மதுரை மாவட்டம் மேலூரில் பெரியாறு ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கோரி பாஜக கிழக்கு மாவட்டம் சார்பாக விவசாய அணி மாவட்ட தலைவர் பூமிராஜன் தலைமையிலும், பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் மஹாலக்ஷ்மி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் பொதுச்செயலாளர்கள் வக்கீல் கண்ணன், கோசப்பெருமாள், துணைத்தலைவி மஞ்சுளா, மாவட்ட செயலாளர் ஹரிஹரன், ஆன்மிக பிரிவு …
Read More »தமுமுக மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு.!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக அனைத்து சமுதாய மக்களுக்காக 202 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள ஜின்னா திடலில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹிம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆம்புலன்ஸ் ஷேக் வரவேற்று பேசினார். தமுமுக மாநில தலைவர் எம்.ஹெச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ ஆம்புலன்ஸை அர்ப்பணித்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் ன …
Read More »மதுரையில் சோழன் உலக சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
மதுரை கே.கே நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் நடத்திய நிகழ்வில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த 12 வயது பள்ளி மாணவன் ஹரிஷ்ராஜ் என்பவர் ஐந்து படிநிலைகளைக் கொண்ட 100 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளை அபாகஸ் முறையை பயன்படுத்தி மூன்று நிமிடங்கள் மற்றும் 30 நொடிகளில் தீர்த்து சோழன் உலக சாதனை படைத்தார்.இதை கண்காணித்து உறுதி செய்தார் நடுவர் சிவசங்கரன் அவர்கள். …
Read More »மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள டேக் சிபிஎஸ்சி பள்ளியில் அறிவியல் மற்றும் கலை கண்காட்சி
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள டேக் சிபிஎஸ்சி பள்ளியில் அறிவியல் மற்றும் கலை கண்காட்சிநடைபெற்றது. பள்ளியின் தாளாளர்கள் மங்கள்ராம், திருமதி. காயத்ரி மங்கள்ராம் ஆகியோர் தலைமை வகித்தனர்.எட்டாம் வகுப்பு மாணவன் ஜெப்ரிஅனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளியின் முதன்மை முதல்வர் டாக்டர் சந்திரசேகர் அவர்கள் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார். தியாகராஜா பொறியியல் கல்லூரியில் முதல்வர் டாக்டர் திரு பழனிநாதராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி சிறப்பித்தார். …
Read More »மதுரையில் இ.டி.ஐ.ஐ, அசஞ்சர் நிறுவனம், பெட்கிராட் இணைந்து சுயதொழில் பயிற்சி துவக்க விழா
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அசஞ்சர் நிறுவனம், பெட்கிராட் தொழில் பயிற்சி பள்ளி இணைந்து காய்கறி பழங்கள் பதப்படுத்துதல், சிறுதானிய உணவு பொருட்கள் தயாரித்தல் போன்ற இலவச சுயதொழில் பயிற்சி துவக்க விழா மதுரை கோ.புதூர் வண்டிப்பாதை மெயின் ரோடு பகுதியில் பெட்கிராட் நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பெட்கிராட் பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார். இ.டி.ஐ.ஐ முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் குத்துவிளக்கேற்றி …
Read More »மதுரையில் ஸ்ரீ அரவிந்தோ மீரா பள்ளியில் பிரமாண்டமாக 100 அடி உயர கம்பத்தில் அமைக்கப்பட்டிருந்த தேசிய கொடியை எஸ்.பி.சிவபிரசாத் ஏற்றி வைத்தார்.
மதுரை துவரிமான் அருகே உள்ள ஸ்ரீ அரவிந்தோ மீரா பிரபஞ்சப் பள்ளி, மதுரையில் ஒரு வரலாற்று நிகழ்வை பெருமையுடன் நிகழ்த்தியது. நகரத்தில் உள்ள பள்ளிகளிலேயே முதல் மற்றும் உயரமான 100 அடி தேசியக் கொடிக்கம்பத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரசாத் ஐ.பி.எஸ் அவர்கள் பிரமாண்டமான 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் …
Read More »மதுரை மாநகராட்சி ஆணையாளரை சந்தித்த பொறியியல் பிரிவு பணியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள்.!
மதுரை மாநகராட்சியில் வரி வசூலிக்கும் பணியை தனியார் மூலம் மேற்கொள்ள உள்ளதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது. அரசுத்துறைகளை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் வகையில், மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர் சங்கம், தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் இணைந்து மாநகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து முறையிட்டனர். அவர்கள் கூறியதை கவனமாக கேட்டறிந்த ஆணையாளர் இணையதளம் மூலமாக பணம் செலுத்தும் …
Read More »மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் : விவசாயிகள் வெளிநடப்பு
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. திருமங்கலம், மேலூர் பாசன கால்வாயில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து திருமங்கலம் பகுதி விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபெல் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில்:- 21/04/2010 அன்று அன்று திருமங்கலம் கால்வாய், கள்ளந்திரி கால்வாய், மேலூர் கால்வாய் மூன்றுக்கும் ஒன்றாக தண்ணீர் திறந்து விட …
Read More »சாதனை படைத்த மாணவிக்கு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் நிர்வாகிகள் வாழ்த்து.!
சீனாவின் ஹாங்காங் நகரில் நடைபெற்ற 19-வது ஏசியன் ரோலர் ஹாக்கி போட்டியில் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஜெயஸ்ரீ ஹர்ஷினி,3-வது இடத்தைப் பிடித்து வெண்கல பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். சாதனை படைத்த அவருக்கு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா தேசிய இயக்குனர் சர்க்கார் அவர்களின் ஆலோசனைப்படி, மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிச்சைவேல் தலைமையில் சால்வை அணிவித்தும் கேடயம் வழங்கியும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. …
Read More »உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டி தமிழக அரசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து உசிலை சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபெல் மூர்த்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் மாநில கௌரவ தலைவர் எம்.பி.ராமன் உள்பட விவசாய சங்க நிர்வாகிகள் …
Read More »