Friday , December 19 2025
Breaking News
Home / செய்திகள் (page 109)

செய்திகள்

All News

மதுரையில் அகில இந்திய முன்னாள் துணை ராணுவப்படை, தமிழ்நாடு சங்கம் சார்பாக கலந்தாய்வு கூட்டம்

மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய முன்னாள் துணை ராணுவப்படை, தமிழ்நாடு சங்கம் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் எஸ்.கே. சீனிவாசன், துணை சேர்மன் ஏ.வி பாண்டியன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைமுன்னாள் துணை ராணுவ படை மாவட்ட செயலாளர் ராமன் ஒருங்கிணைத்தார்.

மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சித்திக் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். இதில் மாநில இளைஞரணி தலைவர் ஜெரோன்குமார் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ரபீக், மாவட்ட விவசாய அணி அழகுபாண்டி, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் ஜாகிர்உசேன், மாவட்ட தமிழர் படை தலைவர் கபார்கான் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டெல்லியின் புதிய போலீஸ் கமிஷனராக சஞ்சய் அரோரா ஆகஸ்ட் 1-ம் தேதி பொறுப்பேற்பு.!

டெல்லியின் புதிய போலீஸ் கமிஷனராக சஞ்சய் அரோரா ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பொறுப்பேற்க உள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த இந்திய போலீஸ் சர்வீஸ் (ஐபிஎஸ்) அதிகாரியான அரோரா ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பொறுப்பேற்க உள்ளார்.

1988 ஆம் ஆண்டு ஐபிஎஸ் குழுவைச் சேர்ந்த அரோரா, தற்போது இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ஐடிபிபி) காவல்துறை தலைமை இயக்குநராக (டிஜிபி) பணியாற்றி வருகிறார்.

சஞ்சய் அரோரா தற்போது இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறையின் (ஐடிபிபி) டிஜிபியாக பணியாற்றி வருகிறார்.

புது தில்லி: ஐபிஎஸ் அதிகாரிசஞ்சய் அரோராகமிஷனராக நியமிக்கப்பட்டார் டெல்லி காவல்ஞாயிறு இன்று.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, குஜராத் கேடர் ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானாவுக்குப் பிறகு, தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த இந்திய போலீஸ் சர்வீஸ் (ஐபிஎஸ்) அதிகாரி அரோரா நியமிக்கப்படுகிறார்.

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அவர் பொறுப்பேற்பார், மறு உத்தரவு வரும் வரை அவர் பதவியில் நீடிப்பார்.

தில்லி காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் அருணாச்சலப் பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் (AGMUT) கேடருக்கு அரோராவை,

இடை-கேடர் பிரதிநிதித்துவப்படுத்த தகுதியான ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

AGMUT கேடருக்கு வெளியில் இருந்து ஒரு அதிகாரி தேசிய தலைநகரின் போலீஸ் படைக்கு தலைமை தாங்குவது சமீபத்திய வரலாற்றில் இது மூன்றாவது முறையாகும்.

1988 ஆம் ஆண்டு ஐபிஎஸ் குழுவைச் சேர்ந்த அரோரா, தற்போது இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ஐடிபிபி) காவல்துறை தலைமை இயக்குநராக (டிஜிபி) பணியாற்றி வருகிறார்.

Sashastra Seema Bal (SSB) இன் டைரக்டர் ஜெனரலாகப் பணிபுரியும் SL தாஸென், மறு அறிவிப்பு வரும் வரை ITBP இன் DGP பதவியின் கூடுதல் பொறுப்பைப் பெறுவார்.

தாஸென் மத்திய பிரதேசத்தின் 1988 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐடிபிபி டிஜியாக நியமிக்கப்பட்ட அவர் ஜூலை 2025 வரை பணியில் இருக்கிறார்.

முன்னதாக, வனக் கொள்ளையர் வீரப்பனைத் துரத்திய தமிழ்நாடு காவல்துறை எஸ்டிஎஃப் எஸ்பியாக அரோரா பணியாற்றினார்.

2002 முதல் 2004 வரை கோயம்புத்தூர் காவல் ஆணையராகப் பணியாற்றிய அவர், சிஆர்பிஎஃப் மற்றும் பிஎஸ்எஃப் ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார்.

எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் பி டெக் பட்டம் பெற்றவர்.

மதுரையில் மனித உரிமை செல் மாநில கலந்தாய்வு கூட்டம் மற்றும் விருது வழங்கும் விழா.!

மதுரையில் மனித உரிமை செல் மாநில கலந்தாய்வு கூட்டம் மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தலைவர் குமாரகிருஷ்ணன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.முன்னதாக எஸ்.எஸ்.காலனியில் உள்ள மேற்கு மண்டல அலுவலகத்தை அவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முனைவர் பிச்சைவேல் தலைமை வகித்தார். மேற்கு மண்டல தலைவர் டாக்டர் ராகவன் மற்றும் மேற்கு மண்டல துணைத் தலைவர் டாக்டர் கஜேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்வின் போது பல்வேறு சமூக சேவைகள் செய்ததற்காக மாவட்ட தலைவர் முனைவர் பிச்சைவேல், பத்திரிகையாளர் மயிலேறி, மருத்துவர் குருலட்சுமி கஜேந்திரன், டாக்டர் ஆர்த்தி, பாலாஜி போன்றவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் இளைஞரணி செயலாளர் சிலம்பம் சண்முகவேல், பரவை அசோக், பொன்முருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மண்டல பொருளாளர் பாலமுருகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கம் சார்பாக பெருந்திரள் முறையீடு போராட்டம்

மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கம் சார்பாக அறிஞர் அண்ணா மாளிகை முன்பு,12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது.

ஓய்வு பெறும் நாளிலேயே அனைத்து ஓய்வூதிய பழங்களையும் வழங்கிட வேண்டும்.

தகுதியுள்ள அனைவருக்கும் அனைத்து நிலை பதவி உயர்வு வழங்கிட வேண்டும். கொரோனா ஊரடங்கு காலத்தில் பணியாற்றிய முன் களப்பணியாளர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை 15 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும். போன்ற 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கண்டன கோஷங்களை நிர்வாகிகள் எழுப்பினர்.

இப்போராட்டத்திற்கு மாநிலத் துணைப்பொதுச் செயலாளர் சி.எம் மகுடீஸ்வரன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மண்டல நிர்வாகிகள் துரைராஜ், சின்னச்சாமி, செல்லப்பா, அழகுபாண்டி, செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் செல்வம் துவக்க உரை ஆற்றினார். பொறியியல் பிரிவு பணியாளர் சங்கத்தின் செயலாளர் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர் கே.கண்ணன் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் இரா.தமிழ் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நீதிராஜா சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பொறியியல் பிரிவு பணியாளர் சங்கத்தின் பொருளாளர் கே.டி. துரைக்கண்ணன் நன்றியுரை கூறினார்.

இந்நிகழ்வில் நகர்ப்புற சுகாதார செவிலியர் சங்க தலைவர் பஞ்சவர்ணம், எழுத்தர் சங்க துணைத் தலைவர் எஸ்.சின்னச்சாமி, வருவாய் உதவியாளர் சங்கம் முகுந்தன், ஓட்டுனர் சங்கத் தலைவர் முருகன், தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க பொதுச் செயலாளர் தாமோதரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரையில் மின் கட்டண உயர்வை கண்டித்து சிம்னி விளக்குகள் ஏந்தி எஸ் டி பி ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில்

மதுரையில் மின் கட்டண உயர்வை கண்டித்து சிம்னி விளக்குகள் ஏந்தி எஸ் டி பி ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை முனிச்சாலை சந்திப்பு அருகே மின் கட்டண உயர்வை கண்டித்து, தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம், தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, தெற்கு மாவட்ட செயலாளர் ஆரிப்கான், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாநில பேச்சாளர் காஜாமைதீன், தெற்கு தொகுதி செயலாளர் பாஷா, ஊடக ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் தாஜூதீன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மூட்டா மற்றும் டான்சாக் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மூட்டா மற்றும் டான்சாக் சார்பாக தியாகராஜர் கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ‌

தியாகராஜர் கல்லூரியில் விதியை மீறி நடைபெறும் ஆசிரியர் அலுவலர் பணி நியமனத்தை தடுத்திடு எனவும், கட்டாய தேர்வு கட்டணத்தால் வாய்ப்பை இழந்த விண்ணப்பதாரர்களும் வாய்ப்பு பெறும் வகையில் பணி நியமன தெரிவை புதிதாக நடத்திடு எனவும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மூட்டா ‌செயலாளர்கள் பெர்மின் ஏஞ்சலோ செல்வின், பெரியசாமிராஜா,டான்சாக் செயலாளர் மனோகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

4 காங்கிரஸ் உறுப்பினர்கள் மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம்…

மக்களவையில் திங்கள்கிழமை பிளக்ஸ் பேனர்களை அசைத்ததற்காக 4 காங்கிரஸ் உறுப்பினர்கள் மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உறுப்பினர்கள், மாணிக்கம் தாகூர், டி.என். பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் மற்றும் ஜோதிமணி ஆகியோர் சபையின் செயல்பாட்டைத் தடுத்ததாக விதி 374ன் கீழ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தலைவர் ராஜேந்திர அகர்வால், பிளக்ஸ் பேனர்களை அசைக்க வேண்டாம் என்று எச்சரித்தார். அவரது எச்சரிக்கையை உறுப்பினர்கள் ஏற்க மறுத்ததால், வாக்கெடுப்பை நிறுத்தி வைப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

சபை மாநாட்டின்படி நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, சபாநாயகர் ஓம் பிர்லா, பதாகைகளை வைத்திருக்கக் கூடாது என உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். “சட்டசபைக்குள் பிளக்ஸ் அட்டையை கொண்டு வரும் எந்தவொரு உறுப்பினரும் சபை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்,” என்று அவர் கூறினார்.

பால்,அரிசி,தயிர்,பென்சில், மருத்துவமனை என்று அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் மீதும் மோடி வரி விதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் ரூ100க்கு மேல், சமையல் எரிவாயு விலை 1000க்கு மேல்…

இதை எதிர்த்து போராடுவது குற்றமென்றால் அந்த குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்வோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் – கரூர் ஜோதிமணி கூறியது குறிப்பிடத்தக்கது.

வள்ளுவர் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் NKBB டெக்னாலஜிஸில் 20 நாட்கள் இன்டன்ஷிப்…

வள்ளுவர் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வேர்ட்பிரஸ் கட்டமைப்பில் இணையதள மேம்பாட்டிற்காக என்கேபிபி டெக்னாலஜிஸில் 20 நாட்கள் இன்டன்ஷிப் எடுத்துள்ளனர்.

இளைஞர் குரல், சாமானிய மக்கள் நலக்கட்சி போன்ற என்கேபிபி டெக்னாலஜிஸ் வாடிக்கையாளர்களுக்கு இணையதள மேம்பாட்டில் மாணவர்கள் பணியாற்றினர்.

மாணவர்கள் கேன்வா டிசைன் டூல் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றனர். (குறிப்பாக இன்ஸ்டன்ட் டேட்டா ஸ்கிராப்பர் கருவியைப் பயன்படுத்தி தரவு வேட்டையாடும் செயல்முறை). 

சாமானிய மக்கள் நலக்கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் குணசேகரன் சார்பில், சாமானிய மக்கள் நலக்கட்சியின் இணையதள வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள பயிற்சியாளர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.



The Students from Valluvar College has taken 20 days internship at NKBB Technologies for website development in WordPress Framework.

Students worked on Website Development to NKBB Technologies clients such as ilangyar Kural, Samaniya Makkal Nalakatchi .

Students had taken training on Canva Design Tool and Digital Marketing too…Especially Data Hunting Process by using Instant Data Scraper tool.

On behalf of the Samaniya Makkal Nalakatchi General Secretary Dr. Gunasekaran said, I would like to express my best wishes and thanks to the trainees involved in the development of the website of the Samaniya Makkal Nalakatchi

மணப்பாறை மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளில் இரண்டு அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு…

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 20 கலை அறிவியல் கல்லூரிகளைத் திறந்துவைத்து சாதனை படைத்துள்ளார்.

இதில் எமது கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மணப்பாறை மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளில் இரண்டு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளையும் இன்று காணொளி வாயிலாகத் திறந்து வைத்துள்ளார்கள்.

இந்த கல்லூரிகள் அமைய வேண்டும் என்பது எமது மக்களின், மாணவர்களின் நீண்ட காலக் கனவு.

அந்த கனவு இன்று நினைவாகி இருக்கிறது. இதற்கான முயற்சியில் எனது எளிய பங்களிப்பும் உள்ளது என்பதில் மகிழ்ச்சியும்,மனநிறைவும்.

மாண்புமிகு தமிழக முதல்வர் M. K. Stalin அவர்களுக்கும், உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பொன்முடி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் (காங்கிரஸ் MP) ஜோதிமணி அவர்கள் தெரிவித்தார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES