Tuesday , July 1 2025
Breaking News
Home / செய்திகள் (page 48)

செய்திகள்

All News

விவசாயிகள் போராட்டத்தில் பலியான சுப்ரவன் சிங்குக்கு மதுரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய விவசாயிகள்

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் பலியான விவசாயி சுப்ரவன் சிங்குக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

இதில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல்மூர்த்தி, தமிழ்நாடு அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு மாநில கவுரவ தலைவர் எம்.பி ராமன், 31-வது வார்டு கவுன்சிலர் தல்லாகுளம் முருகன், 58 கால்வாய் விவசாயிகள் சங்கத் தலைவர் பொன் மணிகண்டன், மாடக்குளம் கண்மாய் பாசன தலைவர் மாரிச்சாமி மற்றும் செல்லப்பாண்டி, முத்துமீரான், கர்ணன், அருண் மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மனிதநேய மக்கள் கட்சி 16 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக நலத்திட்ட உதவிகள்

மனிதநேய மக்கள் கட்சியின் 16 ஆம் ஆண்டு துவக்க விழா

மதுரை,பிப்.25-

மனிதநேய மக்கள் கட்சியின் 16 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, மதுரை தெற்கு மாவட்டம் 77-வது வார்டு சுப்ரமணியபுரம் கிளை சார்பாக கட்சி கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மேலும் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமுமுக மாநில நிர்வாக குழு உறுப்பினர் கே.முஹம்மது கவுஸ், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் காதர்மைதீன், மனிதநேய மக்கள் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் ஷேக்இப்ராஹிம், மாவட்ட செயலாளர் ஆம்புலன்ஸ் ஷேக், ம.ம.க மாவட்ட செயலாளர் முபாரக் நிஜாமுதீன் மமக மாவட்ட பொருளாளர் அப்துல் ஹமீது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 77 வது வார்டு சுப்ரமணியபுரம் கிளை மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் ஜாகிர்உசேன், பரக்கத்அலி, இஸ்மாயில் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

திருப்பரங்குன்றம் கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக அன்னதானம்

பௌர்ணமியை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் நடந்து சென்ற பக்தர்களுக்கு ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக அதன் மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ்.பரமன் அன்னதானம் வழங்கினார்.

இந்நிகழ்விற்கு டிரஸ்ட் பொருளாளர் திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை டிரஸ்டி முத்துலட்சுமி வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கருப்பசாமி ஆசிரியர், ஜெயராம் – சாந்தலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை பெத்தானியாபுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76- வது பிறந்த நாள் விழா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை பெத்தானியாபுரத்தில் அதிமுக 63 வது வட்டக்கழகத்தின் சார்பாக மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜா தலைமையில், 63 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பி.ஆர்.சி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் வட்டக்கழக நிர்வாகிகள் மற்றும் அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் பூக்கடை முருகன், இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் ராஜேஷ்கண்ணா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை விளாங்குடியில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டது

மதுரை மாநகராட்சி வார்டு 1 புதுவிளாங்குடி நேருஜி மெயின் ரோட்டில் புதிதாக தார்சாலை விரைவில் அமைக்கப்பட உள்ளது.

இந்நிலையில் மீனாட்சி காபி பாரில் இருந்து பாலமுருகன் கோவில் வரை சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் இன்று மேற்கொண்டனர்.

பொதுமக்களே தாமாக ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான காலஅவகாசம் மாநகராட்சி சார்பாக ஏற்கனவே வழங்கியும், அகற்றாததால் ஜேசிபி புல்டோசர் மூலம் இன்று அதிரடியாக அகற்றப்பட்டது.

கூடல்புதூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்த தமிழர் விடுதலைக் களம்

அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தமிழர் விடுதலைக் களம் நிறுவனத்தலைவர் ப.ராஜ்குமார் பாண்டியன் சந்தித்து, வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு தங்களது ஆதரவை தெரிவித்தார்.

இதில் நிர்வாகிகள் வழக்கறிஞர் சாமி, திருச்சி சேகர், மதுரை முத்துப்பாண்டி மற்றும் அழகிரி, ரமேஷ் மள்ளர், காளிதாஸ், செம்பூர் ரமேஷ்,மணிபாண்டின், வண்ணை முருகன், உதயகுமார், ஆத்துவழி சுரேஷ், அந்தோணி, வல்லநாடு கந்தன்,நெல்லை காளி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ஹார்விபட்டியில் கல்கி பவுண்டேஷன் ட்ரஸ்ட் சார்பாக முதியோர் இல்லம் துவக்கப்பட்டது

மதுரை,பிப்.22

மதுரை மாவட்டம் ஹார்விபட்டியில் கல்கி பவுண்டேஷன் ட்ரஸ்ட் சார்பாக ஆதரவற்ற பெரியோர்களை பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் கல்கி முதியோர் இல்லம் துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு டிரஸ்ட் நிறுவனர் அங்குலட்சுமி தலைமை வகித்தார்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தொழிலதிபர் எம்.எம்.கணேசன் சேவையை தொடங்கி வைத்தார்.பின்னர் ஏழை,எளிய முதியோர்களுக்கு அன்னதானத்தை அவர் வழங்கினார். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மேலும் இதுகுறித்து டிரஸ்ட் நிறுவனர் அங்குலட்சுமி கூறுகையில் :-

ஹார்விப்பட்டியில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கல்கி பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக ஏழை எளிய முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறேன்.

மேலும் எனது நீண்ட நாள் கனவு முதியோர் இல்லம் தொடங்கி ஆதரவற்ற முதியோர்களை பராமரிப்பது என்பதே எனது லட்சியமாக இருந்தது

அந்தக் கனவு இப்போது நிறைவேறி உள்ளது. மதுரை முழுவதும் உள்ள ஆதரவற்ற முதியோர்களை எனது இல்லத்தில் சேர்த்து அவர்களை பாசத்துடனும் பரிவுடன் கவனிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. என கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவு சார்பாக மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவு சார்பாக மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரை ரயில்வே நிலையம் மேற்கு நுழைவு வாயில் எதிரே உள்ள தனியார் உணவகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலை பிரிவு தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்

வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பெரு வாக்குகள் பெற வைத்து வெற்றி பெற வைப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.

பாஜக ஆட்சியை வீழ்த்துவது குறித்து எல்லா வியூகங்களையும் வகுத்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைப்படி கலைப்பிரிவு சார்பாக தீவிரமாக செயலாற்றி பணியாற்றுவது குறித்து தீர்மானிக்கப்பட்டது.

மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு மாநில செயலாளர் சந்திரசேகர் தலைமையில், மாவட்ட தலைவர்கள் ஈஸ்வரமூர்த்தி, துரைசிங், கார்த்திகேயன் கொண்ட குழு அமைப்பது எனவும், அதுபோல ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதிக்கும் கலைப்பிரிவு சார்பாக குழு அமைத்து கூட்டணி சார்பாக போட்டியிடும்
வேட்பாளர்கள் வெற்றி பெற தீவிரமாக பணியாற்றவது என முடிவு எடுக்கப்பட்டது என கூறினார்.

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் தமிழ்நாடு மாநில தலைவராக பிச்சைவேல் நியமனம்..!

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பு என்பது இந்தியா முழுவதும் செயல்பட்டு பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறது.இந்த அமைப்பின் தேசிய இயக்குனராக சர்க்கார் பட்னவி உள்ளார்.

இந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் தமிழ்நாடு மற்றும் மதுரையில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர். பசுமையை காக்கும் பொருட்டு மரக்கன்றுகளையும் பல்வேறு பகுதிகளில் நட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பின் தமிழ்நாடு மாநில தலைவராக மதுரையைச் சேர்ந்த முனைவர் பிச்சைவேல் அவர்களை, அமைப்பின் தேசிய இயக்குனர் சர்க்கார் பட்னவி நியமனம் செய்துள்ளார்.

புதிதாக நியமனம் செய்யப்பட்ட முனைவர் பிச்சைவேலுக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

திருவண்ணாமலையில் போராட்டம் : மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் அறிவிப்பு

திருவண்ணாமலையில் வரும் 12 ஆம் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள அனல் மின் நிலையங்களிலும், மற்றும் விநியோக நிலையங்களிலும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்களை தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி திமுக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருவண்ணாமலை மின்சார விநியோக நிலையங்கள் முன்பு வரும் 12 ஆம் தேதி திங்கட்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES