Sunday , February 23 2025
Breaking News
Home / செய்திகள் (page 61)

செய்திகள்

All News

சாத்தையாறு அணையை தூர்வாரக்கோரி முத்துராமன்ஜி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு.!

மதுரை மாவட்டம் சாத்தையாறு அணையை தூர் வாரி, ஷட்டரை பழுது பார்க்க வேண்டும் எனவும்,
அணைக்கு வரும் நீர் வரத்து கால்வாய்கள்‌ மர்ம‌நபர்கள் அடைத்து வைப்பதை‌ தடுக்க‌ நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர்‌‌ முத்துராமன் ஜி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார்

அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது ‘
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ள சாத்தையாறு அணை மொத்தம் 29 அடி ஆழம் கொண்டது.

இதில் பல வருடங்களாக 10 அடிக்கு மேல் வண்டல் மண் படிந்துள்ளதால் அணையின் கொள்ளளவானது வெறும் 19 அடிக்கு கீழே உள்ளது இந்த அணையை தூர் வாருவதற்கு விவசாயிகள் கடந்த 20 வருடங்களாக அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

மேலும் கடந்த ஏழு வருடமாக அணையின் ஷட்டரில் ஏற்பட்டுள்ள பெரிய ஓட்டையால் கடந்த ஒரு வருடமாக அணையில் நீரை சேமிக்க முடியவில்லை. இதன் காரணமாக கடந்த வருடம் இப்பகுதியில் உள்ள 4000 ஏக்கர். நிலத்தில் விவசாயிகள் நெல் பயிரிட முடியாமல் வேதனைப்படுகின்றனர்.

உடனடியாக ஷட்டருக்கு நிதி ஒதுக்கி அல்லது மாவட்ட ஆட்சியரின் சிறப்பு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி சரி செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்‌.

அதோடு வனப்பகுதியை பாதுகாக்கும் நல்லெண்ணத்துடனும், சாத்தையாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் அதிக மழை பெய்ய வழிவகை செய்யும். வகையிலும் சிறுமலை பகுதியில் சாத்தியார் அணை பாசன விவசாயிகளும், பிஜேபி மதுரை மாவட்ட விவசாய அணி மற்றும் பிற தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து மரக்கன்றுகளை சிறுமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நடுவதற்கு தாங்கள் அனுமதி வழங்க வேண்டும் என்றும்,

சாத்தையாறு அணை பகுதியில் அணையின் கீழே அமைந்துள்ள நான்காயிரம் ஏக்கர் நிலங்களுக்கு சரியான பாதை வசதி இல்லாததால். விளைபொருளை யும். இடுபொருளையும் தலையிலேயே சுமந்து செல்லும் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர் இவர்களி நீண்ட கால கோரிக்கையான அணையில் இருந்து 10 கண்மாய்களுக் செல்லும் வாய்க்காலின் கரையில் ஒரு புறமாக தார் சாலை அமைத் தரும்படியும்

கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் மழையால் சிறுமலையிலிருந்து சாத்தையார் நீர் வரத்து கால்வாய் ஓடைகளில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பல வருடங்களாக விவசாயிகள் நீர் வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுப்பணித்துறைக்கு வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

நீர் வரத்து ஓடைகளில் வரும் தண்ணீர் அடைக்கப்பட்டு சாத்தையாறு அணைக்கு தண்ணீர் வருவதில்லை.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைக்கறை கோவில் அருகில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி அணைக்கு தண்ணீர் வர வழிவகை செய்ததன் பலனாக மூன்றே நாளில் அணை கால் பங்கு கொள்ளளவை எட்டியது.

இந்த நிலையில் மீண்டும் வேண்டுமென்றே அடைக்கப்பட்டு, தண்ணீர் எதற்க்கும் பயன்படாமல் பாசன வயல்களே இல்லாத காட்டு நாயக்கன்பட்டி கணமாய்க்கு எடுத்துச்செல்லப்படுகிறது. இதனால் விவசாயிகள் தினமும் மேலே சென்று அடைப்பை எடுத்து வருகிறார்கள்

மொத்தம் ஐந்து வரத்து கால்வாய் ஓடைகள் சாத்தையாறு அணைக்கு உள்ளன. ஐந்து வரத்து கால்வாய்களும் அடைபட்டுள்ளது.

சாத்தையாறு அணையின் அனைத்து (மொத்தம் ஆறு) வரத்து கால்வாய்களை எப்போதும் தண்ணீர் வரும் வகையில் மர்ம நபர்கள் அடைக்காமல் இருக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறும்
சாத்தையாறு அணை மற்றும் முல்லை பெரியார் கால்வாய் இணைப்பு திட்டம் செயல்படுத்த கோரியும்

சாத்தையாறு அணைக்கு வைகை பேறணையிலிருந்து குழாய் (பைப்லைன்) மூலம் தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை செயல்படுத்தி பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைக்கிணங்க அணையின் நீர் ஆதாரத்தை மேம்படுத்த வேண்டும் என அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டி மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் மற்றும் அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பாக 1008 தேங்காய் உடைத்து வழிபாடு

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டி மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் மற்றும் அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பாக 1008 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

இந்தியாவில் நடந்து வரும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று, உலகக் கோப்பையைக் கைப்பற்ற மதுரை மேலமாசி வீதி – வடக்கு மாசி சந்திப்பில் உள்ள நேரு ஆலால சுந்தர விநாயகர் ஆலயத்தில் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் மற்றும் அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பாக 1008 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

தொடர்ந்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களின் போட்டோக்கள் மற்றும் உலக கோப்பை போட்டோ இடம் பெற்ற பெரிய பதாகையை வைத்து அர்ச்சனை செய்து, மகா தீபாராதனை நடைபெற்றது.

கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், கே.எல்.ராகுல், ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட அனைத்து வீரர்களின் பெயர்களை தனித்தனியாக சொல்லி சிறப்பு அர்ச்சனையும் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து ‘ஆல் த பெஸ்ட்’ இந்தியா என்ற கோஷம்‌ முழங்க 1008 தேங்காய் உடைத்து சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் மற்றும் ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க பட்டயத் தலைவர் நெல்லை பாலு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் முருகானந்த‌பாண்டி, அத்வி மீடியா ஆதவன், விநாயகா இம்பெக்ஸ் மகேந்திரன், சுப்பிரமணியன், ஆர்.குமார், திருநகர் ரோட்டரி சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நியூசிலாந்து அணியுடன் ஆடிய அரையிறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டி, ஏற்கனவே மதுரை எஸ்.எஸ். காலனியில் உள்ள காஞ்சி மகா பெரியவர் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் விவசாயிகள் கலந்துரையாடல்

மதுரை, நவம்பர்.17-

மதுரையில் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபெல் மூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில் :-

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று உடனுக்குடன் பதிவேற்று தரும் அதிகாரிகளுக்கு முதலில் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். கிராமப்புற கூட்டுறவு வங்கிகளில் உள்ள இ.சேவை மையங்களுக்கு
விவசாயிகள் சிட்டா, பட்டா சம்பந்தமாக சென்றால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் உரிய மரியாதை கொடுப்பதில்லை.


இதனால் விவசாயிகள் நகரங்களில் உள்ள இ.சேவை மையங்களை அணுகி வருகின்றனர். எனவே அவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்
எனவே விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதற்காக கறவை மாடுகள் வாங்குவதற்கு அரசு கூட்டுறவு வங்கிகளின் மூலம் வட்டியில்லா கடன் வழங்குகிறது. இந்த வட்டியில்லா கடன் பெறுபவர்கள் பசு மாடு வாங்க வேண்டும் என கடன் பெற்று விட்டு பசு மாடுகளை வாங்காமல் வேறு பணிகளுக்கு அந்த தொகையை பயன்படுத்துகின்றனர். எனவே கடன் வழங்கும் அதிகாரிகள் கடன் வழங்குவதோடு நமது பணி முடிந்து விட்டது என நினைக்காமல் கடன் பெற்றவர்கள் பசு மாடு வாங்கியுள்ளனரா.? அதை முறையாக பராமரிக்கின்றார்களா என கண்காணிக்க வேண்டும்.

மேலும் கூட்டுறவு துறை விவசாயத்திற்காக வாங்கிய டிராக்டர்கள் மற்றும் கலப்பைகள் பழுதாகி உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். தனியார் டிராக்டர்களுக்கு அதிக வாடகை கொடுத்து வருகின்றனர். டிராக்டர் பழுதை சரி செய்து தர வேண்டும். இல்லையென்றால் புதிதாக வாங்க வேண்டும்.என பேசினார்.

திருச்சியில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பாக தேசிய பத்திரிகையாளர் தின விழா

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் திருச்சியில் தேசிய பத்திரிகையாளர் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்விற்கு மாநிலத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் சத்யநாராயணன் வரவேற்று பேசினார். அரசு தலைமை கொறடா கோவி.செழியன் பங்கேற்று பத்திரிகையாளர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார்.

விழாவில் மாநிலத்தலைவர் சரவணனுக்கு மதுரை மாவட்ட தலைவர் கணேஷ் மற்றும் செயலாளர் ரவிச்சந்திரபாண்டியன், இணைச்செயலாளர் பாண்டியன், துணைத்தலைவர் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ், கார்த்திக் உள்பட ஏராளமான நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இவ்விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் செய்தியாளர்கள் பங்கேற்றனர். முடிவில் பொருளாளர் காமேஷ் கண்ணன் நன்றி கூறினார்.

மதுரையில் பெருந்தலைவர்,நடிகர்திலகம் அறக்கட்டளை சார்பாக கார்த்தி சிதம்பரம் பிறந்த நாள் விழா.!

பெருந்தலைவர்,நடிகர்திலகம் அறக்கட்டளை சார்பாக கார்த்தி சிதம்பரம் பிறந்த நாள் விழா

மதுரை, நவம்பர்.16-

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு,மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள பெருந்தலைவர், நடிகர்திலகம் அறக்கட்டளை அலுவலகத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் குருபிரசாத், லெனின், முத்துக்குமார்,கனகராஜ் ஆகியோர் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

முன்னதாக
அருள்மிகு காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கே.ஆர்.சுரேஷ் பாபு, வாஞ்சிநாதன், ராஜீவ்காந்தி, பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் முத்துக்குமார், மீர்பாஷா, மாவட்ட பொதுச் செயலாளர் செல்வராஜ், மூவேந்திரன்,போஸ்,நாகேந்திரன் சஞ்சய் கணபதி மற்றும் வார்டு நிர்வாகிகள் மொக்கச்சாமி, சுப்பு, பாலமுருகன், சிவாஜி மன்றம் மணிவேல் மற்றும் சரவணராஜ், பகுதி தலைவர்கள் பன்னீர்செல்வம், சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்: காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்: காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (நவ.14) காலை ஒருகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகளில் இன்று நிலவக்கூடும்.

இதற்கிடையே, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர தமிழகம், புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் நாளை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் 27 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

முதல்வர் ஆய்வு: இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள மாநிலஅவசரகால செயல்பாட்டு மையத்தில்முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலைஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்துகடலூர், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்களை காணொலி வாயிலாக தொடர்பு கொண்ட முதல்வர், கனமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரனையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கனமழை குறித்து கேட்டார்.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு, பொறுப்புஅமைச்சர்கள், சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகள் உடனடியாக சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், முதல்வரின் செயலர் எம்.முருகானந்தம், பேரிடர் மேலாண்மை இயக்குனர் சி.அ.ராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

சம்பா பயிர்கள் மூழ்கின: நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை இடைவிடாமல் கனமழை பெய்தது. வேளாங்கண்ணியில் அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த, 25 நாட்களே ஆன இளம் சம்பா பயிர்களில் 30 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின.

இதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை தொடர்ந்து கனமழை பெய்தது. சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள புங்கனூர், மருவத்தூர், எடக்குடி, வைத்தீஸ்வரன் கோவில் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளைநிலங்களில் நீர் தேங்கியுள்ளது. இதனால், 8 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் மூழ்கின. மழைநீரை வடிய வைக்கும்பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரியில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி, இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கன்னியாகுமரியில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி, இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி, இருசக்கர வாகன பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரியில் தொடங்கி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று சேலத்தில் நிறைவடையும். பிரசார பேரணியில் 188 இருசக்கர வாகனங்கள் பங்கேற்றுள்ளனர்.

திராவிட மாடல் ‘திமுக’ அரசால் சிறப்பிக்கப்பட்ட இடதுசாரி தலைவர் சங்கரய்யா-முதல் தகைசால் தமிழர் விருது!

திராவிட மாடல் 'திமுக' அரசால் சிறப்பிக்கப்பட்ட இடதுசாரி தலைவர் சங்கரய்யா-முதல் தகைசால் தமிழர் விருது!

சென்னை: இந்தியாவின் முதுபெரும் இடதுசாரித் தலைவரான இன்று மறைந்த சங்கரய்யாவுக்கு (வயது 102) தமிழ்நாட்டில் ஆளும் திராவிட மாடல் திமுக அரசு தமது முதலாவது தகைசால் தமிழர் விருது வழங்கி பெருமைப்படுத்தியது.

இந்தியாவின் விடுதலைக்காக சிறைவாசம் அனுபவித்தவர் சங்கரய்யா. 95 வயது வரை தமது போராட்ட குணத்தை இடைவிடாது கடைபிடித்தவர். 95 வயதில் ஆணவக் கொலைகளுக்கு எதிரான போராட்ட களத்தில் நின்றவர் சங்கரயா. இன்று வயது முதுமையின் காரணமாக 102 வயதில் காலமானார். தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பெருந்தலைவர் ‘தோழர்’ சங்கரய்யாவின் மரணம் மிகப் பெரும் பேரிழப்பு.

இடதுசாரித் தலைவராக திகழ்ந்து ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக சிறைவாசம் அனுபவித்தவர் சங்கரய்யா. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய நிறுவனத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் சங்கரய்யா. தமிழ்நாட்டில் 2021-ல் திமுக அரசு மீண்டும் அமைந்த போது, தமிழ்நாட்டுக்கும் தமிழினத்துக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை சிறப்பிக்க ‘தகைசால் தமிழர் விருது’ உருவாக்கப்பட்டது. இந்த தகைசால் தமிழர் விருது முதன் முதலாக முதுபெரும் இடதுசாரித் தலைவர் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது.

தகைசால் தமிழர் விருதை சங்கரய்யாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார். அப்போது விருதுக்கான ரூ10 லட்சம் காசோலையும் சங்கரய்யாவிடம் வழங்கப்பட்டது. ஆனால் விருதாக தாம் பெற்ற ரூ10 லட்சம் காசோலையை தமிழ்நாடு அரசின் நிவாரண நிதி- கொரானா நிவாரண நிதிக்கே திரும்பி வழங்கி ‘தகைசால்’ தமிழர் என்ற விருதுக்கும் பெருமை சேர்த்தார் தியாகி சங்கரய்யா.

இவர்தான் “தகைசால் தமிழர்..” விருது பணம் 10 லட்சத்தை அப்படியே கொரோனா நிவாரணத்திற்கு அளித்த சங்கரய்யா

சங்கரய்யாவின் 102வது பிறந்த நாளின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் “பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ‘தகைசால் தமிழர்’ சங்கரய்யா அவர்களின் 102-ஆவது பிறந்தநாள்! பொதுவாழ்விலும் பொதுவுடைமை இலட்சியங்களைக் கடைப்பிடிப்பதிலும் நம் எல்லோருக்கும் வழிகாட்டியாக விளங்கும் அவர் நலமுடன் வாழிய பல்லாண்டு என வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆம் இன்றைய இளம் தலைமுறைக்கு பொதுவாழ்வு என்றால் என்ன என்பதற்கு மாபெரும் தீரமிக்க போராளி சங்கரய்யாவின் வாழ்வும் சரித்திரமும் என்றென்றும் பாடமாக இருக்கும் என்பது மிகையல்ல!

பெருந்தலைவர் ‘தோழர்’ சங்கரய்யாவுக்கு ‘செவ்வணக்கம்’!

காஷ்மீர் இந்தியாவில் இருப்பதற்கு காரணமானவர் ஜவஹர்லால் நேரு: கே.எஸ்.அழகிரி பேட்டி

காஷ்மீர் இந்தியாவில் இருப்பதற்கு காரணமானவர் ஜவஹர்லால் நேரு: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: ஜவஹர்லால் நேருவின் 135வது பிறந்த நாளையொட்டி, கிண்டி கத்திபாராவில் உள்ள அவரது சிலைக்கு அருகே அலங்கரிக்கப்பட்ட படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று நடந்தது.

இதில், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, நிர்வாகிகள் கோபண்ணா, விஜய் வசந்த் எம்பி, அசன் மவுலானா எம்எல்ஏ உட்பட பலர் கலந்து கொண்டனர். நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவை மறு உருவாக்கம் செய்தவர், இந்தியாவை உலகத்தில் வல்லரசாக மாற்றியவர் ஜவஹர்லால் நேரு. இன்று, காஷ்மீர் இந்தியாவில் இருக்கிறது என்றால் அதற்கு காரணமாக இருந்தவர் நேரு. ஓபிசி சமூகம் வளமாக வாழ்கிறது என்று சொன்னால் அதற்கு காரணம் நேரு. அவரை போன்ற ஒரு சிற்பி இந்தியாவில் யாரும் இருக்க முடியாது. கோயில்களில் அனைவரும் தரிசிக்கலாம். ஒடுக்கப்பட்ட மக்களை கோயிலில் அனுமதிக்காத கூட்டம் பாஜ கூட்டம். இவ்வாறு அவர் கூறினார்.

பாரதி நர்சரி & பிரைமரி பள்ளி சார்பில் குழந்தைகள் தினம் பள்ளப்பட்டியில்…

இமாம் அபு ஹனிபா டிரஸ்ட் நடத்தும் பாரதி நர்சரி & பிரைமரி பள்ளி சார்பில், இன்று குழந்தைகள் தினம் (பண்டிட் ஜவஹர்லால் நேரு) பிறந்த நாள் குழந்தைகள் தினம் முறையாக அனுசரிக்கப்பட்டது.

மாவட்ட அரசு தலைமை காஜி சிராஜுதீன் ரஷாதி ஹஜ்ரத் அவர்கள் தலைமை தாங்க, பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலை வகிக்க, நிகழ்ச்சி இனிமையாக துவங்கியது. அரவக்குறிச்சி ஆர்டிஓ தோழர் குண்டுமணி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

காங்கிரஸ் பேரியக்கத்தின் ஐடி விங் மாவட்ட பொறுப்பாளர் தோழர் அரவக்குறிச்சி பாலமுருகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். ரஹ்மானிய பள்ளிவாசல் தலைமை இமாம் ஆஷிக் இலாகி நூரானி ஹஸரத் அவர்கள் வாழ்த்துரை வழங்க, நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.

மீண்டும் அல்ஹம்துலில்லாஹ் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இணைந்து பணியாற்றிய பள்ளப்பட்டி சுதந்திர தியாகி மணிமொழி மெளலானா அவர்களின் வம்சத்தில் நான்காவது தலைமுறையை சார்ந்த சஜாத் அஹமத் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பெற்றோர்கள் மிக உற்சாகமாக கலந்து கொண்டார்கள். மாணவர் செல்வங்கள் தங்கள் படைப்புகள் அனைத்தையும் திறம்பட காட்டியிருந்தார்கள்.

வந்தவர்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் அறிவியல் கண்காட்சி அமைந்திருந்தது. பெரும் பெரும் கல்லூரிகள் நடைபெறக்கூடிய அளவிற்கான தயாரிப்புகளை, பாரதி நர்சரி & பிரைமரி ஆரம்பப் பள்ளி மாணவர்கள் அறிவுப்பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும், படைப்புகள் அனைத்தும் அசத்தலாக இருந்ததை அனைவரும் சுட்டிக்காட்டி மகிழ்ந்தனர்.

இறுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் ஈருலக வெற்றிக்காகவும் சிராஜுதீன் ரஷாதி (அரசு தலைமை காஜி) அவர்கள் துவா செய்து நிகழ்ச்சி இனிதே நிறைவேற்றது. ஆலிம் அ ரிபாய்தின் ஹசனி டிரஸ்டி: இமாம் ஆபு ஹனிபா (ரஹ்) டிரஸ்ட் பள்ளப்பட்டி கரூர் மாவட்டம்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES