Monday , July 28 2025
Breaking News
Home / Kanagaraj Madurai (page 7)

Kanagaraj Madurai

மணப்பாறையில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கிய ஜி.ஹெச்.சி.எல் பவுண்டேஷன் மற்றும் பெட்கிராட் தொழில் பயிற்சி பள்ளி..!

மணப்பாறையில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கிய ஜி.ஹெச்.சி.எல் பவுண்டேஷன் மற்றும் பெட்கிராட் நிறுவனத்திற்கு மாணவர்களின் பெற்றோர்கள், கிராம பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்து கொண்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பொடங்குப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகள் இல்லாததால் ஏழை மாணவ, மாணவிகள் கம்ப்யூட்டர் …

Read More »

மதுரையில் கேசவ கேந்திரா சேவா மையம் மற்றும் நடராஜன் நினைவு கல்வி அறக்கட்டளை இணைந்து, பொதுமக்களுக்கு இலவச அக்குபஞ்சர் சிகிச்சை..!

மதுரை திருப்பாலை கிருஷ்ணன் கோவில் எதிரே உள்ள கேசவ கேந்திரா சேவா மையம் மற்றும் நடராஜன் நினைவு கல்வி அறக்கட்டளை இணைந்து, பொதுமக்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை இலவசமாக வழங்கப்பட்டது.டாக்டர் என்.மாரி சிகிச்சை அளித்தார். இதில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இது குறித்து டாக்டர் என் மாரி கூறுகையில்,கேசவ சேவா கேந்திரம் மற்றும் நடராஜன் நினைவு கல்வி அறக்கட்டளை இணைந்து இந்த அக்குபஞ்சர் முகாம் …

Read More »

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆலோசனைப்படி பகுதி செயலாளர் கே.ஆர்.சித்தன் நீர் மோர் வழங்கினார்

மதுரையில் சுட்டெரித்து வரும் கோடை வெயிலில் மக்களின் தாகம் தீர்ப்பதற்காக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ ஆலோசனைப்படி,கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு மேற்கு 6-ஆம் பகுதி கழகத்தின் சார்பாக பகுதி செயலாளர் விளாங்குடி கே.ஆர்.சித்தன் ஏற்பாட்டில் நீர்,மோர்,தர்பூசணி பழங்கள் வெள்ளரிக்காய் ஆகியவை வழங்கப்பட்டது. வட்டக் கழக செயலாளர்கள் சுந்தர்ராஜன், கேசவன்,மலைச்சாமி, நாராயணன், விஜயகுமார், ஜஸ்டஸ் ராஜா, இளைஞரணி எஸ்.கண்ணன்,ஐ.டி விங் மாவட்ட துணைச் …

Read More »

மதுரையில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் மற்றும் சுப்பராயலு நினைவு நடுநிலைப் பள்ளி இணைந்து இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள சுப்பராயலு நினைவு நடுநிலைப் பள்ளியில், டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் சார்பாக பள்ளி மாணவர்களுக்கான கோடைகால இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. சிலம்புக்கலை, ஓவியப்பயிற்சி, யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. 5-வயது முதல் 13-வயது வரை உள்ள குழந்தைகள் இருபாலர்களும் கலந்து கொள்ளலாம் எனவும், பயிற்சி முடிந்தவுடன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்படும் என அமைப்பின் தலைவர் செந்தில்குமார் …

Read More »

மதுரையில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பாக செய்தியாளர்கள் கவுரவிப்பு..!

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக மே 3 உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநில தலைவர் சரவணன் வழிகாட்டுதலின்படி மதுரையில் ஊடகம் மற்றும் பத்திரிகை துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் செய்தியாளர்கள் மற்றும் மருத்துவர் ஆசிரியர் சமூக சேவை உள்ளிட்ட பணிகளில் தொடர்ந்து களப்பணியாற்றி வருபவர்களை ஊக்குவிக்கும் விதமாக பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச் சங்கம் மதுரை …

Read More »

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வி.பி.ஆர் செல்வகுமார் நீர்,மோர் வழங்கினார்.

முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ ஆணைக்கிணங்க, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அதிமுக செயல்வீரர் வி.பி.ஆர் செல்வகுமார் நீர் மோர் வழங்கினார் தமிழகத்தில் வரலாறு காணாத வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் அதிமுக நிர்வாகிகள் மக்களுக்கு நீர்மோர் வழங்குவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். மதுரையிலும் 100 டிகிரியையும் தாண்டி வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. …

Read More »

மதுரை மேற்கு 6-ம் பகுதி அதிமுக செயலாளர் கே.ஆர் சித்தன் பிறந்த நாள் விழா : கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் வாழ்த்து..!

முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் செல்லூர் கே ராஜூ எம்.எல்.ஏ ஆசியுடன், மதுரை மேற்கு 6-ம் பகுதி அதிமுக செயலாளர் கே.ஆர் சித்தன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு 20-வது வார்டு கவுன்சிலர் நாகஜோதி சித்தன், முக்குலத்தோர் வாழ்வுரிமைக் கட்சி தலைவர் ஜெயக்குமார் தேவர், வட்டக் கழக செயலாளர்கள் சுந்தர்ராஜன், கேசவன்,மலைச்சாமி, நாராயணன், விஜயகுமார், ஜஸ்டஸ் ராஜா, ஐ.டி …

Read More »

அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கம் கோவை சார்பாக பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் சார்பாக 4-ஆம் ஆண்டு வண்ணத் திருவிழா..!

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கம் கோவை சார்பாக பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் சார்பாக 4-ஆம் ஆண்டு வண்ணத் திருவிழா நடைபெற்றது. மேலும் இலப்பைக்குடிக்காடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஏராளமானோர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர். இந்நிகழ்விற்கு மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.பி கிட்டு என்ற கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேசு …

Read More »

மதுரையில் அண்ணா தொழிற்சங்கம் சார்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

மதுரையில் 100 டிகிரியை தாண்டி கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது மதியம் 12 மணியிலிருந்து 5 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் எனவும் வேலை நிமித்தமாக வெயிலில் செல்பவர்கள் நீர்மோர் இளநீர் மேலும் தண்ணீர் அதிகமாக பருக வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். அதை செயல்படுத்தும் …

Read More »

மதுரையில் அண்ணா தொழிற்சங்கம் பி.ஆர்.சி மண்டலம் சார்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ முன்பு அண்ணா தொழிற்சங்கம் பி.ஆர்.சி மண்டலம் சார்பாக மண்டல செயலாளர் மகாலிங்கம் தலைமையிலும், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சக்தி விநாயகர் பாண்டியன் முன்னிலையிலும் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், அண்ணாதுரை, பா.குமார்,சக்திமோகன், எம்.எஸ்.கே.மல்லன், வி.பி.ஆர்.செல்வகுமார், பரவை ராஜா, மார்க்கெட் செந்தில்குமார், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ராஜாங்கம், மூவேந்திரன்,உசிலை …

Read More »
NKBB TECHNOLOGIES