மதுரை கோரிப்பாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர் மதுரை,பிப்.28 குலசேகரப்பட்டினத்தில் உருவாக்கப்படுகின்ற ராக்கெட் ஏவுதளத்தை கைவிட வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும்,மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே காங்கிரஸ் கட்சி சார்பாக மதுரை மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென சாலைக்கு சென்ற மாவட்ட தலைவர் கார்த்திகேயன் மற்றும் 31-வது வார்டு கவுன்சிலர் தல்லாகுளம் முருகன் …
Read More »தமிழ்நாட்டில் இருந்து லண்டன் சென்று அதிக ஞாபகத் திறன் மூலம் சோழன் உலக சாதனை படைத்த 8 வயது மாணவி ஸ்ரீ வித்யா
தமிழ்நாட்டில் இருந்து லண்டன் சென்று அதிக ஞாபகத் திறன் மூலம் சோழன் உலக சாதனை படைத்த 8 வயது மாணவி ஸ்ரீ வித்யாவுக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். லண்டனில் வசித்து வரும் ராஜகோபால் மற்றும் லக்ஷ்மி தம்பதியரின் மகள் ஸ்ரீ வித்யா 3 நிமிடங்கள் மற்றும் 26 நொடிகளில் 150 உலக நாடுகளுடைய கொடிகளை அந் நாட்டின் பெயர்களைக் கூறி அடையாளம் காட்டிய அதேவேளை அந் நாடுகளுடைய தேசிய …
Read More »விவசாயிகள் போராட்டத்தில் பலியான சுப்ரவன் சிங்குக்கு மதுரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய விவசாயிகள்
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் பலியான விவசாயி சுப்ரவன் சிங்குக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல்மூர்த்தி, தமிழ்நாடு அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு மாநில கவுரவ தலைவர் எம்.பி ராமன், 31-வது வார்டு கவுன்சிலர் தல்லாகுளம் முருகன், 58 கால்வாய் விவசாயிகள் சங்கத் தலைவர் பொன் மணிகண்டன், மாடக்குளம் …
Read More »மனிதநேய மக்கள் கட்சி 16 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக நலத்திட்ட உதவிகள்
மனிதநேய மக்கள் கட்சியின் 16 ஆம் ஆண்டு துவக்க விழா மதுரை,பிப்.25- மனிதநேய மக்கள் கட்சியின் 16 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, மதுரை தெற்கு மாவட்டம் 77-வது வார்டு சுப்ரமணியபுரம் கிளை சார்பாக கட்சி கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மேலும் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டு …
Read More »திருப்பரங்குன்றம் கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக அன்னதானம்
பௌர்ணமியை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் நடந்து சென்ற பக்தர்களுக்கு ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக அதன் மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ்.பரமன் அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்விற்கு டிரஸ்ட் பொருளாளர் திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை டிரஸ்டி முத்துலட்சுமி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கருப்பசாமி ஆசிரியர், ஜெயராம் – சாந்தலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Read More »மதுரை பெத்தானியாபுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76- வது பிறந்த நாள் விழா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை பெத்தானியாபுரத்தில் அதிமுக 63 வது வட்டக்கழகத்தின் சார்பாக மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜா தலைமையில், 63 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பி.ஆர்.சி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் வட்டக்கழக நிர்வாகிகள் …
Read More »மதுரை விளாங்குடியில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டது
மதுரை மாநகராட்சி வார்டு 1 புதுவிளாங்குடி நேருஜி மெயின் ரோட்டில் புதிதாக தார்சாலை விரைவில் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் மீனாட்சி காபி பாரில் இருந்து பாலமுருகன் கோவில் வரை சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் இன்று மேற்கொண்டனர். பொதுமக்களே தாமாக ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான காலஅவகாசம் மாநகராட்சி சார்பாக ஏற்கனவே வழங்கியும், அகற்றாததால் ஜேசிபி புல்டோசர் மூலம் இன்று அதிரடியாக அகற்றப்பட்டது. கூடல்புதூர் காவல்துறையினர் பாதுகாப்பு …
Read More »பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்த தமிழர் விடுதலைக் களம்
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தமிழர் விடுதலைக் களம் நிறுவனத்தலைவர் ப.ராஜ்குமார் பாண்டியன் சந்தித்து, வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு தங்களது ஆதரவை தெரிவித்தார். இதில் நிர்வாகிகள் வழக்கறிஞர் சாமி, திருச்சி சேகர், மதுரை முத்துப்பாண்டி மற்றும் அழகிரி, ரமேஷ் மள்ளர், காளிதாஸ், செம்பூர் ரமேஷ்,மணிபாண்டின், வண்ணை முருகன், உதயகுமார், ஆத்துவழி சுரேஷ், அந்தோணி, வல்லநாடு கந்தன்,நெல்லை காளி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Read More »ஹார்விபட்டியில் கல்கி பவுண்டேஷன் ட்ரஸ்ட் சார்பாக முதியோர் இல்லம் துவக்கப்பட்டது
மதுரை,பிப்.22 மதுரை மாவட்டம் ஹார்விபட்டியில் கல்கி பவுண்டேஷன் ட்ரஸ்ட் சார்பாக ஆதரவற்ற பெரியோர்களை பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் கல்கி முதியோர் இல்லம் துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு டிரஸ்ட் நிறுவனர் அங்குலட்சுமி தலைமை வகித்தார். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தொழிலதிபர் எம்.எம்.கணேசன் சேவையை தொடங்கி வைத்தார்.பின்னர் ஏழை,எளிய முதியோர்களுக்கு அன்னதானத்தை அவர் வழங்கினார். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் மேலும் இதுகுறித்து டிரஸ்ட் நிறுவனர் …
Read More »தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவு சார்பாக மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவு சார்பாக மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரை ரயில்வே நிலையம் மேற்கு நுழைவு வாயில் எதிரே உள்ள தனியார் உணவகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலை பிரிவு தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பெரு வாக்குகள் பெற வைத்து வெற்றி பெற …
Read More »