Monday , June 9 2025
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player

மண் காப்போம் இயக்கம் சார்பாக மதுரையில் பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா : நவ.5 ஆம் தேதி அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைக்கிறார்.

மண் காப்போம் இயக்கம் சார்பில் மதுரையில் பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்வை பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைக்கிறார் ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா மதுரையில் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இத்திருவிழாவை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு. மூர்த்தி அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். …

Read More »

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பாக மாலை அணிவித்து மரியாதை

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில தலைவர் முத்துக்குமார் ஆணைக்கிணங்க, மதுரை மண்டல தலைவர் டி.எஸ் மைக்கேல் ராஜ் வழிகாட்டுதலின்படிவடக்கு மண்டல தலைவர் சாமுவேல் (எ) சரவணன் தலைமையில்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் துணைத் தலைவர் கார்மேகம்,பொருளாளர் கணேசன், துணைச் செயலாளர் சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Read More »

மதுரை வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் ஆதிசங்கர் தலைமையில் வரவேற்பு.!

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக வந்த மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு, பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் எஸ்.ஆதிசங்கர் மற்றும் செல்லூர் மண்டல் தலைவி மருதாயி ஆகியோர் ஏற்பாட்டில் 200 க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் வந்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர் வினோத்குமார்,மாவட்ட செயலாளர் தனலட்சுமி, மாவட்ட துணைத்தலைவர் சௌந்தரராஜன், …

Read More »

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் மாலை அணிவித்து மரியாதை.

பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் மாலை அணிவித்து மரியாதை. இராமநாதபுரம்,அக்.30- தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாநில செயலாளர் சுமன்,மாநில மகளிரணி தலைவி விஜி, மதுரை மாவட்ட இளைஞரணி நிர்மல்குமார், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வசவபுரம் …

Read More »

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுரையில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு பெருந்தலைவர், நடிகர் திலகம் அறக்கட்டளை சார்பாக மாலை அணிவித்து மரியாதை

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு பெருந்தலைவர், நடிகர் திலகம் அறக்கட்டளை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமாறன்,கே.ஆர் சுரேஷ்பாபு,பூக்கடை கண்ணன், வீரவாஞ்சிநாதன், பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் முத்துக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் செல்வராஜ் மற்றும் மூவேந்தரன்,போஸ் பவர் சிங், பாலமுருகன்,குமரகுரு, மீனாட்சி சுந்தரம், சக்திவேல்,குரு பிரசாத் லெனின், மகளிரணி பஞ்சவர்ணம் …

Read More »

மதுரையில் மக்கள் நீதி மய்யம் தெற்கு தொகுதி நகர செயலாளர் எல்லன் பாண்டி பிறந்த நாள் விழா : அண்ணாநகர் முத்துராமன் வாழ்த்து.!

மதுரையில் மக்கள் நீதி மய்யம் தெற்கு தொகுதி நகர செயலாளர் எல்லன் பாண்டி பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் நீதி மய்யம் நற்பணி இயக்க நிர்வாகி சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் கலந்து கொண்டு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Read More »

திருப்பரங்குன்றத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பால்,பழம்,முட்டை,ரொட்டி வழங்கும் நிகழ்ச்சி

மதுரை திருப்பரங்குன்றத்தில் விஜய் மக்கள் இயக்கம் வடக்கு மாவட்ட தலைவர் விஜய் அன்பன் கல்லணை அவர்களின் ஆலோசனைப்படி, மாணவரணி தலைவர் UPM.ஆனந்த் தலைமையில், தெற்கு நகர மாணவரணி தலைமை நகர தலைவர் விஜய் செல்வா மற்றும் நகர துணைத் தலைவர் முத்துப்பாண்டி ஆகியோர் ஏற்பாட்டில் 15-வது வாரம் குழந்தைகளுக்கு விலையில்லா ரொட்டி,பால்,பழம், முட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் Mr.பிளாக் விஜய் பாரதி,கனகவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

Read More »

ஜெகம் டிரஸ்ட்டில் ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மதுரையில் வேங்கடாச்சலம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மதுரை,அக்.29- மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள ஜெகம் டிரஸ்ட் அலுவலகத்தில் ஏழை எளிய முதியோர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இன்று மெஜூரா கோட்ஸில் பணிபுரிந்த வெங்கடாசலம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது துணைவியார் வசந்தா மற்றும் ஆவரது மகன் இந்து …

Read More »

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக நடந்த இலவச பொது மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்

மதுரை,அக்.29- மதுரை மீனாம்பாள்புரத்தில் உள்ள ராஜாஜி நடுநிலைப்பள்ளியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். இந்நிகழ்விற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் மோகன்குமார் மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் மேத்தா (எ) ரபீக் ராஜா ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஜலால் முஹம்மது வரவேற்று பேசினார் …

Read More »

மருதுபாண்டியர்களின் சிலைக்கு அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை சார்பாக மாலை அணிவித்து மரியாதை

மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 222-வது குருபூஜையை முன்னிட்டு மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது திருவுருவச் சிலைக்கு, அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை மதுரை மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் மற்றும் மாநில இளைஞரணி செயலாளர் எம்.டி.ராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் அர்ச்சகர் பிரிவு மாவட்ட செயலாளர் ராமர் மற்றும் முத்துக்குமார், சங்குமணி, முத்தையா, நீதிராஜன், அஜீத்குமார் உள்ளனர்.

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES