Friday , December 19 2025
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player
NKBB Technologies

நேரு பிறந்தநாள் -டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி மரியாதை.

டெல்லி: நேரு பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி மரியாதை செலுத்தினார். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் பிறந்தார் ஜவஹர்லால் நேரு. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்களித்த அவர் இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து …

Read More »

மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் கால்வாய், மேலூர் கால்வாயில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட கோரி செல்லம்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி மற்றும் எம்.பி.ராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Read More »

இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் மதுரை அண்ணாநகர் ரமேஷ் ஏஜென்ஸி இணைந்து நடத்திய கட்டிட கலைஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

மதுரை வண்டியூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் அண்ணாநகர் ரமேஷ் ஏஜென்ஸி இணைந்து நடத்திய கட்டிட கலைஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்தவர்களை ஏஜென்ஸி உரிமையாளர் ரமேஷ் வரவேற்று பேசினார். இதில் தெற்கு மண்டல அதிகாரி வெங்கடேசன், மதுரை மண்டல அதிகாரி மதுசூதனன், தெற்கு விற்பனை அதிகாரி முத்துப்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு சங்கர் சிமெண்ட்டின் சிறப்புகள் குறித்து கட்டிட கலைஞர்களுக்கு …

Read More »

அமைச்சர் பி.மூர்த்தி அவர்களுக்கு திமுக நிர்வாகிகள் ஜான்,கவியரசு, மகாலிங்கம் ஆகியோர் தீபாவளி வாழ்த்துக்களை கூறினர்

தீபாவளி திருநாளை முன்னிட்டு மதுரையில் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்களுக்கு சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் எஸ்.எம்.ஜான், தொழிலாளர் அணி வடக்கு மாவட்ட அமைப்பாளர் கா.கவியரசு, துணை அமைப்பாளர் தொழிலதிபர் வி.மகாலிங்கம் ஆகியோர் சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களை கூறினர். இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Read More »

ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக புத்தாடை மற்றும் இனிப்புகளை முத்துராமன் ஜி வழங்கினார்.!

ஏழை எளியோர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகளை முத்துராமன் ஜி வழங்கினார் மதுரை, நவம்பர்.12- மதுரை பெத்தானியாபுரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக ஏழை எளிய முதியோர்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேட்டிகள், சேலைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காஞ்சிபுரம் சிலம்பாட்ட கழக தலைவரும், அகில இந்திய சிலம்பாட்ட கழக முன்னாள் பொதுச்செயலாளருமான முத்துராமன் ஜி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவிற்கு …

Read More »

தென்மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்க தலைவர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் பிறந்த நாள் விழா.!

தென்மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்க தலைவர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ஆளுயர மாலை அணிவித்தும், சால்வை வழங்கியும் ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவ்விழாவில்சங்க பொதுச்செயலாளர் மாஸ்.மணி நிர்வாகிகள் டாக்டர் சின்னச்சாமி, விஜயராஜா, இன்சூரன்ஸ் ராஜா பாம்சி.கண்ணன், மன்னாதி மன்னன், முருகேசன், கவிஞர்.மணிகண்டன்,வீரமணி பிரபு, ரமேஷ்காந்தி, ஆனந்தமேரி, ராஜேந்திரன், இளமி.நாச்சியம்மாள், மலர்விழி, திவ்யபாரதி, முத்துமணி, சுமதி, சிவா, திருமாறன், பெயிண்டர் மணி, அழகுசுந்தரம் உள்பட பலர் …

Read More »

தனது வருமானத்தின் ஒரு பகுதியை சமூக சேவைக்காகவே ஒதுக்கி பல்வேறு உதவிகளை செய்து வரும் மதுரை அண்ணாநகர் முத்துராமன்.!

மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் பகுதியை சேர்ந்தவர் சமூகசேவகர் முத்துராமன். இவர் மக்கள் நீதி மையம் வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியாகவும் உள்ளார். பழைய வீடுகளை இடித்து டிராக்டர் மூலமாக அப்புறப்படுத்தி தரும் பணியில் உள்ள இவர் தனது வருமானத்தின் ஒரு பகுதியை சமூக சேவைக்காகவே ஒதுக்கி வருகிறார்.மிகவும் கஷ்டப்படும் நிலையில் உள்ள 13 பேருக்கு இலவச திருமணம் செய்து வைத்துள்ளார். கல்லூரியில் சேர வழி இல்லாமல் மிகவும் கஷ்டப்படும் …

Read More »

அண்ணாமலை என்ன கவர்மென்ட் சர்வண்ட்டா! எதுக்கு இசட் பாதுகாப்பு? 3 கோடி செலவாகுது! விளாசிய ஜோதிமணி

கரூர்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சொத்து மதிப்பை வெளியிடுவேன் என கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். கரூரில் அவர் நேற்று பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில் அண்ணாமலை நான் பெண் என்பதால் பிழைத்துக் கொண்டு போகட்டும் என அவர் விட்டு வைத்திருப்பதாக சொல்லியுள்ளார். இதை சொல்ல அண்ணாமலை யார் என நான் கேட்கிறேன். அண்ணாமலையால் என்னை என்ன செய்ய முடியும். அமலாக்கத் துறையை எதிர்க்கட்சிகள் ஆளும் …

Read More »

பெட்கிராட் கூட்டரங்கில் சணல் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நிறைவு விழா

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அசஞ்சர் நிறுவனத்தின் சமூக நிதி பங்களிப்புடன் பெட்கிராட் நிறுவனத்துடன் இணைந்து மதுரை எஸ்.எஸ் காலனியில் உள்ள பெட்கிராட் கூட்டரங்கில் சணல் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி கடந்த (25/09/2023) முதல் ஒரு மாத காலமாக நடைபெற்றது. இந்த பயிற்சியில் 50 பெண்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு 17 வகையான சணல் பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் சொந்தமாக தொழில் …

Read More »

மதுரையில் முத்தூட் பைனான்ஸ் சி.எஸ்.ஆர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் சேகரிப்பு மையத்தை மேயர் இந்திராணி பொன்வசந்த் தொடங்கி வைத்தார்.

மதுரை அன்சாரி நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவக் கழிவுகள் சேகரிப்பு மையத்தை மேயர் இந்திராணி பொன்வசந்த் தொடங்கி வைத்தார். உயிரியல் கழிவு மேலாண்மை விதிகள் 2016-இன்படி அனைத்து சுகாதார மையங்களிலும் உயிரியல் கழிவுகள் சேமிப்பு அமைத்துப் பயன்படுத்த வேண் டும். சுகாதார மையங்களில் உற் பத்தியாகும் உயிரியல் மருத்துவக் கழிவுகளைச் சேமித்து வைத்து 48 மணி நேரத்துக்குள் அதை அகற்றும் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். உற்பத்தியாகும் …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES