்டது . ஒரு கடிதத்தை விட குறைந்த கட்டணத்தில் அஞ்சலட்டை அனுப்பலாம் .

அஞ்சல் அட்டைகளின் ஆய்வு மற்றும் சேகரிப்பு டெல்டியாலஜி என்று அழைக்கப்படுகிறது .
1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதல் அஞ்சல் அட்டை ஆஸ்திரேலியா நாட்டினரால் வெளியிடப்பட்டது. உலகளவில் அஞ்சலட்டை வெளியிட்டு 150 ஆண்டுகள் ஆகிறது. வியன்னா ராணுவ கழகத்தைச் சேர்ந்த இமானுவேல் ஹெர்மன் என்பவர் இதனை வடிவமைத்தார்.இந்திய தபால் துறை இயக்குனர் ஜெனரல் இருந்த மோன்டீத் என்ற அதிகாரியின் முயற்சியால் 1879ல் அஞ்சல் அட்டை இந்தியாவில் அறிமுகமாகியது.1- 7 -1879 ஆம் ஆண்டில் இந்தியாவில் அஞ்சலட்டை அறிமுகமானது.1879 ஆம் ஆண்டில் உள்நாடு மற்றும் வெளிநாடு அஞ்சலட்டை அறிமுகமாயிற்று. ராணியின் தலை உருவத்தை அச்சிட்ட உள்நாட்டு அஞ்சலட்டை விலை காலணா அரையணா மதிப்புள்ளதும் வெளிநாட்டு உபயோகத்திற்கு நீலநிற அஞ்சலட்டை வெளியிடப்பட்டன. இரண்டு வகை அஞ்சல் அட்டைகளும் லண்டனில் உள்ள தாமஸ் டீ லாரு அண்ட் கம்பெனியால் 1-07- 1879 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

1880 ஆம் ஆண்டு சர்வீஸ் அஞ்சல் அட்டை அறிமுகம் ஆயிற்று. 1883இல் பதில் அஞ்சல் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது 24 -6 -1922அஞ்சலட்டை விலை காலணாவிலிருந்து அரை அணாவாயிற்று 15- 2 -1932 முதல் முக்கால் அணாவாயிற்று. 24 -6-1931 விமானசேவை தபால் அஞ்சல் அட்டை அறிமுகம் ஆயிற்று. சுதந்திரத்திற்கு முன்பு ராணி உருவம் பதித்த அஞ்சல் அட்டைகள், எட்வர்ட், ஐந்தாம் ஜார்ஜ், ஆறாம் ஜார்ஜ் மன்னர் உருவம் பொறித்த அஞ்சல் அட்டைகளும் வெளியிடப்பட்டன. சுதந்திரத்திற்கு பின் சில மாதங்கள் வரை ஆறாம் ஜார்ஜ் மன்னர் அஞ்சலட்டை உபயோகப்படுத்தப்பட்டன.
1955இல் பழுப்புநிற அரையணா அஞ்சலட்டை வெளியிடப்பட்டன. 1957இல் அசோக சக்கர முத்திரை கொண்ட அஞ்சல் அட்டைகள் வெளியாகின.1-4-1957 அஞ்சல் அட்டைகளை 5 பைசா 1-4-1965ல் 6பைசா 15-5-1968 ல் 10 பைசா ஆனது.15-5-1978 இருந்து 1-6-1997 வருடங்கள் வரை 15 பைசாவாக புழக்கத்தில் இருந்த அஞ்சலட்டை பின்பு 25 பைசாவாக விலை உயர்ந்தது.

2-7-1979 இந்திய அஞ்சல் துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரத்தியேக அஞ்சல் அட்டையை வெளியிட்டது. போட்டிகளுக்கான அஞ்சல் அட்டைகளும் வெளியிடப்பட்டன. மூணு பைசாவிற்கு அறிமுகமான அஞ்சலட்டை தற்போது ஐம்பது பைசாவிற்கு விற்கப்படுகிறது. அஞ்சலட்டை அச்சிட அரசிற்கு அதிகப்படியான செலவு ஏற்பட்டாலும் மலிவான தகவல் போக்குவரத்து சாதனம் தேவை என்பதால் மிகவும் குறைந்த விலைக்கு அஞ்சலட்டை விற்கப்படுகின்றன.
இந்திய அஞ்சல் துறை மேக்தூத் அஞ்சல் அட்டைகளை ஆகஸ்ட் 2002 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.அஞ்சல் அட்டையில் பெறுநர் விலாசத்தின் இடதுபுறம் விளம்பரம் இடம் பெற்றிருக்கும். முதல் மேக்தூத்அஞ்சல் அட்டையில் ரஜினியின் பாபா தமிழ் திரைப்படம் விளம்பரம் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய அஞ்சலட்டை 25 பைசாவிற்கு விற்கிறார்கள் 25 பைசா செலவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அஞ்சல் அட்டையில் தகவல்களை அனுப்பி பயன் பெறலாம்.140 ஆண்டுகள் கண்ட இந்திய அஞ்சல் அட்டையினை சேகரித்து அஞ்சல் அட்டை வரலாறுகளை எடுத்துரைத்து வருகிறார் அஞ்சல் தலை சேகரிப்பாளரும் யோகா ஆசிரியருமான விஜயகுமார்.

விக்டோரியா ராணி அஞ்சலட்டை:

ஏழாம் எட்வர்டு அஞ்சலட்டை:

அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி பாடத் திட்ட பயிற்சி முகாம்

அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி பாடத் திட்ட பயிற்சி முகாம்:

திருச்சி மணிகண்டம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி பாடத் திட்ட பயிற்சி முகாம் மணிகண்ட ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கெளசல்யா தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் லட்சுமி முன்னிலை வகித்தார்.

முகாமில் கர்ப்பத்தில் குழந்தைகளின் வளர்ச்சி நிலை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது அதில் பெண்களுக்கான கர்ப்பகாலம், ஊட்டச்சத்து உணவு முக்கியத்துவம், ஊட்டச்சத்துக்கள், அங்கன்வாடி பணிகள், போஷன் அபியான் திட்டத்தின் பணிகள், சுகாதார பணிகள், கர்ப்ப காலத்தில் குழந்தைகளின் வளர்ச்சி நிலை குறித்து அறிந்து கொள்ளுதல்,பிறப்பு முதல் இரண்டு வயது வரை வளர்ச்சிப்பணிகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து தடுப்பூசி அட்டவணை எடை எடுத்தலின் முக்கியத்துவம் உயரத்தை கணக்கிடுதல் குறித்து முதல் நாள் பயிற்சியில் பயிற்றுநர்க மூலம் எடுத்துக் கூறப்பட்டது.

முன்பருவக் கல்விக்கான செயல்பாடுகள் ,கதை சொல்லுதல் படம் பார்த்துப் பேசுதல் குழந்தையின் அசைவுகள் தனித்தன்மையை அறிதல், அங்கன்வாடி மையத்தில் எப்படி செயல்படுவது என கூறப்பட்டது . மேலும் பயிற்சிப் பட்டறையில் ஆரோக்கியமான குழந்தைக்கு முதல் 1000 நாட்கள் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கூறப்பட்டது .ஒரு குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சி என்பது உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சியும் சேர்ந்தது . கருவாக உருவான நாளிலிருந்து ஆரம்பமாகி இரண்டு வருடங்கள் ஆன குழந்தை ஆயிரம் நாட்களில் அதிகஅளவில் வளர்ச்சி நடைபெறுகிறது. ஒன்பது மாத கர்ப்ப காலம், 6 மாதம் வரை தாய்ப்பால் குடிக்கும் காலம் ,6 மாதம் முதல் 2 வருடம் வரை உள்ள நாட்கள் ஆகியவை சேர்ந்ததுதான் இந்த முதல் 1000 நாட்கள் ஆகும் .

வாழ்நாள் முழுமையான ஆரோக்கியம் மற்றும் அறிவு உருவாவதற்கு அதிக வாய்ப்புள்ள காலகட்டம் என்பதால் இந்த ஆயிரம் நாட்களுக்கு தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவேண்டும். குழந்தைக்கு ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் .ஆறு மாதத்திற்கு பிறகு தாய்ப்பாலுடன் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை கொடுக்க வலியுறுத்தப்பட்டது.

தன்சுத்தம் உணவு தயாரிக்கும் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளின் கழிவுகளை முறையாக இயற்கை சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும் .ஒவ்வொரு வீட்டிலும் மலம் கழிக்க கழிவறையை பயன்படுத்த வேண்டும். மாதவிடாய் காலங்களில் நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்க பெண்களும் இளம் பெண்களும் தன் சுற்றத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என பயிற்சி அளித்தார்கள். பிறந்துஇரண்டு மாதங்களில் தலை உயர்த்தும் பருவமாகும். ஐந்து முதல் எட்டு மாதங்களில் உட்கார்ந்து, தவளும் பருவமாகும் .8 முதல் 13 மாதங்களில் எழுந்து நிற்கும் பருவமாகும். இரண்டரை வயது முதல் 3 வயது வரை பரிசோதிக்கும் பருவமாகும்.

இப்பயிற்சிப் பட்டறையில் திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், அன்னை தெரசா அறக்கட்டளை இயக்குனர் பிரபு, நடமாடும் மருத்துவம் மருத்துவர் அனுசியா விக்னேஸ்வரி, இயற்கை நலவாழ்வியல் ஆலோசகர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உட்பட ஊட்டச்சத்து நிபுணர்கள் பயிற்சி அளித்தார்கள்.

மூன்றாவது இடத்தில் தமிழகம் டாஸ்மாக் படுகொலை… மது விற்பனையை அங்கீகரிக்கும் திராவிட திமுக அதிமுக கட்சிக ளை நம்ப வேண்டாம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி

இந்தியாவில் மதுவால் அதிகமானவர்கள் உயிரிழக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும் மத்திய பிரதேசம் இரண்டாவது இடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும், கர்நாடகா நான்காவது இடத்திலும், அரியானா ஐந்தாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழா மது அருந்தாதே மது பழக்கம் உன்னை அழைப்பது மட்டுமின்றி உன் குடும்பத்தையே ஒருநாள் தெருவில் நிற்க வைக்கும் எனவே மது விற்பனையை அங்கீகரிக்கும் திராவிட திமுக, அதிமுக கட்சிகளை நம்பாதே என இளைஞர்களுக்கு தமிழ்நாடு இளைஞர் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

திருவொற்றியூர் மெட்ரோ டெபோட்டில் பரபரப்பு

திருவொற்றியூர் மெட்ரோ டெபோட்டில் பரபரப்பு

திருவொற்றியூரில் , வார்டு 6 , சக்தி கணபதி நகரில் பல வருண்டங்களாக குடி நீருக்காக கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். இந்த விஷயம் சம்பந்தமாக பல முறை அதிகாரிகளை சந்தித்து மெட்ரோ குடிநீர் வழங்கக்கோரி மனுக்கள் கொடுத்து உள்ளனர். மெட்ரோ குடிநீர் துறையும், 1 மாதத்தில் முடிக்கிறோம், என்று சொல்லி சொல்லி 2 வருடங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இந்த நிலையில் மாதத்தின் 2 சனிக்கிழமை மக்கள் குறை கேட்கும்/ தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று சக்தி கணபதி நகர் பொது மக்கள் மற்றும் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வட சென்னை மாவட்ட துணை தலைவரும் இணைந்து அதிகாரிகளை சந்தித்து பேசி உள்ளனர். இதில் அதிகாரிகளின் பதில் வழக்கம் போல் இருந்த நிலையில் ஆத்திரம் அடைந்த மக்கள், அதிகாரிகளிடம் தங்கள் குறையை கோவமாக கொட்டி தீர்த்தனர், இதில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. பின்பு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாவட்ட துணை தலைவர் திரு ஜேம்ஸ் மார்ட்டின் அவர்கள், அதிகாரிகளிடம் தங்கள் ஆறுதல் வார்த்தைகள் இதுவரை போதும் இனி வேண்டாம், அடுத்த குறை தீர்ப்பு கூட்டத்திற்குள் குடிநீர் குழாய்கள் ஏற்படுத்தி தர வேண்டும் , அதற்கு திருவொற்றியூர் மெட்ரோ நிர்வாகம் வேகமாக செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த பின்னர், மெட்ரோ அதிகாரிகள் ஒரு மாதத்திற்குள் நாங்கள் பணியை முடிப்போம் என்று உறுதி அளித்த பிறகு, மக்கள் களைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் திருவொற்றியூர் மெட்ரோ டெபோட் சுமார் 1 மணி நேரம் பரபரப்பாக தென்பட்டது.

சீன அதிபரின் வருகையை காட்டி 76,000 கோடி வரை தள்ளுபடி மறைக்கப்பட்டதா?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலமான மத்திய அரசின் அவலம் சாடுகிறார் தமிழ்நாடு இளைஞர் கட்சி மாநில துணைச் செயலாளர் க.முகமது அலி:

தற்போது வெளியாகியுள்ள செய்தியான எஸ்பிஐ வங்கி வாராக்கடன் தள்ளுபடி இந்திய தேசத்தை அச்சத்தில் ஆழ்த்தும் ஒரு செய்தியாக பார்க்கப்படுகிறது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கப்பட்டு இச்செய்தி ஊடகங்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பொறுப்பற்ற சிறுபிள்ளைத்தனமான நிர்வாகத்தின் வெளிப்பாடாக கருதப்படுகிறது. சிறுவர்கள் தான் பறிகொடுத்த பொருட்களை பக்கத்தில் இருப்பவரிடம் இருந்து திருடிக்கொண்டு அந்த பொருள் தன்னுடையது என்று பறைசாற்றுவது போல் மத்திய அரசுக்கு இணக்கமான தொழிலதிபர்களின் கடன்கள் சுமார் 76 ஆயிரத்து600 கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்து இந்திய அரசின் ரிசர்வ் வங்கியிடமிருந்து எடுத்துக்கொண்ட மத்திய அரசு செயல்பாடு சிறுபிள்ளைத்தனமாக அறியப்படுகிறது. இப்பேர்பட்ட நிர்வாகம் தொடருமேயானால் இந்திய தேசத்தின் பொருளாதாரம் மட்டுமல்ல இந்திய நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிநபரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் இதற்குப் பிறகும் தன்னை மாற்றிக் கொள்ளாத மத்திய அரசு செயல்பட்டால் இந்திய நாடு பொய்யுரைக்கும் நாடு என்று உலக நாடுகள் மத்தியில் உறுதி செய்யப்பட்டு விடும். இச்செயலை தமிழ்நாடு இளைஞர் கட்சி இன் மாநிலத் துணைச் செயலாளர் க.முகமது அலி அவர்கள் வருத்தங்களுடன் கூடிய கண்டனத்தை தெரிவித்தார்.

 

 

 

 

இந்தியாவின் இரண்டாவது சுதந்திர தினம் அக்டோபர் 12…

இந்தியாவின் இரண்டாவது சுதந்திர தினம் அக்டோபர் 12

மக்களுக்கான தகவல்களை பெற்று நாட்டு நலனை மேம்படுத்த உருவான தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமலான தினம் இன்று…

அரவக்குறிச்சி தொகுதியில் ஓர் அரசியல் மாற்றம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி

அரவக்குறிச்சி தொகுதியில் ஜல்லிக்கட்டில் உருவான தமிழ்நாடு இளைஞர் கட்சி தேர்தல் களத்தை சந்திக்க இளைஞர் காளைகளை வரவேற்பதாக அரவக்குறிச்சி தொகுதியில் ஓர் அரசியல் மாற்றம் என்ற தலைப்பில் அறிவித்துள்ளது.

அரவக்குறிச்சி வாக்காளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க முகாம்கள் நடத்தப்படும் இடங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும் என மாநில துணைச்செயலாளர் க.முகமது அலி அவர்கள் அறிவித்தார்.

மாமல்லபுரத்தில் வேட்டி சட்டையில் ஜின்பிங்கை வரவேற்ற மோடி

சீன அதிபரை வரவேற்க தமிழக பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் மோடி வருகை.

மாமல்லபுரத்தில் அர்ஜுனன் தபசு பகுதியில் சீன அதிபரை பிரதமர் மோடி தற்போது அழைத்துச் செல்கிறார். தமிழர்களின் சிற்பக் கலையை அதிசயத்துடன் ரசித்து பார்க்கிறார் கன அதிபர்,
இதை அடுத்து ஐந்து ரதம் பகுதிக்கு இருவரும் செல்கி றார்கள். மாமல்லபுரத்தில் அர்ஜுனன் தபசு பகுதியில் சீன அதிபரை பிரதமர் மோடி தற்போது அழைத்துச் செல்கிறார்.

தமிழர்களின் சிற்பக் கலையை அதிசயத்துடன் ரசித்து பார்க்கிறார் கன அதிபர், இதை அடுத்து ஐந்து ரதம் பகுதிக்கு இருவரும் செல்கிறார்கள்.

அரசியல் பழகு

?முன்னுரிமை?
? நண்பர்களே, தினமும் மாலை 7-8 மணிக்குள் நம் பேஸ்புக் நேரலை
?தயவுசெய்து பங்கேற்று ஒரு ஊடாடும் அமர்வை உருவாக்கவும்
?TNYP கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்கள் பற்றிய நம் எல்லா கேள்விகளையும் தெளிவுபடுத்த முடியும்,
?சமூகப் பிரச்சினைகளில் நிலைப்பாடு
தினசரி ஒரு தலைப்பை எடுத்து விவாதிப்போம்
?தவறவிடாதீர்கள்

?தயவுசெய்து நேரடி ஒளிபரப்பில் கருத்துத் தெரிவிக்கவும், பகிரவும்
? புரிந்துகொள்ளுதலுக்கும் ஆதரவிற்கும் நன்றி

*அரசியல் பழகு – ஒரு கலந்துரையாடல்*
தினம் இரவு 7 மணி முதல் 8 மணி வரை
நேரடி ஒளிபரப்பில் பங்குகொள்வோம்
Fb.me/tnyparty

போனஸ் என்றால் என்ன? இந்தியர்னா சும்மாவா?

இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வார சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்தது…!! ( வருடத்திற்கு 52 வாரங்கள்). ஆங்கிலேயர்கள் மாத சம்பள முறையை அமுல் படுத்தினார்கள் 4வாரங்களுக்கு ஒரு சம்பளம் என கணக்கிட்டு மாத சம்பளமாக கொடுத்தனர்…!!(12×4=48 வாரங்கள்). அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் 4வாரத்திற்கு ஒரு சம்பளம் என்று கணக்கிட்டு பார்த்தால் வருடத்திற்கு 13 சம்பளம் வர வேண்டும்.

இந்தியர்னா சும்மாவா?

அதனை தரும்படி 1930-1940 களில் மஹாராஷ்டிரா வில் உள்ள தொழிற்சங்க ஊழியர்கள் தங்களது 1 மாத சம்பளம் வஞ்சிக்கப் படுவதாக போராடினார்கள்.அதன் விளைவாக அந்த ஒரு மாத சம்பளத்தை எப்போது எப்படி கொடுக்கலாம் என பிரிட்டிஷார் தொழிற்சங்க தலைவர்களுடன் ஆலோசனை செய்தார்கள்.அப்போது தான் தீபாவளி / தசரா பண்டிகை பிரசித்தி பெற்ற பண்டிகையாதலால் அதனையொட்டி கொடுத்தால் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அது வசதியாக இருக்கும் என கோரிக்கை வைத்ததின் விளைவாக போனஸ் என்ற பெயரில் முதன் முதலில் 1940ம் வருடம் ஜூன் மாதம் 30ம் தேதி வழங்கப்பட்டது.

பின்நாட்களில் அது லாப விகிதத்தை கணக்கிட்டு விஸ்தரிக்கப்பட்டது.ஆக போனஸ் என்பது விடுபட்ட-கொடுக்கப்படாத- நமக்குரிய (சேர வேண்டிய) ஒரு மாத சம்பளம்.

இன்றைக்கு பல மக்களுக்கு இந்த சரித்திர நிகழ்வு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. !!

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES