Thursday , July 31 2025
Breaking News
Home / Admin (page 6)

Admin

இரண்டாவது முறையாக மகத்தான வெற்றியடையச் செய்தமக்களின் பேரன்பிற்கும் பேராதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு…

இந்தியா கூட்டணி-காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி MP இரண்டாவது முறையாக மகத்தான வெற்றியடையச் செய்தமக்களின் பேரன்பிற்கும் பேராதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர், மாண்புமிகு உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் நேற்று குஜிலியம்பாறை ஒன்றியம் லந்தக்கோட்டை ஊராட்சியில் துவங்கிவைத்தார்கள். தேர்தல் காலம் போலவே பேரன்போடு வரவேற்ற எமது சகோதர சகோதரிகளுக்கும், தேர்தல் பணியில் …

Read More »

அதானியின் பங்குச் சந்தை மோசடிகள் குறித்து சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்….

அதானியின் பங்குச் சந்தை மோசடிகள் குறித்து ஹிண்டன்பர்க் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரியும், சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில் நாளை (22.8.2024) வியாழக்கிழமை மாலை 3.00 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் சட்டமன்ற …

Read More »

அதானியின் பங்குச் சந்தை மோசடி

அதானியின் பங்குச் சந்தை மோசடி குறித்து அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆதாரத்துடன் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. இதில் செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி பூச்சும், அவரது கணவரும் சம்பந்தப்பட்டுள்ளது சமீபத்தில் ஆதாரங்களுடன் வெளி வந்திருக்கிறது. அரசாங்கத்தையே விலைக்கு வாங்கியுள்ள அதானிக்கு செபி தலைவரை விலைக்கு வாங்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. செபி தலைவரும், அவரது கணவரும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் ரகசியமாக முதலீடு செய்ததாக ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி …

Read More »

புதுச்சேரியில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளை ஒட்டி அன்னாரது சிலைக்கு ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாநில தலைவர் சு.அமுதரசன் தலைமையில்நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் -ஒரு சிறப்பு பார்வை

சாமானிய மக்களுக்கும் ஆள வேண்டும் என்ற எண்ணத்தோடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை உருவாக்கியவரும் நவீன இந்தியாவை உருவாக்கிய தொலைநோக்கு பார்வை கொண்ட மகத்தான தலைவர் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுடைய பிறந்தநாள் விழாவை ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக 20 .8.2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணிக்கு தலைவர் ராஜீவ் காந்தியின் சிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பொதுமக்களுக்கு …

Read More »

தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா…

பாரத ரத்னா திரு.ராஜீவ்காந்தி அவர்களின் 80வது பிறந்தநாள் விழா மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நேற்று (20.08.2024) சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டேன். மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினேன். பாரத ரத்னா ராஜீவ்காந்தி அவர்கள் குறித்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட ஊடக ஆளுமைகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. விழாவில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவல்ல …

Read More »

உபி-யில் சுட்டு கொல்ல பட்ட தலித் இளைஞர் அர்ஜுன் பாசியின் குடும்பத்தினரை சந்தித்தார் ராகுல்…

உபி-யில் சுட்டு கொல்ல பட்ட தலித் இளைஞர் அர்ஜுன் பாசியின் குடும்பத்தினரை சந்தித்தார் ராகுல். தலித் இளைஞர் அர்ஜுன் பாசி பொது இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு அவரது குடும்பத்தினர் தொடர்ந்து நீதி கேட்டு வருகின்றனர். இன்று எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தி ரேபரேலியில் அர்ஜுன் பாசியை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களை சந்தித்தார். இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்பி தலித் குடும்பத்திற்கு நீதி வழங்குவோம் …

Read More »

ஸ்ரீபெரும்புதூரை உருவாக்குவதே குறிக்கோள்-தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை

நிலையான ஸ்ரீபெரும்புதூர் முயற்சியானது ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத்தை அதன் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் கட்டமைப்பில் நிலையான வளர்ச்சி நடைமுறைகளை ஒருங்கிணைத்து மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.உள்ளூர் மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது, இந்த முயற்சி சமூக ஈடுபாட்டை வளர்க்கிறது மற்றும் மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கிறது. ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (SDGs), குறிப்பாக SDG 13 (காலநிலை நடவடிக்கை) உடன் இணைவதன் மூலம், இந்த முயற்சி …

Read More »

திமுக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்கள் சத்தியமூர்த்திபவனில் முத்தமிழறிஞர் கலைஞர் நாணயம் ஒன்றை நினைவு பரிசாக வழங்கினார்…

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) நடைபெற்ற விழாவில் முத்தமிழறிஞர் கலைஞர் நாணயம் வெளியிடப்பட்டது. அந்த விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். திமுக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்கள் இன்று (20.08.2024) சத்தியமூர்த்திபவனில் முத்தமிழறிஞர் கலைஞர் நாணயம் ஒன்றை நினைவு பரிசாக வழங்கினார். உடன் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இருந்தார்கள்.

Read More »

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட,விராலிமலை சட்டமன்ற தொகுதியில் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட,விராலிமலை சட்டமன்ற தொகுதியில் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியை துவங்கிவைத்து, ஐந்து நாட்கள் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும்,பேருராட்சிகளிலும் மிகச்சிறப்பாக நடத்தி முடித்த புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர், அன்பிற்குரிய அண்ணன் திரு.KKசெல்லபாண்டியன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! இந்நிகழ்வை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்து,வெற்றிகரமாக நடத்திக்கொடுத்த திமுக நகர,ஒன்றிய,பேரூராட்சி,ஊராட்சி செயலாளர்களுக்கும்,காங்கிரஸ் கட்சியின் வட்டார,நகர,பேரூராட்சி ,ஊராட்சி நிர்வாகிகளுக்கும்,இந்தியா கூட்டணி நிர்வாகிகளுக்கும், ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் …

Read More »

பாரத ரத்னா திரு.ராஜிவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சத்தியமூர்த்திபவனில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை

முன்னாள் பிரதமர், பாரத ரத்னா திரு.ராஜிவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (20.08.2024) சென்னை, சத்தியமூர்த்திபவனில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தோம். பின்பு சமூக நல்லிணக்கநாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். பின்பு சத்தியமூர்த்தி பவனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமினை திறந்து வைத்தோம். நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திரு.எம்.கிருஷ்ணசாமி அவர்கள், திரு.கே.வீ.தங்கபாலு அவர்கள், திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள், தமிழ்நாடு …

Read More »
NKBB TECHNOLOGIES